வாரம் ஒரு கவிதை….” காதல் கொலை ” !

 

காதல்  கொலை ….
…………….
அந்த சிறு பூவின் இதயத்தில் இல்லை  நீ என தெரிந்தும்  ஒரு
வாள் எடுத்து அந்த மலரின் இதயத்தை நீ பிளந்தது  ஏன் ?
காதல்  என்ன , கடையில் கிடைக்கும் கத்தரிக்காய் என
நினைத்தாயோ ….இல்லை ” நான் ஒரு ஆண் ” என்னும்
இறுமாப்பா  உனக்கு ?
உன் ஆணவ கொலை வெறியால் நசுங்கி பொசுங்கி விட்டதே ஒரு
சின்னஞ்சிறு  மலர்  இன்று …
காதலுக்காக “நான் செய்த ஒரு கொலை” என்று நீ சொல்வாய்!
ஆனால் நீ     வெட்டி சாய்த்தது ஒரு உயிரை மட்டுமல்ல …பலர் கண்
முன்னால் சரிந்து  வீழ்ந்த அந்த இளம் தளிரின் புன்னகை தவழும்
குழந்தை முகம் நினைத்து நினைத்து  தினம்  தினம் மனம் துடிக்கும்
என் போன்ற பலர்   உயிரையும்  சேர்த்துதான் …….
Natarajan

Leave a comment