
சாக்கடையில் விழுந்தாலும்
சந்தனத்தில் விழுந்தாலும்
எதுவுமே –
ஒட்டிக் கொள்ளாமல்
உள்ளது உள்ளபடியே
எழுந்து வருகிறது –
என்னுடைய நிழல்.
நிழலுக்கு இருக்கும் – இந்த
நிட்காமிய ஞானம் – என்
உடலுக்கும் வாய்க்குமாயின்-
ஆதிசங்கரரைப் போல்
அடியேனுக்கும் –
கள்ளும் ஒன்று;
காய்ச்சிய ஈயமும் ஒன்று!’——கவிஞர் வாலி
source:::::DINAMANI .COM
Natarajan