வாரம் ஒரு கவிதை ….” கண் திறப்பாரா கடவுள் ” ?

கண் திறப்பாரா கடவுள் ?
++++++++++++++++++++++++++
வேண்டாத கடவுள் இல்லை ..செய்யாத பிரார்த்தனை
இல்லை ! கண் திறந்து பார்ப்பாரா கடவுள் ?
பூஜை அறையில் வேண்டி நின்றேன் கடவுளிடம்
இன்று காலை !
இதோ தந்து விட்டார் வரம் என் கடவுள் !
வாட்டர் டேங்கர் என் வீட்டு வாசலில் கொடுக்கிறது
ஒரு குரல் … குழல் இனிதல்ல , யாழ் இனிதல்ல
வாட்டர் டேங்கர் ஒலிப்பானே என் செவிக்கு
தேவ கானம் இன்று !
நாட் கணக்கில் மாதக்கணக்கில் காத்திருந்தேன்
கண் திறந்து விட்டார் கடவுள் இன்று !
நிறைந்தது என் வீட்டு வாட்டர் டேங்க்
மட்டும் அல்ல இன்று!  என் மனதும் தான் !!!
K .நடராஜன்
29/05/2019