வர வேண்டும் ..வர வேண்டும் விஜய ஆண்டு !!!

அன்பர்களே ..நண்பர்களே

தங்குதடை இல்லா மின்சாரம்

நமக்கு இனி கிட்டட்டும் !!!

பருவமழை பொழியட்டும்

பயிர் எங்கும் செழிக்கட்டும் !!!

சுற்றுப்புறமும் சூழலும்

சுத்தமாக மாறட்டும் !!!!

மக்கள் எல்லோரும்

மகிழ்ச்சியுடன் வாழட்டும் !!!!

சித்திரைத் திருநாளில்

சிறப்பு எல்லாம் கை கோர்த்து ..ஒரு

திறப்பு விழா நடத்தட்டும் நம் வளமான

வாழ்வுக்கு !!!

எங்கும் எதிலும் ஜெயமே என்று முத்திரை

பதிக்க வரவேண்டும் விஜய ஆண்டு !!!

வரவேண்டும் வர வேண்டும் விஜய ஆண்டே !!!..நலம் பல

தர வேண்டும் தர வேண்டும், என்று வேண்டும் ….

நடராஜன்

கவியரசு கண்ணதாசனின் கவிதை வண்ணம் !!!

திரையிசையில் இலக்கியமணம் தந்த கண்ணதாசன்

    தாடகை வதத்தில் இராமன் தடக்கையின் உரங்கண்டு மேடைக் கல் மாதவளாய் மாறியதில் அவன் காலின் திறங்கண்டு; விசுவாமித்திரன் பாடுகின்றான்  வியப்பின் எல்லையில் நின்று

மைவண்ணத் தரக்கி போரில் மழைவண்ணத் தண்ணலே
கைவண்ணம் அங்குக் கண்டேன் கால் வண்ணம் இங்குக் கண்டேன் என்று!

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் கம்பன் எழுதிய அவ்வண்ணம் கண்டு ருசித்து ரசித்த கண்ணதாசன் பாடல் ஒன்றில் முழுக்க முழுக்க வண்ணங்களாக வாரி இறைத்துவிடுகிறார் .. பி.பி ஸ்ரீனிவாஸ், பி. சுசிலா குரல்களில் கொடிகட்டிப் பறந்த பாடல் அது.

படம் : பாசம். இதோ, கவியரசரின் கன்னித் தமிழ் வரிகள் :
ஆண் :
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
பெண் :
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கைவண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
கார் வண்ண கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூவண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?

எப்படி, கண்ணதாசனின் கைவண்ணம் ? இல்லை, இல்லை கவிதை வண்ணம்? !!!!!!!!!!

இதைப் போல, வேறு வண்ணங்களிலும் பாடல்கள் அமைத்துள்ளார் கவிஞர். ஆனால் அவை கம்பன் அடியொற்றிப் பிறந்தவை அல்ல. அதனால் அவை இங்கே இடம் பெறவில்லை. இனி, கவிஞர் எழுதிய திரைப் பாட.ல் ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன். அந்தப் பாடலுக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்ததே கம்பன்தான்! வியட்நாம் வீடு என்ற படத்தில் வருகிறது.

‘பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா…’
என்ற பாடல்தான் அது. அதில் இடம் பெறும்
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான் அந்த
பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பால் கடலில் மாதவனே பக்கத்தில் வைத்தான் – ராஜா
பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான்.

என்ற இந்த வரிகளின் மூலம் கம்பனில்தான் உள்ளது! !!!!   எங்கே?     எந்த இடத்தில்? ….    யார் கூற்றாகக் கம்பன் இதனைக் கூறுகிறான்?…

சாகும் போதும் தமிழ் படித்துச் சாகவேண்டும் – என்
சாம்பலிலும் தமிழ் மணந்து வேகவேண்டும்
எனப் பாடிய கண்ணதாசன் சங்க இலக்கியங்கள் முதல் சிற்றிலக்கியங்கள் ஈறாகத்
தமிழ் இலக்கியங்களை ஊன்றிப் படித்திருக்கவேண்டும்.
எனவே, திரைப் பாடல்களில் தமிழ்த் தென்றலைத் தவழவிட்டவர் கண்ணதாசனே. எள்ளளவும் ஐயம் இதில் கொள்ளலாகாது! அதிலும் கம்பன் மேல் தனிக்காதல் கண்ணதாசனுக்கு உண்டு.

