தவறை திருத்துவதில் தந்தையாக … தோல்வியில் துவளாதே என்று தட்டிக் கொடுப்பதில் ஒரு
தோழனாக ….எங்கள் வெற்றியை வாழ்த்துவதில் ஒரு தாயாக …
அறிவு போதிப்பதில் போதிமரமாக …. எங்கள் வாழ்க்கையின் வழிகாட்டியாக ..
உங்கள் உளியால் எங்களை எல்லாம் செதுக்கி வைத்தீர்கள் ஒரு சிற்பமாக !!!
ஆசிரியர் உங்கள் உதவியால் உயர்ந்தோம் நாங்கள் …
வாழ்வை கற்றோம் …வளம் பல பெற்றோம் !!!
உங்களாலே நாங்கள் மனிதர் ஆனோம்
உங்களிடமிருந்து நாங்கள் மனித நேயம் கற்றோம் …
எங்களை உயர்த்திய உங்களை … எங்கள்
உயிர் உள்ளவரை மறவோம் ….
இன்றும் , என்றும் வணங்குவோம் உங்களை !!!!!
source :::: input from a daily on Teachers Day….
Dedicated to my Dear Bro. Anselm and to all the other teachers on this Teachers Day…
natarajan