Message For the Day…Mother Earth is Watching You !!!!

Have you heard the story of the rabbit that borrowed from Mother Earth four paisa (pence)? The rabbit thought to itself, “If I run away as far as I can, from the place I received the loan, I will be free from the obligation”. So one day, the rabbit ran as fast as its legs could carry it. After a while, it sat down in great relief thinking, “Now no one will ask me to repay.” The rabbit was shocked, for at that very moment, it heard from the ground beneath, “Mother Earth is right under your feet! You cannot escape from me, however fast you run!” So too, you cannot run away from Divinity. Wherever you may go seeking refuge, the Lord demands good conduct, good habits, good thoughts and good company! Make use of this opportunity, accept this noble advice, select good company and strive sincerely to reach your goal!

source:::: Excerpts from Divine Discourse of Swami Satya Sai….

Natarajan

அறநெறி சங்கரர் …மஹா பெரியவா !!!

source::::input from one of my friends….

Natarajan

ஸமார்த்த ராமதாஸின் புனித நினைவு கமழும் ஸதாரா. அப்பகுதிக்கு இயல்பான ஏகாந்த அமைதி. வைகறையின் சாந்தத்தில் இணைந்து தோய்ந்த அதிகாலை நாலரை மணி. ஸ்ரீ காஞ்சி முனிவரின் குரல் கேட்கிறது. முதல் நாளெல்லாம் பெரியவர் மௌனமானதால் இன்று தெய்வத்தின் குரலைக் கூடுதல் ஆவலுடன் அந்த வேளையிலும் அங்கே குழுமியிருந்தவர்கள் கேட்கிறார்கள்.

” ஆமாம், வாய் மௌனமானாலும் ராத்திரி மூக்குக்கு உப்புமா வாஸனை எட்டித்து! நான் சொல்ல வேண்
டாம்னு பார்த்தாலும் என்னவோ பாவம், இங்கே இருக்கிற ரெண்டு மூணு பேருக்கு ஏற்படற சிரமத்தை எப்படி சொல்லாமயிருக்கிறதா? சாதுர்மாஸ்யம்னு நான் வந்து ஒக்காந்துட்டேன். இன்னம் ரெண்டு மாஸத்துக்கு இந்த இடத்தை விட்டுப் பொறப்படறத்துக்கு இல்லை. ஆனா இது என்ன டவுனா, பட்டணமா? இங்கே பார்த்துப் பார்த்துப் பண்ணறத்துக்கு ஜனக்கட்டு இருக்கா? இந்தச் சின்ன விஷயம் என்னைப் பாக்க வரவாளுக்குத் தெரிய வேண்டாமா? ப்ரியத்தினாலே, பக்தியினாலேதான் எங்கெங்கிருந்தோ எத்தனையோ கஷ்டப் பட்டுண்டு வரேள், வாஸ்தவம்தான். ஆனாலும் பிறத்தியாருக்கு ச்ரமம் தரலாமா? என்னை ஏதோ ஒரு வேளை பாத்துட்டு அப்படியே நகந்துண்டே இருக்க வேண்டியதுதானே? போஜனம், டிஃபன், பலகாரம்னு வந்தவாளுக்குப் பண்ணி வைக்க இந்தச் சின்ன ஊர்லே ஏது வசதி? இங்கே இருக்கப்பட்ட ரெண்டு மூணு பேர்தானே கஷ்டத்தைப் பாக்காம எல்லாம் பண்ணவேண்டியிருக்கும்? அவா நல்ல மனஸோட, ஒண்ணும் மொணமொணக்காமதான் பண்றான்னாலும், என்னைப் பராமரிக்கிறதே கஷ்டம். அது போறாம, என்னைப் பாக்க வரவா, பார்க்க வரவாளைப் பார்க்க வரவான்னு பல பேருக்கு அவாளை சுச்ருக்ஷை பண்ண வைக்கிறது ஸரியா?”

உப்புமா தாளிப்பில் சற்றுக் கார நெடி கூடுதலானது போல் பெரியவரின் குரல் த்வனித்தாலும், அன்பு என்னும் சுத்த நெய்யிலாக்கும் அது வறுபடுகிறது என்பதும் அக மூக்குக்குத் தெரிகிறது. பணிவிடையாளரிடம் எசமானரின் பரிவன்பு!

“எங்கே அந்த ‘பெல்காம் —-இருக்கானா?” என்கிறது நெய்–மிளகாய்க் குரல், மிளகாயை விட்டு விட்டு!

“இதோ இருக்கேன்”—என்று தண்டம் ஸமர்ப்பிக்கிறார் ‘பெல்காம்’…..

“நான் இந்த மஹாராஷ்ட்ராவிலே சுத்த ஆரம்பிச்சதிலேருந்து நீ எத்தனை தடவை என்னைப் பார்க்க ஓடி வந்திருப்பே?”

மிளகாயே அறியாத சுத்த நெய் தன் உள்ளே வர்ஷிப்பதாக உணர்ந்த ‘பெல்காம்’—தான் அடிக்கடி பெரியவாள் தரிசனத்துக்கு வந்திருப்பதை இன்று அவரே எல்லோருக்கும் தெரியப்படுத்துவதில் உற்ற பெருமிதம், அவர் ‘இத்தனாம் தடவை’ என்று சொன்ன குரலிலே பிரதிபலிக்கிறது.

“ஆமாம், உன்னாலே எப்படி இத்தனை தடவை வர முடியறது?”

“எனக்கு ரெயில்வே உத்யோகமொல்லியோ? பாஸ்லே வரேன்”

“ஓஹோ! ஸரி! உன் பாசை இங்கே வை” என்று தமக்கு முன்

தரையைத் தட்டிக் காட்டுகிறார் ஸ்ரீ பெரியவர்.

பெரியவாள் பணித்த வண்ணமே அந்த பக்தர் செய்கிறார்.

இருள் பிரியாத அந்த இளம் பொழுதிலே பெரியவரின் திருக்கர அழுத்தலில் பக்கத்தில் இருந்த டார்ச் பாஸ் மீது ஒளியைப் பாய்ச்சுகிறது!.

பெரியவர் பாஸை உன்னிப்பாக கவனிக்கிறார்; பேசத் தொடங்குகிறார். நெய்யிலே மறுபடி மிளகாய் வறுபடுகிறது. ” பாஸ்லே எக்ஸாமினர் கையெழுத்தே ஆகல்லே. எனக்குத் தெரியும், ரயில்வேக்காராளுக்குப் பாஸ் இருந்தாலும் இத்தனை ட்ரிப்தான் போகலாம்னு கணக்கு உண்டுன்னு இதிலேயானா நீ இத்தனை தடவை வந்ததுக்குக் கணக்கா ஒரு கையெழுத்துக் கூட காணும்! நீ என்ன பண்ணணும் தெரியுமா? முதல் காரியமா இந்தப் பாஸைக் கொண்டு போய் ‘சரண்டர்’ பண்ணணும். இனிமேல் உன் கைக்காசைச் செலவழிச்சுண்டு வர முடியும்னாலே என்னைப் பார்க்க வரணும்.”

ஹரஹர சங்கரர் அறநெறிச் சங்கரராக ஜ்வாலை விட்டு அனைவரையும் பிரமிக்கச் செய்கிறார்.

இந்த அயனான சந்தர்ப்பத்திலே சென்னையைச் சேர்ந்த சிஷ்யப் பிரமுகர் ஒருவர் ஆயிரம் ரூபாய் காணிக்கை பெரியவாளுக்குச் செலுத்த முன்வருகிறார்.

இதற்குப் பதினோறாண்டுகளுக் முன் முனிவர் ஸ்ரீமடத்தை விட்டு வெளிவந்த அன்றிலிருந்து பணக் காணிக்கையைக் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை என்று இவர் நன்கறிந்தவர்தான். ஆயினும் பெரியவாளின் திருவுளக்கருத்தினர் படியே செலவழிக்கப் படவேண்டுமென்று அந்தரங்க பக்தியுடன் ஒதுக்கப்பட்ட தொகையாதலாலே இந்த ஆயிரத்தை செலுத்துகிறார்.

பெரியவர் புரிந்து கொள்ளாமல் போவாரா?

“எங்கே ‘பெல்காம்’?” என்கிறார்.

திருணமாக வந்து நிற்கிறார் அந்த நபர்.

நெய்யிலே இப்பொழுது முந்திரியாக்கும் வறுபடுகிறது!

பெல்காமில்……….நிறைவேற்றி வரும் ஆசாரிய ஸேவைத்

திட்டங்களைப்பற்றி ஏகமாக ச்லாகிக்கிறார், பெரியவர். இடித்த

மேகமே இன்மழை கொட்டுகிறது.

அதில் ஒரு பணிக்கே இந்த ஆயிரம் ரூபாயைப்

பயன்படுத்துமாறு அருளாணை பிறக்கிறது.

“பணத்தை எப்படிக் கொண்டு போவே?”

“பத்ரமா எடுத்துண்டு போறேன்” என்கிறார் ‘பெல்காம்’

பொறுப்புணர்ச்சியுடன் நிறைவுடனும் அபார உலகியல்

அறிவுடனும் முனிவர் சொல்கிறார்: ” அதெல்லாம்

ஸரியில்லை தொலைஞ்சு போச்சுன்னா, நீயோ, அவனோ

( கொடுத்தவரோ) ஜவாப் இல்லை. நான்தான் ஜவாப்.

( கொடுத்தபிரமுகரைப் பார்த்து) ,நீ இந்தத்தொகைக்கு அவன்

பேரிலே ‘ட்ராஃப்ட்’ வாங்கிக் குடுத்துடு.”

அறம் என்ன, அன்பு என்ன, பொறுப்பு என்ன, ஸமயோசிதம்

என்ன என்பதற்கெல்லாம் அன்றன்றும் இப்படி அற்புத

முன்னுதாரணம் தருவதே முனிவரின் இயல்பாயிருக்கிறது.

– மஹா பெரியவாள் விருந்து, ரா.கணபதி அண்ணா

தத்தாத்ரேயர் பிறப்பு சொல்லும் தத்துவம் …..

source:::: kanchi perivaa forum

Natarajan

————————————–
தத்தாத்ரேயர் !