கம்பக் கொல்லையை மேம் போக்காக மேய்ந்த மாடு இல்லை அவர். கம்பனில் கருத்தூன்றிப் படித்திருக்கவேண்டும். இல்லை என்றால் மற்றவர் பார்வையில் படாத பாடல் ஒன்றை அவர் பார்த்திருப்பாரா? பார்த்து ரசித்திருப்பாரா? இல்லை அதனைத் தன் பாடலில் தனக்கே உள்ள முறையில் பதிவுதான் செய்திருப்பாரா? அந்தப் பாடலைக் காணுமுன் மறுபடி கண்ணதாசன் வரிகளை வைக்கிறேன்

உங்கள் பார்வைக்கு :
பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான் அந்த
பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பால் கடலில் மாதவனே பக்கத்தில் வைத்தான் – ராஜா
பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான்.

கம்பனின் காவிய வரிகள் இதோ :

பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பெண்ணை
ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண்இடையாளை
மாகத்தோள் வீர பெற்றால் எங்கனம் வைத்து வாழ்தி!

சூர்ப்பணகை – மூக்கறுபட்டவள் ஆர்ப்பரித்து அழுத வண்ணம் அண்ணன் இராவணனிடம் ஓடோடி வருகிறாள். தன் அவல நிலைக்குக் காரணத்தைத் தருகிறாள். அதே சமயம், சீதையின் அழகை எல்லாம் சொல்லிச் சொல்லிக் காட்டுகிறாள் அவனுக்குக் காமத்தீயை மூட்டுகிறாள். அப்போதே அவன் சீதையை அடைந்துவிட்டதாகக் கற்பனை ஊட்டுகிறாள். அவரவரை அவரவர் இடத்தில் வைக்க வேண்டும் என்றொரு சொலவடை தமிழில் உண்டு. அதனைக் கம்பன் இங்கே கையாள்கிறான்.

‘பரமசிவன் பார்வதியைத் தன் இடப்பக்கத்தில் வைத்திருக்கிறான். தாமரை மலரில் இருந்த திருமகளைத் தன் மார்பிலே வைத்திருக்கிறான் பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன். தன் தேவியாகிய கலைமகளைப் பிரமன் தன் நாவிலேயே வைத்திருக்கிறான். மும்மூர்த்திகளும் தத்தம் தேவியரை இப்படித் தங்களிடமே தங்களுக்கு உள்ளேயே வைத்து வாழ்கிறார்கள். மும்மூர்த்திகளுக்கும் மேலாய்க் கீர்த்தி பெற்ற அண்ணனே மின்னலை விட நுண்ணிய இடை கொண்ட செம்பொன் சிலையாம் சீதையை அடையும் போது அவளை எங்கே வைத்து வாழ்வாய் நீ!’ எனச் சூர்ப்பணகை கேட்பதாய் இப்பாடல் வருகிறது.

ஆரண்ய காண்டம் சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலத்தில் இடம்பெறுகிறது. கம்பன் இங்கே தனக்கே உரிய குறும்போடு ‘எங்ஙனம் வைத்து வாழ்தி!’ என்ற வரியில் கீழறைப்பொருளை (உட்பொருள்) வைக்கிறான் : மும்மூர்த்திகளும் தத்தமக்குரிய தேவிகளைத் தம் உடல்களில் வைத்து வாழ்ந்தார்கள் ! இராவணனோ தனக்கு உரிமை இல்லாத சீதையை எங்கனம் எங்கே வைத்து வாழ்வான்? வாழமாட்டான்! இறுதியில் வீழ்வான் என்ற பொருள் இவ்வரியில் பொதிந்துள்ளது. கம்பனை மேலோட்டமாக மேய்ந்தவர்கள் கண்களில் மட்டுமல்ல கம்பனில் ஆய்ந்து தோய்ந்தவர்கள் பார்வையிலும் படாத பாடல் இது!

எப்படித்தான் கண்ணதாசன் கண்ணில் இது பட்டதோ! எப்படித்தான் அவர் கருத்தையும் கவர்ந்துவிட்டதோ! அகலமான கம்பனை ஆழமாகவும் படித்திருக்கிறார் கண்ணதாசன் என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. கம்பனின் கருத்தை எடுத்துத் திரைக் காட்சிக்கு ஏற்பச் சொற்களை அமைத்து ராஜா பத்மநாபன் ராணியைத் தன் நெஞ்சில் வைத்தான். என்று முத்தாய்ப்பாய் முத்திரை பதிக்கிறார் கவியரசர்!

source::::: input from a friend of mine ..

