அவ்வைப் பாட்டியின் கர்வபங்கம்….
அவ்வைப்பாட்டிக்கு தான்தான் அனைத்தையும்
கற்றுவிட்டதாக மண்டை கர்வம்.
அதே பாட்டிதான் கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று எழுதி வைத்தாள்
ஆனால் அது ஊருக்குதான் உபதேசம் போலும்.
கல்லாதவரை அவமதிப்பதில்
யாரும் அவளுக்கு நிகரில்லை போலும்.
அவள் ஒரு பாட்டில் கூறுகிறாள்.
கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து – தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி.
ஒரு காட்டில் மயில்கள் தன் அழகிய தோகையை விரித்து ஆடுவதைக் கண்ட வான்கோழி தன்னையும் மயில் போல பாவித்து அது தனக்கு உள்ள சிறகை விரித்து ஆடியதாம்.
அதில் என்ன தவறு.
அதை இழிவாக பேசுகிறாள் அவ்வைப் பாட்டி
இறைவன் படைப்பில் அனைத்துமே அழகுதான்.
அதை ரசிக்கும் பரந்த குணம் அவளுக்கு இல்லை.
இதை எதற்காக உதாரணம் காட்டுகிறாள் என்றால்
கல்லாதவன் கவி எழுதினால்
இதைப்போல் மட்டமாகத்தான் இருக்குமாம்.
கவி எழுதுவது என்பது இதயத்தில் தோன்றும்
உணர்சிகளின் வெளிப்பாடு .
அது ஊற்றுப்போல் வெளிப்படுவது.
அதற்க்கு வரைமுறைகள் கிடையாது
நாட்டுப்புறப் பாடல்களை இயற்றியவர்கள்
எந்த இலக்கணம் கற்றார்கள்?
கவி சக்ரவர்த்தி கம்பனே ஒரு ஏற்றம்
இறைப்பவனிடம் திணறிப் போனான்
என்பது வரலாறு.
க (கவிதைக்கு ) விதை (கலைமகளின் அருள்தான்)
என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள். .
தான் கற்றவர் என்ற கர்வம். அவளுக்கு.
ஆனால் இறைவனுக்கு அவனின்
எல்லா படைப்புகளும் ஒன்றுதான்.
அழகே உருவான முருகன். அவ்வைக்கு அளித்த அழகிய வடிவத்தை துறந்து காண்போர் வெறுக்கும் தொண்டு கிழவிபோல் வடிவை வேண்டிப் பெற்ற அவ்வையின் கர்வத்தை ஒடுக்க மனம் கொண்டான்.
அவள் நடந்து வரும் வழியில் ஒரு நாவல் மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான்.
பசியினால் களைத்து வந்த அவ்வை அவனைப் பார்த்து சிறுவனே கொஞ்சம் நாவல் மரத்தை உலுக்குகிறாயா ,நான் கொஞ்சம் நாவல் பழம் உண்டு பசியாறுகிறேன் என்றாள்
அப்போது அந்த சிறுவன் ,பாட்டி உனக்கு சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டான்
அவ்வை திடுக்கிட்டாள் .
பழத்தில் சுட்ட பழம், சுடாத பழம் என்று வகைகள் இருக்கிறதா என்று திகைத்தாள்
எனினினும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் சுட்ட பழமே போடு என்றாள்
சிறுவன் மரத்தை உலுக்கினான்.
நாவல் பழங்கள் உதிர்ந்தன
பழங்களை பொருக்கி கையில் எடுத்தாள் அவ்வை பாட்டி.
அதில் மணல் ஒட்டிக்கொண்டிருந்தது.
அதை வாயிற் வைத்து ஊதினாள் மணல்துகள் அகல.
உடனே அந்தசிறுவன் கேட்டான்
என்ன பாட்டி, பழம் சுடுகிறதோ வாயால் ஊதி சாப்பிடுகிறாய்.
ஒரு மாடு மேய்க்கும் சிறுவன்
தன்னை திணற வைத்துவிட்டானே என்று
அதிசயித்தாள்.
அப்போது சிறுவனே நீ யார் ?
தான் கற்றவள் கல்லாதவர்கள் மூடர்கள்
என்று நினைத்த உன்னை சோதிக்க வந்தவன்.
உன் அகந்தையை விட்டுவிட்டு என்னைப் பார்
,நான் யார் என்பது புரியும்.
அவள் புரிந்துகொண்டாள்
இனி யாரையும் இழிவு செய்யாதே
என்று அறிவுறுத்தி மறைந்துபோனான்
ஞான பண்டிதன். .
அகந்தை கொண்ட மனிதர்களை யாரும் அழிக்கவேண்டாம். அவர்களே அதற்கான வழியை தாங்களே தேடிக்கொள்வார்கள் என்பதுதான் வரலாறு.
அந்த அறிவுரை நமக்கும்தான்.
source:::: Murugan Bhakti
natarajan