இவரது பிறப்பின் மூலம், உலகில் பிறந்த எல்லாருமே, ஏதோ ஒருவகையில் மேம்பட்டுள்ளனர். எனவே, அவர்களைப் பார்த்து பொறாமைப்படவோ, தாழ்வு மனப்பான்மை கொள்ளவோ கூடாது என்பதும், எல்லாரும் உயர்ந்தவர்களே என்பதும் உணர வைக்கப்படுகிறது

ஒருவரை விட ஒருவர் அழகு, குணம், படிப்பு, பணம், பண்பு என மேலிட்டிருப்பது உலகத்தின் இயல்பு. ஆனால், தன்னை விட அழகானவர்களையோ, பண்பாளர்களையோ பார்த்து பொறாமை கொள்வது தவறு. ஒருவரை பார்த்து, அவரைப் போல் தன் அந்தஸ்தை மேம்படுத்திக் கொள்ளலாமே தவிர, பொறாமை கொள்ளக் கூடாது என்பதை, அத்திரி மகரிஷியின் மனைவி அனுசூயா மூலம், உலகுக்கு உணர வைத்தனர் முப்பெரும் தெய்வங்கள்.
அத்திரி மகரிஷி, தன் மனைவி அனுசூயாவுடன் தெற்கிலுள்ள வனப்பகுதியில் தங்கியிருந்தார். தனக்கு சிவன், திருமால், பிரம்மாவைப் போல, சகலத்திலும் சிறந்த குழந்தைகள் பிறக்க வேண்டுமென விரும்பினாள் அனுசூயா. அதற்காக கடும் தவம் மேற்கொண்டாள். தவம் என்றால், கண்ணை மூடி தியானத்தில் இருப்பதல்ல… ஒருவருக்கு உலகில் என்ன பணி வாய்க்கிறதோ, அதை சிரத்தையுடன் செய்தால், அதுவே தவம்.
அனுசூயாவுக்கு ஒரே பணி தான்; கட்டிய கணவரின் மனம் கோணாமல் நடப்பது!
தன் கணவர் மீது உயிரையே வைத்திருந்த அவள், அவரை தினமும் வணங்கிய பிறகே பணி களைத் துவக்குவாள். அவரது பாதத்தைக் கழுவி கிடைக்கும் நீரை, தன் தலையில் தெளித்துக் கொள்வாள். கணவர் மனதுக்கு மாறாமல் நடந்ததால், “பதிவிரதை’ என்ற அந்தஸ்து பெற்றாள். இத்தகைய பெண்களுக்கு தெய்வம் கவுரவம் அளிக்கும். பதிவிரதையான அவளது விருப்பப்படி, மூன்று குழந்தைகளை அருள, மும்மூர்த்திகள் முடிவு செய்தனர். அதாவது, தாங்களே அவளுக்கு குழந்தைகளாக பிறக்க முடிவெடுத்தனர். இதற்காக, தங்கள் தேவியரின் மனதில் பொறாமைத்தீயை மூட்டினர்.
“இந்த உலகத்திலேயே அனுசூயா தான் பதிவிரதை…’ என்று அவர்கள் காதில்படும்படி பேசினர்.
“அப்படியானால், நாங்கள், உங்கள் சொல் கேட்பதில்லையா?’ என தேவியர் வரிந்து கட்டிக் கொண்டு சண்டையிட, “அனுசூயாவின் பதிவிரதா தன்மையை நீங்களே புரிந்து கொள்வீர்கள்…’ என்ற தெய்வங்கள், அவளது குடிசைக்கு சந்நியாசிகளாக வேடமிட்டு வந்தனர்.
“பெண்ணே… எங்களுக்கு உணவளிக்க வேண்டும். ஒரு நிபந்தனை…நீ நிர்வாணமாக உணவளித்தால் தான் ஏற்போம்…’ என்றனர்.
இக்கட்டான சூழலிலும் கலங்காதவர்களே ஞானிகள். அனுசூயா அந்த ரகத்தில் அடக்கம் என்பதால், அவள் சற்றும் கலங்கவில்லை. தன் கணவரின் பாதத்தீர்த்தத்தை எடுத்து, அந்த துறவிகள் மேல் தெளித்தாள். அவர்கள் குழந்தைகளாகி விட்டனர். குழந்தைகளைப் பார்த்ததுமே தாய்மையுணர்வு பொங்கி பால் சுரந்தது. நிர்வாண நிலையில் அவர்களுக்கு பாலூட்டினாள்.
தங்கள் கணவன்மாரின் நிலையால் பயந்து போன தேவியர், அனுசூயாவிடம் வந்து நடந்ததைச் சொல்லி மாங்கல்ய பாக்கியம் அருள வேண்டினர். இதனிடையே, அத்திரி முனிவர் அங்கு வந்தார். தெய்வங்களே தனக்கு பிள்ளையானது கண்டு மகிழ்ந்த அவர், குழந்தைகளை ஒன்று சேர்த்தார். மூன்று முகம், இரண்டு கால்கள் கொண்ட குழந்தையாக அது மாறியது. அக்குழந்தைக்கு தத்தாத்ரேயர் என பெயரிட்டார்.
தங்கள் தேவியரின் பொறாமை அழிந்ததால், முப்பெரும் தெய்வங்களும் அவர்கள் முன் தோன்றினர். தங்கள் பிரதிநிதியாக தத்தாத்ரேயர் உலகை பரிபாலிப்பர் என்றனர்.
இவரது பிறப்பின் மூலம், <உலகில் பிறந்த எல்லாருமே, ஏதோ ஒருவகையில் மேம்பட்டுள்ளனர். எனவே, அவர்களைப் பார்த்து பொறாமைப்படவோ, தாழ்வு மனப்பான்மை கொள்ளவோ கூடாது என்பதும், எல்லாரும் உயர்ந்தவர்களே என்பதும் உணர வைக்கப்படுகிறது.
உத்தரபிரதேசத்திலĬ 9;ள்ள ரிஷிகேஷத்தில், சிவானந்த ஆசிரமம் அருகில், தத்தாத்ரேயருக்கு கோவில் உள்ளது. சென்னை கந்தாஸ்ரமத்தில் சன்னிதி இருக்கிறது.
***Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam

Read more: http://periva.proboards.com/index.cgi?board=divyadarshan&action=display&thread=2915#ixzz2DzGWZG8p

Road to Happiness!!!!!

source:::
An excerpt from Book
“The Road to Happiness”
by Mac Anderson and BJ Gallagher

When I travel on business, I like to talk to the taxi drivers who take me from the airport to my hotel, or to a convention center, or to a restaurant. Taxi drivers are often immigrants with interesting personal histories and unusual cultural backgrounds. I ask them how long they’ve been in America, how they chose which city to live in, and what they like best about where they live. Of course, I also ask them for advice on good local restaurants and any special attractions they’d recommend to a visitor. I’ve had some great experiences on my travels, thanks to the advice of taxi drivers!

On one trip about ten years ago, I was making conversation with the taxi driver, asking him my usual questions about how he came to live where he lived. Then I asked him a hypothetical question: “If you could live anywhere in the world-and if money was no object-where would you live?”

Without hesitating even for a second, he replied, “I live in my heart. So it really doesn’t matter where my body lives. If I am happy inside, then I live in paradise, no matter where my residence is.”

I felt humbled and a little foolish for my question. Of course he was right-happiness is an inside job. He had reminded me of something I already knew, but had forgotten. If you can’t find happiness inside yourself, you’ll never find it in the outside world, no matter where you move. Wherever you go, there you are. You take yourself with you.

I am grateful for the wisdom of that taxi driver. And I’m grateful for all the wisdom others have shared with me about how to be happy.

Kind words can be short and easy to speak, but their echoes are truly endless.”Learn how to be happy with what you have while you pursue all that you want.”

Natarajan

What do You do For Others is More Important than What you Do for Yourself!!!!

source:::unknown….input from one of my contacts…

Natarajan

A voyaging ship was wrecked during a storm at sea and only two of the men on it were able to swim to a small, desert like island. The two survivors, not knowing what else to do, agree that they had no other recourse but to pray to God. However, to find out whose prayer was more powerful, they agreed to divide the territory between them and stay on
opposite sides of the island.

The first thing they prayed for was food. The next morning, the first man saw a fruit-bearing tree on his side of the land and he was able to eat it’s fruit. The other man’s parcel of land remained barren!

After a week, the first man was lonely and he decided to pray for a wife. The next day, there was a woman who swam to his side of the land. On the other side of the island, again there was nothing!

Soon the first man prayed for a house, clothes, more food. The next day, like magic, all of these were given to him. However, the second man still had nothing!

Finally, the first man prayed for a ship, so that he and his wife could leave the island. In the morning, he found a ship docked at his side of the island. The first man boarded the ship with his wife and decided to leave the second man on the island. He considered the other man unworthy to receive God’s blessings, since none of his prayers had been answered.

As the ship was about to leave, the first man heard a voice from heaven booming, “Why are you leaving your companion on the island?”
“My blessings are mine alone, since I was the one who prayed for them,” the first man answered. “His prayers were all unanswered and so he does not deserve anything.”

“You are mistaken!” the voice rebuked him. “He had only one prayer, which I answered. If not for that, you would not have received any of my blessings.”

“Tell me, O God,” the first man asked the voice, “What did he pray for that I should owe him anything?”

“He prayed that all your prayers be answered.”

For all we know, our blessings are not the fruits of our prayers alone, but those of another praying for us.

This is too good not to share…

My prayer for you today is that all your prayers are answered. Be blessed.

“What you do for others is more important than what you do for yourself”

This was shared with me by a friend, I hope you will share with your friends!

Natarajan

பெரியவா சொன்னா அது வேத வாக்கு !!!!

source::::input from one of my contacts

Natarajan

வேதத்தில் சொன்ன நல்ல பல விஷயங்களை, கதைகள் மூலம் பெரிது பண்ணிக் காட்டுவதே புராணம்’

மிகுந்த இறை நம்பிக்கை கொண்ட, வசதிமிக்க கல்கத்தா சேட்ஜி ஒருவருக்கு தீராத ஒரு நோய். எந்த உணவையும் சாப்பிட பிடிக்கலை. எதை சாப்பிட்டாலும், அதன் ருசி தெரியாமல், உப்பு சப்பில்லாமல் இருந்தன. தாகம் கூட எடுப்பது இல்லை. அதனால், நாளடைவில் மிகவும் மெலிந்து போனார். பார்க்காத வைத்தியம் இல்லை. இறுதியில் யாரோ சொல்லக்கேட்டு, மகாபெரியவரை போய் சந்தித்தார். விவரம் கூறினார். பெரியவா ஒரு விஷயம் சொன்னார். பரிகாரம் போல் இருந்தது.

அந்த கல்கத்தா சேட்ஜிக்கு, மகா பெரியவா சொன்ன பரிகாரம் என்பது மேலோட்டமாக பார்த்திட ஒரு பெரிய விஷயம்போல தெரியாது. ஆனால், நடைமுறையில் அதைச் செய்திட உண்மையில் இறையருள் நிறையவே வேண்டும்.
நம் மதத்தின் தனிப்பெரும் சிறப்புக்குரியவை, முதலில் வேதங்களே! அதைத் தொடர்ந்து இந்த மண்ணில் வந்தவை இதிகாச புராணங்கள். இதிகாசங்கள் என்றாலே, ராமாயணமும், மகாபாரதமும் வந்துவிடும்.

