படித்து ரசித்தது …புது கவிதை சில …

இயற்கையின்பங்கு

நீ போட்டு முடித்துவிட்டுபோன
கோலத்தை
மரத்திலிருந்த பூக்களை உதிர்த்து
தன்பங்குக்கு அழகாக்குகிறது
இயற்கை
-சிவபாரதி, திருவாரூர்.

தூரமில்லை

தகவல் தொடர்பில் சுருங்கிவிட்ட உலகில்
அருகருகே உள்ளவர்களோடு
செல்போசியில் பேசுகையில்
தூரமாய் போய்விடுகின்றன.
பக்கத்து பக்கத்து வீடுகள்
-விகடபாரதி, வடபாதிமங்கலம்

முரண்

தீவிர பாதுகாப்பு,
குண்டு வெடித்தபின்
சமாதான கூட்டம் முடிந்தது அடிதடியுடன்
கொட்டும் மழையில்
மந்திரி திறந்து வைத்தார்
தண்ணீர்ப் பந்தல்
-ஆர்.சிவானந்தம், கோவில்பட்டி

தேடல்

தினம், தினம் கடலைத்தேடி
நீந்தி அலைகிறது
கண்ணாடி தொட்டியில் மீன்.
-சோலை அய்யப்பன், சோழசிராமணி.

வெண்ணிலா

மின்கட்டணம்
கட்ட வேண்டாத
உலக பொதுவிளக்கு
இதற்கு மாதம் ஒருநாள்
விடுப்பு.

-ந.வெற்றிவேல், சாாத்தான்குளம்  

Source::::Kalki … Tamil weekly

Natarajan

One thought on “படித்து ரசித்தது …புது கவிதை சில …

Leave a comment