வாரம் ஒரு கவிதை ….” தாக்குங்கள் எங்களை ….” !!!

தாக்குங்கள் எங்களை ….
++++++++++++++++++++++++
படையெடுத்து வாருங்கள் …அணிவகுத்து
வாருங்கள்  எங்களைத்  தாக்க !
குறி பார்த்து தாக்குங்கள் எங்களை !
காத்திருக்கிறோம் நாங்கள் !
மிரண்டு ஓடி ஒளிய மாட்டோம் நாங்க !
திரண்டு வாருங்கள் கருமேகங்களே
“குண்டு ”  மழை  பொழிய !
மண்டியிட்டு உங்களை வணங்குவோம்
உங்கள் “குண்டு ” மழை எங்களை
முத்தமிடும் நேரம் !
தாக்குங்கள் எங்களை சீக்கிரம் !
K .நடராஜன்
22/06/2019

வாரம் ஒரு கவிதை ….” தண்ணீர் “

தண்ணீர் …
+++++++++++++
தண்ணீர் …தண்ணீர்  நாடகமும்
திரைப்படமும்  பார்த்த நேரம் புரியவில்லை
தண்ணீரின் அருமை பெருமை !
திரை இயக்கத்தின் பெருமை பேசி
அப்போதே மறந்து விட்டோம் தண்ணீரின் அருமை !
தண்ணீர் தண்ணீர் என்று கலங்கினான்
இந்த மண்ணின் விவசாயி வாடிய அவன்
பயிர்  பார்த்து ….அப்போதும் தெரியவில்லை
நகரவாசி  நமக்கு  தண்ணீரின் அருமை !
காற்று மட்டும் வரும் தண்ணீர் குழாய் ,
வறண்டு கிடைக்கும் குளம் குட்டை ஏரி,
அரண்டு மிரண்டு இருக்கு நம் நகரமே இன்று !
“தண்ணீர் இல்லை எங்க வீட்டிலும்  ” என்னும்
ஒரே ஓரு வார்த்தையில் இணைந்துவிட்டோம் நகர
வாசிகள் அனைவரும் இன்று! சாதி ,மத ,மொழி
இனம் பேதம் ஏதும் இல்லை இந்த ” இணைப்புக்கு ” !
“தண்ணீர் இல்லை” என்னும் விதியால் இணைந்த
நாம்  சாதி ,மதம் ,  மொழி பேதம் பாராமல்
மனதாலும் இணைவது எப்போது ?
K.Natarajan
in http://www.dinamani.com dated 19/06/2019

வாரம் ஒரு கவிதை ….” சுய தரிசனம் “

சுய தரிசனம்
++++++++++++++
கண்ணாடியில் பார்க்கிறோம் நம்
முகத்தை  தினமும் .. திரும்பத் திரும்பப்
பார்த்து ரசிக்கிறோம் …அது சுய தரிசனம் !
கண்ணாடியில் தெரிவது இல்லை நம் சுய ரூபம் !
பார்த்தவுடன் தெரிவதில்லை நம்
சுய ரூபம் தன் மூக்கு கண்ணாடி
வழியே நம்மைப் பார்க்கும் அடுத்தவருக்கும் !
நம் கண்ணாடியும் காட்டுவதில்லை
நம் சுய ரூபத்தை ! அடுத்தவரும்
பார்ப்பதில்லை நம் சுய ரூபத்தை அவர்
கண்ணாடி வழியே !
நம்மைப் படைத்த இறைவனுக்கு மட்டும்
தெரியும் அவன் வசிக்க ஏற்ற இடமா நம்
இதயம் என்று ! நம் சுய ரூபம் என்ன என்று !
இறைவன் வசிக்க ஏற்ற இடமாக நம்
இதயத்தை மாற்ற தேவை ஒரு சுய
பரிசோதனை …சுய தரிசனம் நமக்கு !
இதயத்தில் இறைவன் குடி புகுந்து விட்டால்
ஒரு கட்டண தரிசனமும்  தேவை இல்லையே
நமக்கு அந்த இறைவனை தரிசிக்க !
K.Natarajan
in http://www.dinamani.com  dated 12/06/2019

வாரம் ஒரு கவிதை ….” சித்திரம் பேசுதடி …”

சித்திரம் பேசுதடி …
+++++++++++++++++++
 நீல வண்ண சித்திரம் என்னை
விண்ணிலிருந்து  பார்த்து ரசிக்கும்
மனிதா நீ மண்ணில் என்னை சிதைப்பது
என்ன நியாயம் ?
உன் பூமித்தாய் கேட்கிறேன் உன்னை
உரிமையுடன் ! நீ இருக்கும் சோலைவனம்
விட்டு வேற்று கிரகத்துக்கு செல்கிறேன்
என்கிறாயே ! உன் விண்வெளி போட்டியிலும்
பூமி நான் சரித்திரம் படைப்பேன்  மனிதா !
ஏன் தெரியுமா …சித்திரம் நான் உனக்கு
மட்டும் சொந்தம் இல்லை … உன் பிள்ளைகளுக்கும்
நான் சொந்தம் ! புரிந்து நடந்து கொள் மனிதா !
நடராஜன்.K
in  http://www.dinamani.com  dated 06/062019
06/06/2019

Morning Breakfast for my Winged Guests at my Terrace …..