புராணம் என்று வரும்போது ஒரு பட்டியலே உள்ளது. அந்த வகையில், ‘பிரம்ம புராணம், பத்மபுராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம், லிங்க புராணம், கருட புராணம், நாரத புராணம், பாகவத புராணம், அக்னி புராணம், ஸ்கந்த புராணம், பவிஷ்ய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், மார்க்கண்டேய புராணம், வாமன புராணம், வராக புராணம், மச்ச புராணம், கூர்ம புராணம், பிரம்மாண்ட புராணம்’ என்று பதினெட்டு புராணங்களோடு வாயு புராணத்தையும் சேர்த்தால், 19 புராணங்கள் வருகிறது.

பெரியவர் அந்த சேட்ஜிக்கு சொன்ன பரிகாரம் இதுதான். மேலே கண்டவற்றில், நான்கு வேதங்கள் மற்றும் இரண்டு இதிகாசங்களையும் விட்டுவிட்டு, மீதமுள்ள அவ்வளவு புராணங்களையும் மூலத்தில் உள்ளது உள்ளபடி துளியும் பிசகின்றி, நூலாக அச்சிட்டு அதை இந்த பாரததேசம் முழுக்க உள்ள வேத பண்டிதர்களுக்கும், விரும்பிக் கேட்பவர்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும். சேட்ஜியால் செய்ய முடியுமா? என்று கேட்டார். சேட்ஜியே உப்புச் சப்பில்லாத ஒரு வாழ்வை வாழ்ந்தபடி இருக்கிறார். எனவே, மறுபேச்சே பேசாமல் அந்த பரிகாரத்துக்கு தயாராகிவிட்டார்.

ஆனால், பதினெட்டு புராணங்களையும் மூலத்தில் உள்ளது உள்ளபடி துளியும் மாறாமல், அச்சிட வேண்டும் என்று பெரியவர் அடிக்கோடிட்டு விட்டபடியால், அதை தேடிக்கண்டுபிடிப்தே ஒரு பாடாக இருந்தது. அதற்காக ஒரு அலுவலகம் அமைந்து, அதில் வேத பண்டிதர் களை நியமித்து, அவர்களுக்கு உரிய சன்மானமும் மரியாதையும் தந்து, ஒரு அர சியல் கட்சித் தலைவர் ஒரு இயக்கத்தை நடத்துவதுபோலவே நடத்த வேண்டி யிருந்தது.

தோராயமாக சில லட்ச ரூபாய் செலவாகும் என்று கணிக்கப்பட்ட விஷயம், பல லட்சங்களை விழுங்கியது. ஒவ்வொரு புராணத்தையும் தேடிப்பிடித்து அச்சேற்றி புரூஃப் திருத்தி, பின் உரிய முறையில் புத்தகமாக்கி, அதை பாதுகாப்பாக வைத்துவிட்டு, அடுத்த புராணம் என்று செயல்பட வேண்டியிருந்தது.

இவ்வாறு செய்வதால், அவருக்கு குணமாகிவிடும் என்கிற உறுதியை பெரியவர் தரவில்லை. சொல்லப் போனால், இந்த பரிகாரத்தைக்கூட, எடுத்த எடுப்பில் கூறிவிடவில்லை. ஒருமுறைக்கு பலமுறை அந்த சேட்ஜி சார்பில் ராஜகோபால சர்மா என்னும் உபன்யாச சிரோன்மணி ஒருவர், முயற்சி செய்தபிறகே அவர் கூறியிருந்தார். இதைக் கூற காரணம் உண்டு.

ஒரு நம்பிக்கை அடிப்படையில், பெரியவர் சொன்னதை செய்ய, அதைவிட கூடுதலான நம்பிக்கை செய்பவரிடம் வேண்டும். அடுத்து அந்த நம்பிக்கை துளியும் குறையாதபடி நீடிக்கவும் வேண்டும். ஏனென்றால், பெரியவர் சொன்ன இந்த பரிகாரப்படி பதினேழு புராணங்களைத் தேடிப்பிடித்து, அச்சேற்றிவிட்ட நிலையில், பதினெட்டு ஒன்றே பாக்கி என்றிருக்கும் நிலையில், அந்த சேட்ஜியிடம் எந்த குணப்பாடும் இல்லை. சொல்லப்போனால் குணமாவதற்கான அறிகுறிகள் கூட கண்ணில் படவில்லை.

ஆனால், பணமோ கரைந்தபடி உள்ளது. சொல்லப்போனால், சேட்ஜி சம்பாதித்ததை எல்லாம் கரைத்துவிட்டார் என்று கூட கூறலாம்தான். ஆனால், சேட்ஜியோ துளியும் நம்பிக்கை குன்றாமல் பதினெட்டாவதையும் வெளியிட்டு முடித்தார். பதினெட்டாவதாக ஸ்ரீஸ்கந்த புராணத்தை அச்சடிக்கத் தொடங்கும்போதே அவரிடம் ஒரு மாற்றம். தாகம் எடுக்க ஆரம்பித்தது. அச்சடித்து முடிக்கும்போது சாப்பிடவே தொடங்கிவிட்டார். நாக்குக்கு ருசி உணர்வு வந்து, அவரது மர்மநோய் இனி என்னால் உன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பதுபோல நீங்கியேவிட்டது.
சேட்ஜியின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அதன் பிறகு, அவர் பெரியவரை எப்படி எல்லாம் கொண்டாடி மகிழ்ந்திருப்பார் என்று கூறத் தேவையே இல்லை. இந்த விஷயத்தில் பெரியவர் சொன்ன பதில்தான் சிகரம்.

‘இந்த அதிசயத்தை நான் செய்யவில்லை. அப்படிச் சொன்னால் தவறு. பதினெட்டு புராணங்களுக்குள்ளம் சப்த ரூபமாய் வாழ்ந்துகொண்டிருககும் நம் ரிஷிகளும் முனிவர்களும் இறை அம்சங்களுமே இதைச் செய்தன. சேட்ஜியின் கர்ம வினைக்கு இணையான பரிகாரமாக, நான் இதை எண்ணிடக் காரணம் கூட, நமது ரிஷிகளும் முனிவர்களுமே…’ என்று, அவருக்கு வந்த வந்தனங்களை எல்லாம், அப்படியே ரிஷிகளுக்கும் முனிவர்களுக்கும் சமர்ப்பணமாகும்படி செய்துவிட்டார்.

இதை அறிந்தபோது, எனக்குள் பெரும் நம்பிக்கை ஒளி ஏற்பட்டது. ‘விதியை மதியாலெல்லாம் வெல்ல முடியாது என்பது உண்மையாயினும், அந்த மதிக்குள் விதியை ஏற்றுக்கொள்ளும் தெளிவை, திட சித்தியை நாம் பெற்றாலே கூட போதுமே.’ அதுதான் பகவான் ரமணரின் அனுபவம். வலியை விரும்பு – வலியே வலிமை போன்றவை… இவ் வேளையில், சிறு வயதில் நான் பார்க்க என் அத்தை ஒரு நோட்டில், ‘சாதுஜன ப்ரியா ஸ்ரீராமா – ராமராஜ்ய விட்டலா ஜெயராமா. ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம் – ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்…’ என்று எழுதிய ஸ்லோகங்கள் நினைவுக்கு வருகின்றன.

நான் பார்க்க பலர் ஸ்ரீராமஜெயம் எழுதக் காண்கிறேன். சிவபுராணம், ஹனுமன் சாலீசா என்று சிறு சிறு புத்தகங்களை அச்சிட்டு, அனைவருக்கும் கொடுக்கக் காண்கிறேன் – எல்லாவற்றுக்கும் மூலம் பெரியவர் சொன்ன இந்த பரிகாரமே!

உலக மருத்துவர்களெல்லா கை விட்டுவிட்ட வியாதிக்கே, மருந்தாக நமது அறநூல்கள் இருக்கிறதென்றால், இதை வைத்துக்கொண்டு, நாம் கர்மத்தில் உழல்வதும் இதை அறியாமல் இருப்பதும் எத்தனை அறியாமை?

ஒன்றை மட்டும் இமயத்தின் உச்சியில் நின்றுகொண்டு சொல்வதுபோல் சொல்வேன். மந்திரங்களால் நிரம்பியிருக்கும் மனங்களுக்கு பெரிய துன்பம் வரவே வராது. ‘நான் சொல்லவா… ஒரு பெரிய கனபாடிகள் புற்றுநோயால் அவதிப்படுவதை…’ என்று உடனே வரிந்துகட்டிக் கொண்டு பதில் சொன்னால், அவர்களுக்கு எனது பதில் இதுதான்:

ஒரு புத்தகத்தை வாங்குவது, வீட்டு அலமாரியில் வைப்பதற்காக அல்ல. வாசிப்பதற்காக! அதேபோல மந்திரங்களை நாம் அன்றாடம் கூறுவது என்பதும் வாய்ப்பாட்டு ஒப்பிப்பதுபோல் இருக்கக்கூடாது. துளியாவது அதன் பொருளை உணர்ந்துகொண்டு, உருக்கத்தோடு சொல்ல வேண்டும். அதே போல ராமஜெயம் என்று எழுதும்போது, ராம காவியம் மனத்துக்குள் ஓட வேண்டும். ஹனுமனின் சாகசங்களை நம் சாகசம்போல லயித்து அனுபவிக்கவேண்டும்.
திரும்பத் திரும்ப ஒரே விஷயத்தைச் சொல்வதும் எழுதுவதும் எந்த வகை பக்தி? மாறிக் கொண்டேயிருக்கும் உலகில், மாறாதது மாற்றம் ஒன்றே என்றும், உலகில் அந்த திரும்பத் திரும்பச் சொல்லப்படும் ஒரு மந்திரம் அல்லது ஒரு சப்தத்தால் என்ன பெரிதாக ஏற்பட்டு விடும் என்று, அறிவுபூர்வமாக உணர்ச்சி பூர்வமாக கேட்பதில் உள்ள வேகத்தை அடக்கி, மனத்தை அதன் போக்குக்குப் போய்விடாதபடி, வளைத்துத் திருப்பி திரும்பத் திரும்பச் சொல்; திரும்பத் திரும்ப எழுது என்றும் இந்த அற்புதத்துக்குள் சிரமப்பட்டு முயல வேண்டும்.

நல்ல விதியமைப்பு கொஞ்சமாவது இருந்தாலே, இதில் நம்பிக்கை ஏற்படும். கோயிலுக்கு செல்வதை நித்ய பரிகாரம் என்று சான்றோர்கள் கூறுவார்கள். பசுவுக்கு அகத்திக் கீரை தருவதை சிறந்த பரிகாரம் என்பார்கள். ஏழைப்பெண்களின் திருமணத்துக்கு உதவுவதை, பசி என்று நம் காதுபட கூறுபவர்களுக்கு அன்னமிடுவதை, தாகம் என்று தவிப்பவர்களுக்கு தண்ணீர் தருவதை அன்றாட பரிகாரங்கள் என்பார்கள்.

