தீ தின்ற உயிர்
—————-
மகனே நீ உண்ணும் உணவு மணக்க.. தீ நான்
என் உயிர் கொடுக்கிறேன் தினமும் !
நீ உயிர் வாழ என் உயிர் தேவை உனக்கு நாளும் !
நான் உயிர் பிழைக்க நீ எதற்கு எனக்கு ?
மகனே … நீ ஏற்றி வைத்திருக்கிறாயே சாதி மதத் தீ
அது … உன் அரசியல் விளையாட்டில் நீ குளிர் காய !
பெட்டி பெட்டியாய் நீ பணம் சேர்க்க வட்டிக்கு
வட்டி , வட்டி மேல் வட்டி என்னும் கந்து வட்டி
தீயும் நீ ஏற்றி வளர்க்கும் தீயே ! ஆனால்
மகனே ..கந்து வட்டி தீ ஒரு ஆட்கொல்லி தீ !
சாதி மத பேதம் இல்லாத கந்து வட்டி கலாச்சாரம்
வட்டிக்கு கடன் வாங்கிய பலரை உன் முன்னால்
முட்டி போட வைக்கும் … தட்டி கேட்க முடியாது உன்னை !
வட்டி கட்ட முடியாமல் புழுங்கி புகைந்து துடிக்கும்
ஒரு ஏழையின் குடும்பத்தை துடிக்க துடிக்க
பொசுக்குமே உன் கந்து வட்டி தீ !
அவர் உயிரைப் பறித்து தின்றது உன்னுள் எரியும்
பணம் பணம் என்னும் பேராசை தீ !
உன் பேராசை தீ தின்ற உயிரை,… அக்னி நான்
தின்றேன் என்று மாற்றி சொல்லி விடாதே
மனிதா !
My Kavithai as appeared in http://www.dinamani.com dated 29th Oct 2017
Natarajan