” வாய் விட்டு சிரிங்க …. ” !!!

 


ஹலோ வைகை எக்ஸ்பிரஸ் போயிடுச்சா….?

ரயில்வே ஊழியர்:- இல்ல,- பாண்டியன்….?

ரயில்வே ஊழியர்:- இல்ல,

நெல்லை ?

ரயில்வே ஊழியர்:- இல்ல,நீங்க எங்க போகணும் அதை சொல்லுங்க சார் ?

 இந்த தண்டவாளத்தை கடந்து அந்தப்பக்கம் போகணும்!!!

 


” வெயில் வாட்டி எடுக்கிறது. அடிக்கடி குடை வாங்க வேண்டியிருக்கிறது.”

“ஏன் ஒரு தடவை வாங்கினால் போதாதா?”

“நான் இரவல் வாங்குவதைப் பற்றிச் சொன்னேன்!”

 

மனைவி: டின்னர் வேணுமா?

கணவன்: சாய்ஸ் இருக்கா?

மனைவி: ரெண்டு இருக்கு!

கணவன்: என்னன்ன?

மனைவி: வேணுமா? வேண்டாமா?

 

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் அரசு ஊழியர்
ஒரு வீட்டுக்குப் போனார். அங்கே வீட்டம்மா மட்டும் இருந்தார்.

உங்க வீட்டுக்காரர் பெயர் என்ன சொல்லுங்க…என்று கேட்டார்.

“என்னங்க, இது கூடப்… புரியாம கேக்கறீங்களே?
புருஷன் பெயரைப் பெண்டாட்டி….சொல்லலாமா?” என்று அந்த
அம்மா சீறினார். பிறகு ஆறு விரலைக் காட்டினார்.

“ஆறு”

“ஆமாம்” என்று கூறி.. விட்டு “அதோடு கழுத்துக்கு மேலே இருக்கறத்தைச் சேர்த்துக்குங்க” என்றார்.

“ஓஹோ! முகம்.

ஆறுமுகமா உங்க புருஷன் பேரு?”

“அப்படித்தாங்க அந்த குடிகார நாயை எல்லாரும் கூப்பிடறாங்க !”“!!!!!!!

 


மேனேஜர்: “உங்க கேரியர்லே எதை முக்கியமா,
நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்க..?..”
.
அக்கௌண்டண்ட்: “ரெண்டாவது அடுக்குளே இருக்கிற வத்தகுழம்பு தான் சார்…வாசனை அள்ளுது….!!!!!!!


ஜட்ஜ் : ஏம்மா..நீ திருட்டு ரயில் எறியா சென்னை வந்தாய்..?
பெண் கைதி : அய்யா அது எனக்கு அது திருட்டு ரயில்னு தெரியாது. நீங்கள் ரயில்வே டிபார்மென்டைத்தான் கேட்கனும்..!!!!!!!!!

Source::::input from a friend of mine

Natarajan

 

Leave a comment