இவற்றுக்கு நடுவில், இறை நாமங்களை ஜபிப்பது, எழுதுவது என்பதெல்லாம் விளக்கை பளிச்சென்று துலக்க முற்படுவது போன்றது. நான் இம்மட்டில் ஒரு நாளைக்கு 108 என்ற கணக்கெடுத்து இறை நாமத்தை எழுதி வருகிறேன். அழுத்தமாய் கர்மம் கரைவதையும் உணர்கிறேன். அதே சமயம், அது வேண்டும் இது வேண்டும் என்கிற ஆசைகளோடெல்லாம் இதை செய்வதில்லை. அப்படி ஆசைப்பட்டாலே, இந்தச் செயல்பாட்டை நாம் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை என்பதே உண்மை. பல் துலக்குவது, குளிப்பதுபோல இதை ஒரு நித்ய கடமையாக முதலில் செய்ய வேண்டும். பின் நெகிழ்வோடு செய்ய வேண்டும். நெகிழ்வோடு செய்திட லயிப்பு மிக முக்கியம். ஸ்ரீராமஜயம் எழுத எழுத அது காலப்போக்கில் தானா ஏற்பட்டது.

இந்த நாமம் குறித்து மட்டுமல்ல; புராணங்கள் குறித்தும், பெரியவர் கூறும் கருத்தும் மனத்துக்குள் ஆழமாய்ப் பதிவதாகவே உள்ளது.
‘மிகச்சிறிய ஒன்றை ஒரு பூதக்கண்ணாடி பெரியதாக காட்டுகிறது. அதுபோலவே, வேதத்தில் சொன்ன நல்ல பல விஷயங்களை, கதைகள் மூலம் பெரிது பண்ணிக் காட்டுவதே புராணம்’ என்று புராணங்களுக்கு அவர் விளக்கமளிக்கிறார்.
‘ஒன்றை சுருக்கமாகச் சொன்னால் அது மனத்தில் பதியாமல் போய்விடலாம். அதையே சுவாரஸ்யமான கதையாக விஸ்தாரமாகச் சொல்லும்போது, நன்றாக மனத்தில் பதியும்’ என்று புராணக்கதைகளின் நோக்கத்தை கூறுகிறார் பெரியவர்.

இதெல்லாமே அருமருந்து!
இந்த மருந்தை வைத்துக்கொண்டு, நாம் கர்மத்தை எண்ணி எதற்குக் கலங்க வேண்டும்? எனக்கும் இப்போது விதி பயமெல்லாம் இல்லை. அதே சமயம் இந்தப் பரிகாரங்களை அல்லது பரிகாரத்தை உள்ளடக்கிய பக்திமயமான வாழ்வில், ராம நாமத்தையோ, விஷ்ணு சஹஸ்ரநாமத்தையோ, ருத்ரத்தையோ விடாமல் ஜபித்து கர்ம சிரத்தையாக இருக்கும்போது, அதற்குப் பரிசாக தெய்வமும் வீடு தேடி வந்து, கருணை காட்டுகிறது.

What Goes Around, Comes Around !!!

source::::unknown…input from one of my friends….

Natarajan

One day a man saw an old lady, stranded on the side of the road, but even in the dim light of day, he could see she needed help. So he pulled up in front of her Mercedes and got out. His Pontiac was still sputtering when he approached her.

Even with the smile on his face, she was worried. No one had stopped to help for the last hour or so. Was he going to hurt her? He didn’t look safe; he looked poor and hungry. He could see that she was frightened, standing out there in the cold. He knew how she felt. It was those chills which only fear can put in you. He said, “I’m here to help you, ma’am. Why don’t you wait in the car where it’s warm? By the way, my name is Bryan Anderson.”

Well, all she had was a flat tire, but for an old lady, that was bad enough. Bryan crawled under the car looking for a place to put the jack, skinning his knuckles a time or two. Soon he was able to change the tire. But he had to get dirty and his hands hurt.
As he was tightening up the lug nuts, she rolled down the window and began to talk to him. She told him that she was from St. Louis and was only just passing through. She couldn’t thank him enough for coming to her aid.

Bryan just smiled as he closed her trunk. The lady asked how much she owed him. Any amount would have been all right with her. She already imagined all the awful things that could have happened had he not stopped. Bryan never thought twice about being paid. This was not a job to him. This was helping someone in need, and God knows there were plenty, who had given him a hand in the past. He had lived his whole life that way, and it never occurred to him to act any other way.
He told her that if she really wanted to pay him back, the next time she saw someone who needed help, she could give that person the assistance they needed, and Bryan added, “And think of me.”
He waited until she started her car and drove off. It had been a cold and depressing day, but he felt good as he headed for home, disappearing into the twilight.

A few miles down the road the lady saw a small cafe. She went in to grab a bite to eat, and take the chill off before she made the last leg of her trip home. It was a dingy looking restaurant. Outside were two old gas pumps. The whole scene was unfamiliar to her. The waitress came over and brought a clean towel to wipe her wet hair. She had a sweet smile, one that even being on her feet for the whole day couldn’t erase. The lady noticed the waitress was nearly eight months pregnant, but she never let the strain and aches change her attitude. The old lady wondered how someone who had so little could be so giving to a stranger. Then she remembered Bryan.

After the lady finished her meal, she paid with a hundred dollar bill. The waitress quickly went to get change for her hundred dollar bill, but the old lady had slipped right out the door. She was gone by the time the waitress came back. The waitress wondered where the lady could be. Then she noticed something written on the napkin.

There were tears in her eyes when she read what the lady wrote: “You don’t owe me anything. I have been there too. Somebody once helped me out, the way I’m helping you. If you really want to pay me back, here is what you do: Do not let this chain of love end with you.”
Under the napkin were four more $100 bills.

Well, there were tables to clear, sugar bowls to fill, and people to serve, but the waitress made it through another day. That night when she got home from work and climbed into bed, she was thinking about the money and what the lady had written. How could the lady have known how much she and her husband needed it? With the baby due next month, it was going to be hard….
She knew how worried her husband was, and as he lay sleeping next to her, she gave him a soft kiss and whispered soft and low, “Everything’s going to be all right. I love you, Bryan Anderson.”

There is an old saying “What goes around comes around.”
============================================

தர்மம் தலை காக்கும் !!!

எழுதியவர் : உ.வே.சாமிநாதய்யர்

SOURCE::::INPUT From one of my contacts… story to read and share….

