மனத்திற்கிட்ட கட்டளை
———————
நான் சொல்வதை கேள் நீ …அலையாதே இங்கும் அங்கும்
இட்டேன் கட்டளை நான் என் மனதுக்கு !
யாருக்கு யார் கட்டளை இடுவது ? கேட்டது என் மனம் !
அலைவதே என் வேலை …வேலை நிறுத்தம் நான் செய்தால்
நீ ஒரு ஜடம் ! தெரியுமா உனக்கு …சொன்னது மனம் !
நான் போகும் போக்கில் எல்லாம் நீ போக மட்டும்
நினைக்காதே …இதை மட்டும் நினைவில் வை நீ மனிதா !
மனம் நான் அறிவேன் நீ எந்த வழியில் பயணம் செய்ய
வேண்டும் என்று …இடுவேன் கட்டளை உனக்கு
நான் அடிக்கடி ! நடக்கவேண்டும் நீ என் சொல்படி !
மறக்க வேண்டாம் மனிதா நீ … நான் உனக்கிடும்
கட்டளை எல்லாம் அந்த இறைவன் உன்
மனத்திற்கிட்ட கட்டளையே !
Natarajan in http://www.dinamani.com dated 17th DEC 2017