Natarajan

எங்கே என் அம்மா ?……

அம்மா என்ற சொல் மறந்து ஆண்டு இரண்டு இன்று எனக்கு –சொல்லு

அம்மா …. ஒன்றுமே  சொல்லாமல் நீ சென்று விட்டது ஏனம்மா ?

அம்மா அம்மா என்று என் பிள்ளை  தன்  அம்மாவை   கூப்பிட்டால் –நான்

அம்மா  எங்கே  எங்கே  என்று    உன்னைத்தானே  தேடுகிறேன் ….

நடராஜன்

என் அன்பு அம்மாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி …. 23 ஜனவரி 2013.

வயல் இல்லையேல் செயல் இல்லை …இதை சிந்தையில் தை !!!!

இதோ
தை மாதக் குதிரையில்
வருகிறது திருவிழா.

வாசல்களே,
உங்கள்
குப்பைகளைக் கழித்து
கோலத்தின் முத்ததுக்காய்
குளித்துக் காத்திருங்கள்.

சுவர்களே
உங்கள் அழுக்கு ஆடைகளை
சுண்ணாம்பு
வேட்டிகளால்,
சுற்றி மறையுங்கள்.

கொட்டில் மாடுகளே
வாருங்கள்,
உங்கள் தொட்டில்
முற்றத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

புதிய பானைகளே
பொறுத்திருங்கள்,
உங்கள் உள்ளம் பொங்கி வழிய
இதோ
நாள்காட்டிகளும்
பட படக்கின்றன.

வயல்காற்றே வாருங்கள்
எங்கள்
வியர்வையின் ஈரத்தை
உணவின் சாரமாக மாற்றியது
நீங்கள் தான்.
திண்ணையில் வந்தமருங்கள்.

பூமித் தாயே
பெருமிதம் கொள்,
நீ உமிக்குள் ஒளித்து வைப்பதை
இன்னும் எங்கள்
கணிணிக் கூடங்களால்
தயாரிக்க இயலவில்லை.

எல்லோரும் வாருங்கள்,
மனம் பொங்க மகிழுங்கள்
இது
தமிழர் கலாச்சாரத்தின்
தனி அடையாளம்.

அறுவடையின் ஆனந்தத்திலும்,
வறுமையின் வேதனையிலும்,
நன்றி மறக்காத
என் தமிழ்த் தலைமுறையின்
தன்மான அடையாளம்.

கலாச்சார வேர்களை
ஆழ உழுது வை.
வயலில்லையேல் செயலில்லை
என்பதை
சிந்தையில் தை.

இதோ
வந்து விட்டது தை.
கரும்பு விழாக் கரையோரம்…

பொங்கல்…

பூக்களை மட்டுமே
பூஜிக்கும் பூமியில்
வேர்களுக்குக்
கிளைகள் எடுக்கும்
கலை விழா.

மோதிரங்களின் தாலாட்டில்
விரல்களை
மறந்து விட்டவர்களுக்கு
பாதங்கள் நடத்தும்
பாராட்டு விழா.

தனக்குத் தானியம் தந்த
வயல்களுக்கு
வரப்புகள் விரிக்கும்
வாழ்த்து விழா.

பணப் பைகள் பார்க்கத் தவறிய
கலப்பைகளுக்கு,
கிராமச் சாலைகள் நடத்தும்
கோலாகல விழா.

நாடுகள்
கிரீடப் போட்டிக்கு
கவசங்களோடு அலைய,
இங்கே
மாடுகளின் தலையில்
முடிசூட்டு விழா நடக்கும்.

தங்கத் தட்டுகளை வெறுத்து
செங்கல் மீதில்
திங்களைப் பார்த்து
பொங்கல் பானை
பொங்கிச் சிரிக்கும்.

நம்பிக்கைகளை நன்றாகிய
பச்சைக்கு
கும்மிக்கைகள் ஒன்றாகி
குதுகெலமாய் நன்றி சொல்லும்.

நல்ல நிலத்தில்
விதை விழுந்தால்,
ஆயிரம் விதைகள் பயிராகும்
என
களஞ்சியங்கள் ஒப்புக்கொண்டு
கையெழுத்திடும்.

வாருங்கள்,
அனுபவக் கலப்பைகள்
உழுது முடித்த உள்ளத்துள்
நல்லெண்ண விதைகளை
ஆழமாய் ஊன்றுவோம்.