Natarajan

கொள்ளிடத்தின் வடகரையில் ஆங்கரை என்பதோர் ஊர். அது திருச்சிராப்பள்ளி ஜில்லா லாலுகுடி தாலுகாவில், லாலுகுடிக்கு வடமேற்கே* இரண்டு மைல் தூரத்தில் பல ஊர்களுக்குச் செல்லும் சாலைக்கிடையே அமைந்துள்ளது. அங்கே அக்கிரகாரத்தில் இருநூறுக்கு மேற்பட்ட அந்தணர்களின் வீடுகள் உண்டு.
அவர்களிற் பெரும்பாலோர் ஸ்மார்த்தப் பிராமணர்களுள் மழநாட்டுப் பிரஹசரணமென்னும் வகுப்பைச் சார்ந்தவர்கள். அவர்கள் யாவரும் சிவபக்தியுடையவர்கள். தங்கள் தங்களால் இயன்ற அளவு விருந்தினர்களை உபசரித்து உண்பிக்கும் வழக்கம் உடையவர்களாக இருந்தனர். பழைய காலத்தில் இவ்வழக்கம் எல்லாச் சாதியினரிடத்தும் இருந்து வந்தது.
ஏறக்குறைய நூற்றைம்பது வருஷங்களுக்குமுன் மேற்கூறிய ஆங்கரையில் சுப்பையரென்ற ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு இரண்டாயிரம் ஏகரா நன்செய்கள் இருந்தன. அவை ஏழு கிராமங்களில் இருந்தனவென்பர். அவருடைய குடும்பம் பரம்பரையாகச் செல்வமுள்ளதாக விளங்கிய குடும்பம். அவர் தெய்வபக்தியும், ஏழைகளிடத்தில் அன்பும், தர்மசிந்தனையும் வாய்ந்தவர்.
அவர் நாள்தோறும் காலையில் ஸ்நாநம் செய்துவிட்டுப் பூஜை முதலியவற்றை முடித்துக் கொள்வார்; பிறகு தாம் போசனம் செய்வதற்கு முன் தம் வீட்டுத் திண்ணையில் யாரேனும் அதிதிகள் வந்துள்ளார்களாவென்று பார்ப்பார்.
திரிசிரபுரம், ஸ்ரீரங்கம், திருவானைக்கா முதலிய இடங்களுக்குப் பாதசாரிகளாகச் செல்பவர்களும் அவ்வூர்களிலிருந்து தங்கள் தங்கள் கிராமங்களுக்குச் செல்பவர்களுமாகிய வழிப்போக்கர்கள் அவருடைய வீட்டுக்கு வந்து திண்ணையில் தங்கி இருப்பார்கள். அவர்களைச் சுப்பையர் உள்ளே அழைத்துப் பசியாற அன்னமிட்டு உபசரிப்பது வழக்கம். அவர் அன்னமிடுவதை யறிந்து பல பிரயாணிகள் அவர் வீட்டுக்கு வருவார்கள். அவருடைய வீடானது ஒரே சமயத்திற் பலர் இருந்து சாப்பிடும்படி விசாலமாக அமைந்திருந்தது. எல்லா வகையினருக்கும் அவரவர்களுக்கேற்ற முறையில் அவர் உணவளிப்பார். பசியென்று எந்த நேரத்தில் யார் வரினும் அவர்கள் பசியை நீக்கும் வரையில் அவரது ஞாபகம் வேறொன்றிலும் செல்லாது.
தம்முடைய வீட்டிற்கு இரவும் பகலும் இங்ஙனம் வந்து போவாரை உபசரித்து அன்னமிடுவதையே தம்முடைய வாழ்க்கையின் பயனாக அவர் எண்ணினார். பசிப்பிணி மருத்துவராகி வாழ்ந்து வந்த அவருடைய புகழ் எங்கும் பரவியது. அவரை யாவரும் *1அன்னதானமையரென்றும், அன்னதானம் சுப்பையரென்றும் வழங்கலாயினர்.
சுப்பையர் குடும்பம் மிகவும் பெரியது; அவருடைய சகோதரர்கள், அவர்களுடைய மனைவிமார், பிள்ளைகள், பெண்கள், மருமக்கள், முதலியோர் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தனர். அன்னதானம் செய்யும் பொருட்டு அவர் தனியே சமையற்காரர்களை வைத்துக்கொள்ளவில்லை. அவர் வீட்டிலுள்ள பெண்பாலாரே சமையல் செய்வதும் வந்தோரை உபசரித்து அன்னமிடுவதுமாகிய செயல்களைச் செய்து வந்தனர். சிறு பிள்ளைகள் முதற் பெரியவர்கள் வரையில் யாவரும் இலைகளைப் போட்டும், பரிமாறியும், பிறவேலைகளைப் புரிந்தும் தம்முடைய ஆற்றலுக்கேற்றபடி உரிய காரியங்களைக் கவனிப்பார்கள். அதிதிகளுக்கு உபயோகப் படும்பொருட்டு, அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய்கள் முதலியவற்றை அவ்வப்போது செய்து வைக்கும் வேலையில் அவ்வீட்டுப் பெண்பாலார் ஈடுபட்டிருப்பார்கள். அவருடைய வீடு ஒரு சிறந்த அன்ன சத்திரமாகவே இருந்தது. குடும்பத்தினர் யாவரும் தர்மத்திற்காக அன்புடன் உழைக்கும் பணியாளர்களாக இருந்தனர்.
“இப்படி இருந்தால் எப்படிப் பணம் சேரும்? எப்பொழுதும் இந்த மாதிரியே நடந்து வருவது சாத்தியமா?” என்று யாரேனும் சிலர் சுப்பையரைக் கேட்பார்கள். அவர், “பரம்பரையாக, நடந்துவரும் இந்த தர்மத்தைக் காட்டிலும் மேற்பட்ட லாபம் வேறொன்று எனக்கு இல்லை. பசித்து வந்தவர்களுக்கு அன்னமிடுவதே சிவாராதனமென்று எண்ணுகிறேன். தெய்வம் எவ்வளவு காலம் இதை நடத்தும்படி கிருபை பண்ணுகிறதோ அவ்வளவு காலம் நடத்தியே வருவேன். நான் செய்வது கெட்டகாரியமில்லையென்ற திருப்தியே எனக்குப் போதும்” என்பார்.
இங்ஙனம் அவர் இருந்து வரும் காலத்தில் ஒரு சமயம் மழையின்மையாலும் ஆறுகளில் ஜலம் போதியளவு வாராமையாலும் நிலங்களில் விளைச்சல் குறைந்தது. ஆயினும் அவர் அன்னதானத்தைக் குறைக்கவில்லை. இப்படி ஒருவர் அன்னமிடுகிறாரென்ற செய்தியை அறிந்த பல ஏழை ஜனங்கள் அங்கங்கே உண்டான விளைச்சற் குறைவினால் ஆதரவு பெறாமல் சுப்பையர் வீட்டிற்கு வந்து உண்டு அவரை வாழ்த்திச் சென்றார்கள். இதனால் அக்காலத்தில் வழக்கத்திற்கு மேல் அவர் அன்னதானம் செய்ய நேர்ந்தது. ஆயினும் சுப்பையர் மனங்கலங்கவில்லை. நாயன்மார்களுடைய வரலாற்றை உணர்ந்திருந்த பரமசிவ பக்தராகிய அவர் அந்நாயன்மார்கள் இறைவன் சோதனைக்கு உட்பட்டுப் பின் நன்மை பெற்றதையறிந்தவராதலின், தம்முடைய நிலங்கள் விளைவு குன்றியது முதலியனவும் அத்தகைய சோதனையே என்றெண்ணினார். தர்மம் தலை காக்குமென்ற துணிவினால், எப்பொழுதும் செய்துவரும் சிறப்புக்குக் குறைவில்லாமல் அன்னதானத்தை நடத்தி வந்தார். பொருள் முட்டுப்பாடு உண்டானமையால் தம் குடும்பத்துப் பெண்பாலரின் ஆபரணங்களை விற்றும், அடகு வைத்தும் பொருள் பெற்று அன்ன தானத்திற்குப் பயன்படுத்தி வந்தார். அதனாற் குடும்பத்தினருக்குச் சிறிதேனும் வருத்தம் உண்டாகவில்லை; அப்பெண்களோ அந்த நகைகள் ஒரு நல்ல சமயத்தில் பயன்பட்டது கருதி மகிழ்ந்தார்கள். அந்தக் குடும்பத்திலுள்ள யாவரும் ஆடம்பரமின்றியிருந்தார்கள்.
பொருள் முட்டுப்பாடு அவ்வருஷத்தில் நேர்ந்தமையால் அரசாங்கத்துக்குச் செலுத்தவேண்டிய ‘கிஸ்தி’யை அவராற் செலுத்த முடியவில்லை. பெருந்தொகையொன்றை வரிப்பணமாக அவர் செலுத்த வேண்டியிருந்தது. அவ்வூர்க்கணக்குப் பிள்ளை, மணியகாரர் ஆகியவர்கள் வரி வசூல் செய்ய முயன்றார்கள். சுப்பையர் தம்முடைய நிலைமையை விளக்கினார். அவர்கள் சுப்பையருடைய உண்மை நிலையையும் பரோபகார சிந்தையையும் நன்கு அறிந்தவர்களாதலால் அவர் கூறுவது மெய்யென்றே எண்ணினர். ஆயினும் மேலதிகாரிகளுக்கு எவ்விதம் பதில் சொல்லுவது??
அதனால் சுப்பையரை நோக்கி, “நாங்கள் என்ன செய்வோம்! உடனே வரியை வசூல் செய்ய வேண்டுமென்று எங்களுக்கு உத்தரவு வந்திருக்கிறதே!” என்றார்கள். சுப்பையர், “என்னால் வஞ்சனையில்லை யென்பது உங்களுக்கே தெரியும். நான் வரியைச் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாக மேலதிகாரிகளுக்கே தெரிவியுங்கள். அவர்கள் இஷ்டம்போலச் செய்து கொள்ளட்டும். அவர்கள் நிலத்தை ஏலம் போடக் கூடும். தெய்வம் எப்படி வழி விடுகிறதோ அப்படியே நடக்கும்; அதுவே எனக்குத் திருப்தி” என்றார்.
சிலர் அவரிடம் வந்து, “இந்தக் கஷ்டகாலத்திற் கூட அன்னதானத்தை ஏன் வைத்துக்கொள்ள வேண்டும்? சிலகாலம் நிறுத்தி வைத்தால் வரியையும் கொடுத்துவிடலாம்; உங்களுக்கும் பணம் சேருமே” என்றார்கள். அவர், “இந்தக் காலத்தில் அன்னம் போடாவிட்டால் இவ்வளவு நாள் நான் போட்டும் பயன் இல்லை; இப்போதுதான் அவசியம் இந்தத் தர்மத்தைச் செய்துவரவேண்டும். நஷ்டமென்பது எல்லோருக்கும் இருப்பதுதானே? பல ஏழைகள் பசியோடு வரும்போது நாம் சும்மா இருப்பதைவிட இறந்துவிடலாம். இப்பொழுது கடன்பட்டாவது இந்தத் தர்மத்தைச் செய்து வந்தால் நன்றாக விளையும் காலத்தில் உண்டாகும் லாபத்தினால் ஈடு செய்து கொள்ளலாம். இப்பொழுது செய்யாமல் நிறுத்திவிட்டால் அந்த நஷ்டத்திற்கு ஈடு செய்யவே முடியாது” என்றார்.
