வாரம் ஒரு கவிதை….” புதியதோர் உலகம் செய்தோம் ” !!!

புதியதோர் உலகம் செய்தோம் !
……………………….
புதியதோர் உலகம்..படைக்க முடியுமா நம்மால் ? வியந்தது  நாம் !
நம்மைப் படைத்தவனே  வியக்கும் வகையில்  புது உலகம் செய்து
காட்டியதும் நாமே !
எல்லாம் கணினி மயம்  நம்  புதிய  உலகத்தில் ..கணினி செய்த
மாயம் , உலகம் இப்போ நம்ம வரவேற்பு அறையில் !
நம்ம  வங்கி கணக்கும் கூட இப்போ நம்ம கை பேசியில் !
“தட்டுங்கள் திறக்கப்படும் …கேளுங்கள் கொடுக்கப்படும்”
 இதுதான்  கணினியின் தாரக மந்திரம் !
விடை இல்லாத கேள்வி   என்ற ஒன்று கணினியில்  இல்லை
 இன்று !
கணினியின் வலையில் சிக்கிய உலகம் சுருங்கியது உண்மை…
சுருங்கியது உலகம் மட்டுமா ? இல்லை நம் உள்ளமும் சேர்ந்தா ?
வருகிறதே நம் மனதில் ஒரு சந்தேகம் … இது ஒரு கேள்வியும் கூட !
இந்த கேள்விக்கு மட்டும் கணினியிடம்  இல்லை விடை!
My Kavithai Published in ” Kavithai mani ” column in http://www.dinamani.com  on 28 Dec 2015.
Natarajan

Leave a comment