புதிர்கன்னி!
மீட்டப்படாத வீணையாக மீளாத்துயரில் நான்
விவாக வயலில் நடவு செய்யப்படாத பயிராக நான்
முற்றியும், அறுவடைக்கு ஆளில்லாமல் நான்
முழுமை பெறாத வாசல் கோலமாய் நான்
யாரும் கேட்காத இசைத்தட்டாய் நான்
கண்ணன் ராசி இல்லாத கன்னியாக நான்
பொருளாதார சுமையை சுமக்கும் கழுதையாக நான்
யாரும் வாசிக்காத கவிதையாக நான்
திருமணச் சந்தையிலே விலைபோகாமல் நான்
ஆம்… நான் முதிர்கன்னி… வாழ்க்கை பயணத்தில் புதிர்கன்னி!
— பி.ராஜ்குமார், நெய்வேலி. in DINA MALAR… SUNDAY VARAMALAR…
Natarajan