Every Day a  Group of pigeons wait for me to serve Food to them on their Table and Floor . of my Terrace.

On one such day i videographed their presence thro my mobile camera .

May like to see and Share

K.Natarajan

03/06/2019

 

 

 

வாரம் ஒரு கவிதை ….” கண்டெடுப்பின் காலக் குறிப்புகள் “

கண்டெடுப்பின் காலக்  குறிப்புகள்
=================================
கடலில் மட்டும் முத்துக்கள் இல்லை
இந்த மண்ணின் அடியிலும் புதைந்து
கிடக்குது நம் முன்னோர் வடிவமைத்த
நகரமும் கோயிலும் அழகு சிற்பங்களுடன்
காலத்தால் அழியாத அடையாள சின்னமாய் !
எந்த தொழில் நுட்பம்   இருந்தது நம் முன்னோருக்கு
அன்று ? ஆண்டுகள் பல கடந்தும் அவர் பேர்
சொல்லுதே இன்னும் !
கணிணி யுகத்தில் வாழும் நாம்  முறையாக
பதிவு செய்ய வேண்டும் நம் நாட்டின்
அருமை பெருமையை ஒரு பொக்கிஷமாக !
விட்டு செல்ல வேண்டும் நம் பெயர் சொல்லும்
பாத சுவடுகளை இனி வரும் தலை முறை
பின் தொடர்ந்து நடக்க !
இனம் மதம் மொழி தாண்டி நாம் இன்று
பதிக்கும் பாத சுவடு கல்லில் வடித்த சிற்பமாய்
அடையாளம் காட்டும் நம் புனித மண்ணை
ஒரு புதிய பூமியாக என்றென்றும் !
K.Natarajan   in http://www.dinamani.com dated  01/06/2019
01/06/2019

வாரம் ஒரு கவிதை ….” இரட்டையர் “

 

இரட்டையர்
++++++++++++
முகம் ஒத்துப் பிறக்கும் குழந்தைகள்
இரண்டு ….அவர் இரட்டையர் !
குழந்தைகள் முகம் பார்த்த உடன் தெரிந்து விடும்
அவர் இருவரும் இரட்டையர் என்று !
புறம் ஒரு முகம்  அகத்தில் வேறு முகம்
என்று இரு முகம் கொண்டு ஒரே ஒரு
முகம் மட்டும் வெளியில் காட்டும் மனிதர்
சிலரும் உண்டே  நம்மிடையே !
புரட்டி புரட்டிப் பேசும் இந்த “இரட்டியரை”
சொல்ல முடியுமா “இவர் இரட்டியர் ” என்று ?
Natarajan K   in http://www.dinamani.com  dated
22/05/2019

வாரம் ஒரு கவிதை ….” பார்த்து நடந்து கொள் …தம்பி “

 

பார்த்து  நடந்து கொள் …தம்பி !
+++++++++++++++++++++++++++++++
காசை தண்ணீர் போல செலவு செய்றான் பாரு
இப்படி ஒரு சொல் கேட்டோம் நாம் ஒரு காலம் !
இன்று காசு கொடுத்தாலும் தண்ணீர் இல்லை !
தெரு குழாயில் தண்ணீர் பிடித்து தாகம் தணித்த
காலம் மாறி கையில் வாட்டர் பாட்டிலுடன்
சுற்றுகின்றோம்  இன்று !
தண்ணீரை காசு போல கணக்கு பார்த்து செலவு
செய்யும் காலத்தில் நாம் இன்று !
தண்ணீருக்கு வந்த நிலைமை சுவாசிக்கும்
காற்றுக்கும் வர வேண்டாம் ..தம்பி !
பார்த்து நடந்து  கொள்  தம்பி ..
.
ஒரு வாரத்துக்கு  தேவையான  ஆக்ஸிஜன்
சிலிண்டர் ஒன்று இலவசம் உங்களுக்கு சுவாசிக்க
என்று தேர்தல் நேரத்தில் கட்சிகள் எல்லாம்
அறிவிக்கும் அவலம் நேர வேண்டாம் உன்
காலத்தில் !
பார்த்து நடந்து கொள் …தம்பி நீ !
K .நடராஜன்
17/04/2019