கணக்குப் பிள்ளையும் மணியகாரரும் நடந்ததைப் *2பேஷ்காரிடம் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தார்; அவருக்கும் ஒன்றும் தோன்றவில்லை; தாசில்தாருக்குத் தெரிவித்தார். அவர் மிக்க முடுக்கோடு வந்து பயமுறுத்தினார். சில ஹிம்சைகளும் செய்து பார்த்தார். சுப்பையர் தம்முடைய நிலைமையை எடுத்துச் சொன்னார்; தாசில்தார், “இந்த அன்ன தானத்தை நிறுத்திவிட்டுப் பணத்தைக் கட்டும்” என்று சொல்லவே சுப்பையர், “தாங்கள் அதை மட்டும் சொல்லக்கூடாது. எங்கள் பரம்பரைத் தர்மம் இது. இதை நிறுத்தி விடுவதென்பது முடியாத காரியம். என்னுடைய மூச்சு உள்ள வரையில் இதை நிறுத்த மாட்டேன்; எனக்கு என்ன துன்பம் வந்தாலும் வரட்டும்” என்றார்.
தாசில்தார், “இதெல்லாம் வேஷம்! அன்னம் போடுகிறேனென்று ஊரை ஏமாற்றுகிற வழி” என்றார். சுப்பையர் மேல் சில காரணங்களால் பொறாமை கொண்ட குமாஸ்தாக்கள் சிலர் தாசில்தாரிடம் அவரைப் பற்றி முன்னமே கோள் கூறி இருந்தனர். தாசில்தாரும் கோபியாதலின் சுப்பையருடைய குணத்தை அறிந்து கொள்ளவில்லை.
“உம்மால் பணம் கொடுக்கமுடியாவிட்டால் உம்முடைய நிலத்தை ஏலம் போடுவேன்” என்றார் தாசில்தார்.
“அவ்விதம் செய்வது அவசியமென்று உங்களுக்குத் தோன்றினால், தெய்வத்தினுடைய சித்தமும் அதுவாக இருக்குமானால், நான் எப்படி மறுக்கமுடியும்?” என்று சுப்பையர் பணிவாகக் கூறினார்.
தாசில்தார் நிலத்தை ஏலம் போட்டார்; ‘இந்த தர்ம தேவதையின் நிலத்தை ஏலம் எடுத்தால் நம் குடும்பமே நாசமாகிவிடும்’ என்ற எண்ணத்தால் அவ்வூரிலுள்ளோரேனும் அயலூரினரேனும் வந்து ஏலம் எடுக்கத் துணியவில்லை. தம் அதிகாரமொன்றையே பெரிதாக நினைத்த தாசில்தாருக்கோ கோபம் பொங்கியது; மீசை துடித்தது; கண்கள் சிவந்தன. “இந்த மனுஷன் பொல்லாதவனென்று தெரிகிறது. இவனுக்குப் பயந்தே ஒருவரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இருக்கட்டும். இவனுக்குத் தக்கபடி ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லித் தாசில்தார் போய்விட்டார். சுப்பையரைப் போலவே வேறு பலர் வரி செலுத்தவில்லை. ஆயினும் அவர்கள் செலுத்தவேண்டிய தொகை சிறிதாதலின் எவ்வாறேனும் வசூல் செய்து விடலாமென்ற தைரியம் தாசில்தாருக்கு இருந்தது. சுப்பையர் பெருந்தொகை செலுத்த வேண்டியவராக இருந்தமையின் அவர்மீது தாசில்தாருக்கு இருந்த கோபத்துக்கு அளவில்லை. உடனே, பலரிடமிருந்து வரிவசூல் செய்யப் படவில்லை யென்பதையும், அவர்களுள் பெருந்தொகை செலுத்தவேண்டிய சுப்பையர் முயற்சியொன்றும் செய்யாமல் இருப்பதையும், அவருடைய நிலத்தை ஏலம் எடுக்க ஒருவரும் துணியாததையும் ஜில்லா கலெக்டருக்கு எழுதித் தக்க ஏற்பாடுகள் செய்யவேண்டுமென்று தெரிவித்தார்.
‘எல்லாம் பரமசிவத்தின் திருவுள்ளப்படி நடக்கும்’ என்ற மனச்சாந்தியோடு சுப்பையர் அன்னதானத்தைக் குறைவின்றி நடத்திவந்தார்.
தாசில்தாருடைய கடிதத்தைக் கண்ட கலெக்டர் லாலுகுடிக்கு வந்து ‘முகாம்’ போட்டார். அவர் ஒரு வெள்ளைக்காரர்; மதியூகி; எதையும் ஆலோசித்துச் செய்பவர்; தர்மவான்; நியாயத்துக்கு அஞ்சி ஒழுகுபவர்; தமிழ்ப் பயிற்சி உள்ளவர். பிறர் தமிழ் பேசுவதைத் தெளிவாக அறிவதோடு தாமே தமிழிற் பேசவும் தெரிந்தவர். அவர் லாலுகுடிக்கு வந்து தாசில்தாரையும் வரச் செய்து அவரிடம் சுப்பையரைப் பற்றி விசாரித்தார்.
தாசில்தார் தம்முடைய அதிகாரமொன்றும் சுப்பையரிடத்திற் செல்லவில்லையென்ற கோபத்தினால் அவரைப்பற்றி மிகவும் கடுமையாகக் குறை கூறினார். “அவன் பெரிய ஆஷாடபூதி. இவ்வளவு நிலம் வைத்திருக்கிறவனுக்குப் பணம் இல்லாமலா போகும்? ஏதோ சிலருக்குச் சோற்றைப் போட்டுவிட்டு அன்னதானமென்று பேர் உண்டாக்கிக் கொண்டு பணத்தை மறைவாகச் சேகரித்து வைத்திருக் கிறானென்று நான் எண்ணுகிறேன். தன் வீட்டிலுள்ள நகைகளைக் கூட ஒளித்து வைத்துவிட்டான். துரையவர்கள் சிறிதேனும் இரக்கம் காட்டாமல் அந்த மனுஷனைத் தக்கபடி சிக்ஷிக்கவேண்டும்” என்றார்.
தாசில்தாருடைய பேச்சில் கோபம் தலைதூக்கி நிற்பதைக் கலெக்டர் உணர்ந்தார். அவருடைய வார்த்தைகளை அப்படியே நம்புவது அபாயமென்றெண்ணினார். ஆதலின், அந்தப் பக்கங்களில் இருந்த வேறு சிலரிடம் சுப்பையரைப் பற்றி இரகசியமாக விசாரித்தார். அவ்வந்தண உபகாரியிடம் பொறாமை கொண்ட சிலரையன்றி மற்றவர்களெல்லாம் அவரைப் பற்றி மிக உயர்வாகச் சொன்னார்கள்; அவர் செய்யும் அன்னதானத்தைப் பற்றி உள்ளங்குளிர்ந்து பாராட்டினார்கள். கலெக்டர் துரை எல்லாவற்றையும் கேட்டார்.
ஒருநாள் இரவு சுப்பையர் வழக்கம்போலத் தம்முடைய வீட்டுத் திண்ணையிலே படுத்திருந்தார். பகலிலும் இரவிலும் யாவருக்கும் அன்னமிட்டபின்பு அகாலத்தில் யாரேனும் பசியோடு வந்தால் அவர்களுக்கு உதவும்பொருட்டு உணவு வகைகளைத் தனியே வைத்திருக்கச் செய்வது அவருடைய வழக்கம். சில சமயங்களில் மழை முதலியவற்றால் துன்புற்று வழிநடைப் பிரயாணிகள் நள்ளிரவில் வருவார்கள். அவர்களுடைய பசியைப் போக்குவதற்கு அவ்வுணவு உதவும்.
சுப்பையர் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது நெடுந்தூரத்திலிருந்து, “சாமீ! சாமீ!” என்ற ஒரு சத்தம் கேட்டது. அது சுப்பையருடைய தூக்கத்தைக் கலைத்தது. அவர் விழித்தெழுந்து சத்தம் கேட்கும் வழியே சென்றார். அக்கிரஹாரத்தின் கோடியிலிருந்து யாரோ ஒருவன், “சாமீ! சாமீ!’ என்று கத்திக் கொண்டிருந்தான்.
“யாரப்பா அது? ” என்று கேட்டார் சுப்பையர்.
“சாமீ! நான் பக்கத்திலுள்ள ஊர், வேறு ஊருக்குப் போய்த் திரும்பி வருகிறேன். பசி தாங்க முடியவில்லை. இவ்வளவு தூரம் நடந்து வந்தேன்; மேலே அடியெடுத்து வைக்க முடியவில்லை ” என்றான்.
“அப்படியானால், சற்று நேரம் இங்கே இரு; இதோ வருகிறேன்” என்று சொல்லிச் சுப்பையர் தம் வீட்டுக்கு வந்தார். வந்து வெளிக்கதவைத் திறக்கச் செய்து சமையலறையிற் புகுந்தார். அங்கிருந்த கறி, குழம்பு, ரஸம், மோர் முதலியவற்றைத் தனித்தனியே தொன்னைகளிலும் கொட்டாங்கச்சிகளிலும் எடுத்து, அன்னத்தை ஒரு பெரிய மரக்காலில் போட்டு அதன் மேல் கறி முதலியவற்றை வைத்து மேலே இலையொன்றால் மூடினார். அப்படியே அதை எடுத்துக்கொண்டு தெருவின் கோடிக்கு வந்து, “இந்தா அப்பா! இந்த மரக்காலில் சாதம், குழம்பு, கறி, ரஸம், எல்லாம் வைத்திருக்கிறேன். அதோ இருக்கிறதே, அந்த *3வாய்க்காலுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு உன் ஊருக்குப் போ. முடியுமானால் மரக்காலை நாளைக்குக் கொண்டுவந்து கொடு; இல்லாவிட்டால் நீயே வைத்துக்கொள்” என்று சொல்லி அந்த மரக்காலைக் கீழே வைத்தார்.
அவன் அதை எடுத்துக்கொண்டு, “சாமீ! உங்களைத் தெய்வம் குறைவில்லாமல் காப்பாற்றும்; தர்மம் தலை காக்கும்” என்று வாழ்த்திவிட்டுச் சென்றான். அவனுடைய பேச்சில் ஒருவிதமான நாக்குழறல் இருந்தது; “பாவம்! பசியினால் பேசக்கூட முடியவில்லை! நாக்குக் குழறுகிறது! என்று சுப்பையர் எண்ணி இரங்கினார். அவன் பசியைத் தீர்க்க நேர்ந்தது குறித்து மகிழ்ந்து வீடு வந்து சேர்ந்தார்.
லாலுகுடியில் ‘முகாம்’ செய்திருந்த கலெக்டர் மேற்சொன்ன நிகழ்ச்சி நடைபெற்றதற்கு மறுநாள் தம்மிடம் வரவேண்டுமென்றும், தாம் விசாரணை செய்யவேண்டுமென்றும் சுப்பையருக்கு உத்தரவு முன்பே அனுப்பியிருந்தார். விசாரணை நாளன்று சுப்பையர் உரியகாலத்தில் செல்லாமல் நேரம் கழித்துச் சென்றார்.
அவர் கலெக்டர் துரையின் முன் நிறுத்தப்பட்டார். நீர்க்காவி ஏறிப் பழுப்பு நிறமாயிருந்த அவர் வஸ்திரம் இடையிடையே தையலையுடையதாயும், சில இடங்களில் முடியப்பட்டும் இருந்தது; அவருடைய உடம்பில் விபூதி விளங்கியது; மார்பில் ருத்திராட்ச மாலை இருந்தது. அவர் நேரம் கழித்து வந்ததனாற் கோபம் கொண்டவரைப் போல் இருந்தார் கலெக்டர்.
முகத்திற் கோபக்குறிப்புப் புலப்பட்டது; “இவரா சுப்பையர்?” என்று கேட்டார் துரை.
அருகிலிருந்த தாசில்தார், “ஆமாம்!” என்றார்.
கலெக்டர், ” இவ்வளவு ஏழையாக இருப்பவரையா நீர் பெரிய பணக்காரரென்றும், வரிப்பணம் அதிகமாகத் தரவேண்டுமென்றும் எழுதியிருக்கிறீர்?” என்று கேட்டார்.
தாசில்தார்: இதெல்லாம் வேஷம். இப்படி வந்தால் துரையவர்கள் மனமிரங்கி வரியை வஜா செய்யக் கூடுமென்ற வஞ்சக எண்ணத்தோடு வந்திருக்கிறார்.
கலெக்டர் அவரைக் கையமர்த்திவிட்டுச் சுப்பையரைப் பார்த்து, “நீரா ஆங்கரைச் சுப்பையர்?” என்று கேட்டார்.
சுப்பையர்: ஆம்.
கலெக்டர்: நீர் ஏன் சரியான காலத்தில் வரவில்லை? சர்க்கார் உத்தரவை அலக்ஷியம் செய்யலாமா?
சுப்பையர்: துரையவர்கள் கோபித்துக்கொள்ளக் கூடாது: காலையில் எழுந்து ஸ்நானம் செய்து பூஜையை முடித்துக்கொண்டு நான் வருகிறவர்களுக்கு ஆகாரம் செய்விப்பது வழக்கம். இன்று அந்த வழக்கப்படியே யாவரும் போஜனம் செய்தபிறகு வந்தேன்.
கலெக்டர்: உம்முடைய வரிப்பணம் அதிகமாகப் பாக்கி இருக்கிறதே, தெரியுமா??
சுப்பையர்: தெரியும், என்மேல் வஞ்சகம் இல்லை; நிலம் சரியானபடி விளையாமையால் வரிப்பணத்தை என்னால் இப்பொழுது செலுத்த முடியவில்லை.
கலெக்டர்: அன்னதானம் மட்டும் எப்படிச் செய்கிறீர்?
சுப்பையர்: கிடைக்கும் நெல்லையெல்லாம் வைத்துக்கொண்டு செய்கிறேன். முன்பு அன்னதானம் செய்தது போக மிஞ்சுவதில் வரியைச் செலுத்துவேன். இப்பொழுது அது முடியவில்லை. அன்னதானத்திற்கே போதாமையால் என் வீட்டு நகைகளை அடகு வைத்துக் கடன் வாங்கியிருக்கிறேன்; சிலவற்றை விற்கவும் செய்தேன்.
கலெக்டர்: இவ்வளவு கஷ்டப்பட்டு நீர் அந்த அன்னதானத்தை ஏன் செய்யவேண்டும்?
சுப்பையர்: அது பரம்பரையாக எங்கள் குடும்பத்தில் நடந்து வருகிறது.
கலெக்டர்: அன்னம் போடுவது பகலிலா ? இரவிலா?
சுப்பையர்: இரண்டுவேளையும் போடுவதுண்டு. பாதசாரிகளாக வருகிறவர்கள் பசியோடு எப்போது வந்தாலும் போடுவது வழக்கம்.
கலெக்டர்: எந்தச் சாதியாருக்குப் போடுவீர்?
சுப்பையர்: பிராம்மணருக்கும் மற்றச் சாதியாருக்கும் அவரவர்களுக்கு ஏற்ற முறையில் போடுவோம். பசித்து வந்தவர்கள் யாரானாலும் அன்னமிடுவேன்.
கலெக்டர்: எல்லருக்கும் போடுவதுண்டா?
சுப்பையர்: ஆகா, போடுவதுண்டு, எல்லோரும் சாப்பிட்ட பிறகு போடுவோம்.
கலெக்டர்: இதுவரையில் அப்படி எத்தனை தரம் வேற்று சாதியாருக்கு போட்டிருக்கிறீர்?
சுப்பையர்: எனக்கு நினைவில்லை; பலமுறை போட்டதுண்டு.
கலெக்டர்: சமீபத்தில் எப்போது போட்டீர்?
சுப்பையர்: நேற்றுக் கூட ஒரு வேற்று சாதிக்காரன் பாதிராத்திரியில் பசிக்கிறதென்று வந்தான்; சாதம் கொடுத்தேன்.
கலெக்டர்: அப்படியா! என்ன என்ன கொடுத்தீர்? எல்லாரும் சாப்பிட்டு மிச்சமான சோற்றையா கொடுத்தீர்?
சுப்பையர்: அகாலத்தில் யாராவது வந்தால் உபயோகப்படுமென்று ரசம், குழம்பு முதலியவற்றிலும் ஓரளவு வைத்திருப்பது வழக்கம். ஆதலால் நேற்று வந்தவனுக்கு அன்னம், கறி, குழம்பு, ரஸம், மோர் எல்லாம் கொடுத்தேன்.
கலெக்டர்: இலை போட்டா சாப்பாடு போட்டீர்?
சுப்பையர்: இல்லை; அது வழக்கமில்லை. ஒரு மரக்காலில் அன்னத்தை வைத்து, அதன்மேல் தனித்தனியே தொன்னையிலும் கொட்டாங்கச்சிகளிலும் குழம்பு முதலியவற்றை வைத்துக் கொடுத்தேன்.
கலெக்டரோடு வந்திருந்த உத்தியோகஸ்தர்கள் யாவரும் இவ்வளவு விரிவாகக் கலெக்டர் விசாரணை செய்வதை நோக்கி வியப்புற்றார்கள். தாசில்தார், “எல்லாம் பொய்” என்று சொல்லி முணுமுணுத்துக் கொண்டேயிருந்தார்.
கலெக்டர்: உமக்கு அந்த ஆளை தெரியுமா?
சுப்பையர்: இருட்டில் இன்னாரென்று தெரியவில்லை.
கலெக்டர்: அவனிடம் கொடுத்த மரக்காலைக் கொண்டு வந்து காட்டுவீரா?
சுப்பையர்: அதை அவன் இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை.
கலெக்டர்: அப்படியானால் நீர் அவனுக்கு அன்னம் கொடுத்ததற்குச் சாக்ஷி வேறு என்ன இருக்கிறது?
சுப்பையர்: சாக்ஷி எதற்கு? தெய்வத்துக்குத் தெரியும். அப்படி நான் செய்ததை வேறு யாரிடம் சொல்லிக் கொள்ள வேண்டும்?
கலெக்டர்: அந்த மரக்காலை அவன் திருப்பிக் கொடாவிட்டால் என்ன செய்வீர்?
சுப்பையர்: ‘முடியுமானால் கொடு, இல்லாவிட்டால் நீயே வைத்துக்கொள்’ என்று நானே சொல்லிக் கொடுத்தேன்; அவன் கொடுக்காவிட்டால் எனக்கு ஒன்றும் நஷ்டமில்லை.
கலெக்டர், “அப்படியா!” என்று சொல்லிக் கொண்டே மேஜை முழுவதையும் தரை வரையில் மறைத்து மூடப்பட்டிருந்த துணியை மெல்லத் தூக்கினார். என்ன ஆச்சரியம்! அதன் கீழே ஒரு மரக்கால் வைக்கப் பட்டிருந்தது. “நீர் கொடுத்த மரக்கால் இதுதானா பாரும்!” என்று சொல்லித் துரை அதை எடுத்து மேஜையின்மேல் வைத்தார்.
சுப்பையர் திடுக்கிட்டார்; தம் கண்களையே அவர் நம்பமுடியவில்லை. கண்ணைத் துடைத்துத் துடைத்துப் பார்த்தார். தாம் முதல்நாள் பாதிராத்திரியில் ஒருவனிடம் கொடுத்த மரக்கால் அங்கே வந்ததற்குக் காரணம் தெரியவில்லை. அங்கே இருந்த யாவரும் ஒரு நாடகத்தில் மிகச் சுவையான காட்சியொன்றில் ஈடுபட்டு மெய்ம்மறந்தவர்போல் ஆனார்கள்.
“என்ன, பேசாமல் இருக்கிறீர்! ராத்திரி நீர் செய்த அன்னதானத்துக்குச் சாக்ஷியில்லை யென்று எண்ணவேண்டாம். பாதி ராத்திரியில் வந்த ஆள் நான்தான்! நீர் கொடுத்த மரக்கால் இதுதான்! இந்த இரண்டு சாக்ஷியும் போதாவிட்டால், என்னுடன் அங்கே வந்த குதிரைக்காரன் வேறு இருக்கிறான். நீர் சொன்னதெல்லாம் உண்மையே. உம்முடைய வீட்டு அன்னத்தையும் கறி முதலியவற்றையும் நான் ருசி பார்த்தேன். உம்முடைய ஜன்மமே ஜன்மம்” என்றார் கலெக்டர்; அவருடைய கண்களில் நீர் ததும்பியது; உள்ளத்தில் உண்டான உருக்கம் அவர் தொண்டையை அடைத்தது. சிறிது நேரம் அவராற் பேசமுடியவில்லை. பிறகு, “உமக்கு எந்தக் காலத்திலும் குறைவே வராது. தெய்வம் உம்மைக் குறைவில்லாமல் காப்பாற்றும்; தர்மம் தலை காக்கும். உமக்காகத் தான் மழை பெய்கிறது” என்றார்.
அந்த வார்த்தைகளின் தொனியில் முதல்நாள் இரவு வந்த நபர் , ‘தெய்வம் உங்களைக் குறையில்லாமல் காப்பாற்றும்; தர்மம் தலைகாக்கும்’ என்று சொன்ன வார்த்தைகளின் தொனி ஒலிப்பதை அப்போதுதான் சுப்பையர் உணர்ந்தார்; தமிழைப் புதிதாகக் கற்றுக்கொண்ட வேற்று நாட்டாராகிய துரையின் பேச்சானது, பசியினால் நாக்குழறிப் பேசுபவனது பேச்சைப் போல ராத்திரியில் தமக்குத் தோன்றியதென்பதையும் அறிந்தார். அவருக்கு இன்னது சொல்வதென்று தோற்றவில்லை.
“அப்படியே அந்த நாற்காலியில் உட்காரும்! நீர், வரிப்பணத்தை மோசம் செய்ய மாட்டீரென்பது எனக்கு நன்றாகத் தெரியும். நானும் உம்முடைய மரக்காலை மோசம் செய்யாமல் இதோ கொடுத்துவிட்டேன்; எடுத்துக்கொள்ளும். உம்முடைய தர்மம் குறைவின்றி நடைபெற இந்த வரிப்பணம் உதவுமானால், அதை விட இந்த ராஜாங்கத்துக்கு வேறு லாபம் இல்லை. உம்மால் எப்போது முடியுமோ, அப்போது வரியைக் கட்டலாம்! உம்மை ஒருவரும் நிர்ப்பந்தம் செய்யமாட்டார். நான் இந்த ஜில்லாவில் இருக்கும்வரையில் உமக்கு ஒருவிதமான துன்பமும் நேராது” என்றார் கலெக்டர். பிறகு தாசில்தாரை நோக்கி,”உம்முடைய வார்த்தையை நான் நம்பியிருந்தால் பெரிய பாவம் செய்தவனாவேன். இனிமேல் இந்த மாதிரி ஒருவரைப் பற்றியும் தீர விசாரியாமல் நீர் எழுதக்கூடாது” என்று கண்டித்துக் கூறினார்.
மேஜைத் துணியாகிய திரையை தூக்கியதும், அம்மேஜைக்கடியில் அவ்வந்தண வள்ளலது அன்னதானத்தை அளந்த மரக்கால் இருந்ததும், அதனைத் துரை எடுத்து மேஜையின்மேல் வைத்து மனமுருகிப் பேசிக் கண்களில் நீர் ததும்ப வீற்றிருந்ததுமாகிய அக்காட்சிகளை நம்முடைய அகக்கண்ணால் நோக்கும்போது நமக்கே மயிர் சிலிர்க்குமாயின், அங்கேயிருந்து கண்ணால் பார்த்தவர்களுடைய உள்ளமும் உடலும் எப்படியிருந்திருக்குமென்பதைச் சொல்லவும் வேண்டுமா?
(கும்பகோணம் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதராக இருந்த வித்துவான் ஸ்ரீ சி. தியாகராச செட்டியாரவர்கள், 1833-வருஷம் திருவானைக்காவில், திருமஞ்சனக் காவேரிக்கரையில், ஆங்கரைச் சுப்பையருடைய பரம்பரையினர் சிலரைக் கண்டு பேசிக் கொண்டிருந்தனர். நானும் உடனிருந்தேன். அப்பொழுது செட்டியார், அவர்களைப் பாராட்டிவிட்டு இவ்வரலாற்றைக் கூறினார். அவர்களும் சொன்னார்கள். மேற்படி சுப்பையருடைய பெண்வழியிற்றோன்றிய மணக்கால் மகாஸ்ரீ கந்தசாமி ஐயரென்பவர்களாலும் சமீபத்தில் சில விஷயங்கள் அறிந்து கொண்டேன்.)

source::::: input from one of my contacts …..pl read and share….

Natarajan

Let the Garbage Disappear from Your Mind and Feel Relaxed !!!

source::::: unknown…input from one of my friends…..

A famous spiritualist Junaid, was walking
through the market-place with his disciples.
They saw a man dragging a cow by a rope.

Junaid told the man to wait and asked
his disciples to surround them.
“I am going to teach you something”
and continued…
“Tell me who is bound to whom?
Is the cow bound to this man or
the man is bound to the cow?”

The disciples said without hesitation, “Of
course the cow is bound to the man! The
man is the master. He is holding the rope.
The cow has to follow him wherever he
goes. The man is the master and the cow is
the slave.”

“Now watch this”, said Junaid and took
scissors from his bag and cut the rope. The
cow ran away from the master, and the man
ran after his cow.

“Look, what is happening”, said Junaid. “Do
you see who the Master is? The cow is not at
all interested in this man. The cow in fact,
is trying to escape from this man.”

This is the case with our MIND. All the
non-sense that we carry inside is not
interested in us. WE ARE INTERESTED IN
IT, we are keeping it together somehow
or the other. We are going crazy trying to
keep it all together under our control.

The moment we lose interest in all
the garbage filled in our head, the
moment we understand the futility of it,
it will start to disappear. Like the cow, it
will escape and disappear.”

We can allow to disappear all the unwanted things
in our mind and feel relaxed.

“Have A Great Day”

Natarajan

சில நேரங்களில் சில மனிதர்கள் …..

source:::::unknown…. input from one of my friends….

Natarajan

சில நேரங்களில் சில மனிதர்கள் !

நியூயார்க் நகரத்தின் சுரங்கப்பாதை ஒன்றில் பிரபல எழுத்தாளர் ஒருவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் அமைதியாக அமர்ந்திருந்தார். ஆட்கள் அதிகமில்லாத அந்த இடத்தில் ஓர் அமைதியான சூழ்நிலை நிலவியது. சிலர் கண்களை மூடி அமர்ந்திருந்தார்கள். சிலர் பத்திரிகைகள் படித்தபடி அமர்ந்திருந்தார்கள். திடீரென்று அங்கு ஒருவர் தன் இரண்டு குழந்தைகளுடன் வந்தார். அவர் அந்த எழுத்தாளர் அருகே கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்தார். அந்தச் சிறுவர்கள் இருவரும் ஆறு வயதைத் தாண்டாதவர்கள். அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் அங்கிருந்த அமைதி காணாமல் போயிற்று. குழந்தைகள் சத்தம் போட்டு விளையாட ஆரம்பித்து, பின்னர் சண்டையிட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் பொருட்களை எடுத்து வீசிக்கொள்ள ஆரம்பித்தனர். அந்த தந்தையோ அந்தச் சிறுவர்களைக் கண்டிப்பதாகத் தெரியவில்லை. கண்களைத் திறக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார்.

அங்கு அமர்ந்திருந்த மற்றவர்கள் எரிச்சலுடன் அவரைப் பார்த்ததை அவர் அறியவில்லை. அந்த எழுத்தாளரோ தன்னம்பிக்கை, பொறுமை பற்றியெல்லாம் நிறைய எழுதிக் குவித்த எழுத்தாளர். அவரே பொறுத்து பொறுத்துப் பார்த்து ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தன்னருகே கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்திருந்த அந்த நபரிடம் சொன்னார். “உங்கள் பிள்ளைகள் மற்றவர்களைத் தொந்தரவு செய்கிறார்கள். அவர்களைக் கொஞ்சம் கட்டுப்படுத்துங்களேன்”.

அந்த நபர் கண்களை மெதுவாகத் திறந்தார். “ஆமாம் ஏதாவது செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவர்கள் தாய் இறந்து விட்டாள். அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அவள் உடலைத் தர சிறிது நேரம் ஆகும் என்றதால் அங்கிருக்க முடியாமல் இங்கு வந்தேன். இனி என்ன செய்வது என்று தெரியவில்லை என்று நினைக்கிறேன்… மன்னிக்கவும்”

அந்த எழுத்தாளர் அதுவரை அந்த நபர் மீதும் அந்தச் சிறுவர்கள் மீதும் கொண்டிருந்த கோபமெல்லாம் ஒரு கணத்தில் காற்றாய் பறந்து போயிற்று. அதற்குப் பதிலாக இரக்கமும் பச்சாதாபமும் மனத்தில் எழ அவர் மனைவி இறந்ததற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு ஏதாவது உதவி தேவையா என்று மனதாரக் கேட்டார்.

அந்த எழுத்தாளர் செயல்திறன் மிக்க மனிதர்களின் ஏழு பழக்கங்கள் என்ற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதிய ஸ்டீஃபன் ஆர். கோவே. இந்த நிகழ்ச்சியில் அந்த சிறுவர்களின் செயல்கள் மாறவில்லை. அந்த அமைதியான சூழ்நிலை மீண்டும் திரும்பவில்லை. ஆனால் அந்தக் குழந்தைகளும், அவர்கள் தகப்பனும் இருக்கும் சூழ்நிலை விளங்கியதும் அவர் மனநிலை முற்றிலுமாக மாறிவிட்டது.

இன்னொரு நிகழ்ச்சி
கராத்தே, குங்ஃபூ கலைகளில் எல்லாம் மிகவும் தேர்ச்சி பெற்ற ஒரு வீரர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் தியான வகுப்புகளுக்கும் தொடர்ந்து செல்பவர். ரயிலில் நன்றாகக் குடித்துவிட்டு ஒருவன் ரயில் பயணிகள் ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு வம்பு செய்து சண்டையிட்டுக் கொண்டு இருந்தான். நேரமாக ஆக அவனுடைய வார்த்தைப் பிரயோகங்கள் மிக மோசமாகப் போய்க் கொண்டு இருந்தன. ஒருசிலர் திரும்பப் பேசினர். ஒருசிலர் முகம் சுளித்துக் கொண்டு வேறிடத்திற்குப் போய் அமர்ந்து கொண்டார்கள். நீண்ட பயணமாதலால் இதை நிறைய நேரம் பார்க்க நேர்ந்த கராத்தே வீரருக்கு கோபம் பொங்கி வந்தது. போய் இரண்டு தட்டு தட்ட வேண்டும் என்று நினைக்கையில் அத்தனை நேரம் அமைதி காத்த இன்னொரு பயணி அந்தக் குடிகாரனை நோக்கிச் சென்றதைக் கண்டு நிதானித்தார்.

அந்தப் பயணியும் தன்னைப் போலவே அடிக்கத் தான் செல்கிறார் என்று நினைத்த கராத்தே வீரருக்கு வியப்பு ஏற்படும் வண்ணம் அந்த நபர் குடிகாரன் அருகில் அமர்ந்தார். கனிவுடன் அவனிடம் கேட்டார்.

“உனக்கு என்ன பிரச்சனை?”

அந்தக் குடிகாரன் அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை போலத் தெரிந்தது. திகைத்துப் போய் அவரை ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லாமல் பார்த்த அவன் கண்களில் நீர் திரண்டது அவர் தோளில் சாய்ந்துகொண்டு விம்மி அழ ஆரம்பித்தான். அழுகையினூடே தனக்குத் திடீரென்று வேலை போன செய்தியைச் சொன்னான். தம் சம்பாத்தியத்தை நம்பி வீட்டில் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பதைச் சொன்னான். அந்த முதலாளியின் இரக்கமற்ற குணத்தைச் சொன்னான். சொல்லி அழுது முடித்த பின் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த நண்பர் குடிப்பதால் எந்தப் பிரச்சினையும் வளருமே தவிர தீராது என்று சொன்னார். முதலாளி மேல் இருந்த கோபத்தை சக பயணியிடம் காட்டுவது சரியல்ல என்று சொன்னார். குடிப்பதற்கு பதிலாக அடுத்த வேலை எங்கு கிடைக்கும். அதற்காக யாரை அணுகலாம் என்று யோசித்திருந்தால் ஒரு வழி கிடைத்திருக்கலாம் என்று சொன்னார்.

அவர் பேசப் பேச அந்தக் குடிகாரன் அடைந்த மாற்றத்தைக் கண்ட கராத்தே வீரர் அது தனக்குப் பெரிய படிப்பினையாக அமைந்தது என்று ஒரு கட்டுரையில் எழுதியதை நான் படித்தேன். அவர் எழுதியிருந்தார் “அந்த நபர் ஒரு நிமிடம் என்னை முந்திக் கொண்டு அந்தக் குடிகாரனிட்ம போயிருக்காவிட்டால் கண்டிப்பாக நன்றாக அவனை அடித்து காயப்படுத்தி இருப்பேன் என்பதில் சந்தேகமில்லை. முதலிலேயே வேலைபோன அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் என்னால் மேலும் துக்கம் விளைந்திருக்கும். அவனுடைய செய்கைகளுக்குப் பின் உள்ள துக்கத்தை அந்த நபர் உணர்ந்திருக்க வேண்டும். அவருடைய கனிவான செய்கை அவன் புண்ணுக்கு மருந்தாக அமைந்தது. அவன் அமைதியடைந்தான். அவன் இறங்க வேண்டிய இடம் வரை அவனிடமிருந்து அதற்குப் பிறகு ஒரு சத்தமோ, தொந்தரவோ இருக்கவில்லை. அதைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லாருக்கும் அவன் மீதிருந்த எரிச்சலும் கோபமும் விலகியது என்பதை சொல்லத் தேவையில்லை”.

முதல் நிகழ்ச்சியில் இருக்கும் நியாயம் இரண்டாவது நிகழ்ச்சியில் இல்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அந்த இரண்டாவது நிகழ்ச்சியிலும் அந்த செயலுக்குப் பின்னால் ஒரு காரணம் இருப்பதாக உணர்ந்த ஒரு மனிதர் காட்டிய கனிவு எப்படி அந்தச் சூழ்நிலையை அடியோடு மாற்றியது என்பதைப் பாருங்கள்.

நமக்குத் தவறாகத் தோன்றும் பல செயல்களுக்குப் பின்னால் பல ஆழமான காரணங்கள் இருக்கின்றன. சில காரணங்கள் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிந்தவையாக இருக்கலாம். சில காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால் அந்தக் காரணங்களை அறியும்போது புரிந்துகொள்ளல் சாத்தியமாகிறது. மன்னித்தல் சுலபமாகிறது.

எப்போதும் ஒரே மாதிரி நடந்துகொள்ள மனிதன் எந்திரமல்ல. எந்திரங்கள்கூட பழுதாகும் போது சில நேரங்களில் சில மனிதர்கள் நம் எதிர்பார்ப்புக்கு எதிர்மாறாக நடந்து கொள்வது அதிசயமல்ல. அது போன்ற சமயங்களில் அவர்கள் மீது கோபம் கொள்வதற்குப் பதிலாக ஏதாவது காரணம் இருக்கலாம் என்ற சிந்தனை நமக்குள் எழுமானால் அதைப் பெரிதுபடுத்தாமல் நகர்கிற பக்குவம் நமக்கு வந்துவிடும்.