இன்னோர் பொங்கலுக்காய்
இதயம் தயாரிப்போம்
`ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரோடி, மூங்கில்போல் பரவி, முடிவில்லாமல் வாழ்ந்திருப்போம்!!!!!

source:::::: input from a friend of mine…. an excellent kavithai from an unknown author…
Natarajan

படித்ததில் ரசித்தது ….விடை இல்லா புதிர் !!!!!

source:::: unknown…..input from my friend…. nice one to read and share…
Natarajan

வரப்பு வாய்க்கால் தகராறில்
பங்காளியின் தலையெடுத்தவனின் வாரிசு
படித்து முடித்து முதல் நிலை அலுவலராய்
முன்னேறிச் சிறக்க
சமூகத்தின் மேன்மை குறித்து
அன்றாடம் மேடையில் முழங்கும்
தலைவரின் வாரிசுகள் எல்லாம்
தறுதலையாய்த் திரியவதை
ஏனோ தடுத்திட முடியவில்லை!

இலக்கண அறிவு மருந்துக்கும் இன்றி
இட்டுக் கட்டிப் பாடும்
சுந்தர பாகவதரின் பாடல்களில்
இலக்கண இலக்கியம் பூரணமாய் அமைய
இருபதாண்டு அனுபவமிக்க
தமிழ் பேராசிரியருக்கு
எத்தனை முயன்றும் ஏனோ
ஒரு கவிதை எழுத வரவில்லை

கடவுள் மீதும்
சாஸ்திரங்கள் மீதும்
நம்பிக்கையற்றவனுக்கு வாரிசுகள்
டஜன் கணக்கில் இருக்க
பூர்வ புண்ணிய பாக்கிய ஸ்தானங்களின்
தோசங்களை சீர் செய்யும் பண்டிதருக்கு
ஏனோ குழந்தைப் பாக்கியம் இல்லை!

கீழான உணர்வுகளைத் தூண்டிவிட்டு
ஒரு தலைமுறையையே
தடம் மாற்ச் செய்பவனின்
படைப்புகள் எல்லாம்
பட்டி தொட்டியெல்லாம் பவனி வர
அடுத்த தலை முறை குறித்து
அக்கறை கொண்டவனின் படைப்புகள் எல்லாம்
கரையானுக்கு விருந்தாவதை
ஏனோ தடுத்திட முடியவில்லை!!

விளக்கங்கள் ஆயிரம் சொன்ன போதும்
சில விஷயங்கள் புரியத்தான் இல்லை
எப்படித்தான் முயன்றபோதும்
சில புதிருக்கான விடை
கிடைப்பது இல்லை !!!!

11 டிசம்பர் …பாரதி பிறந்த நாள் !!!!

source:::: A Poetic tribute to Subramania Bharathiyar on his birth day today .. 11 Dec…. Kavithai from SHRI. SANKARANARAYANAN SADASIVAM , Coimbatore..

Natarajan

எட்டைய புரத்தில் பிறந்து
பாட்டு திறத்தாலே
எட்டாத உயரத்தை
எட்டிப் பிடித்தவன்
.சொற்களில் சுடு
ஏற்றி சூரியனை
வெட்கவைத்தவன்
சிந்திக்கும் வேகத்தில்
எழுத்துகளாய் விழுமுன் – கவிதை
சிந்திசிதறி விடுமோ என
முண்டாசு கட்டிகொண்டவன்
அடிமை இந்தியாவின்
துக்கத்தை
கருப்புக்கோட்டில்
காட்டிக்கொண்டவன்
ஆனால்
கனவில் கவிதையில்
விடுதலை கொண்டாடியவன்
இல்லை
எதிர்கால இந்தியாவிற்கு
கட்டியங்க்கூரியவன்
பண்டிதர் வீட்டில்
புதைந்து கிடந்த
பாட்டுச்சுகத்தை
பாமரனுக்கும்
பரிமாறியவன்
உறங்கிக்கிடந்த
பாரதத்தை
உசுப்பிவிட பூபாளம்
இசைக்காமல்
கம்பீரநாட்டையில்
முழங்கியவன்
பார்
அதிர
பாட்டு எழுதிய
பாரதி
பாட்டுக்குள்
ராகம் வைத்தான்
அடிமை வாழ்வின்
சோகம் இசைத்தான்
வீறுகொண்டு எழ
வேகம் வைத்தான்
அதனால் தன
தாகம் தீர்த்தான்
காலத்தை விஞ்சிநிற்கும்
பாட்டு
எழுதி
காலனைக் காலால்
எட்டி உதைத்தவன்
வாருங்கள் பாரதி பிறந்தநாளில்
அவன் புகழ்
கொண்டாடுவோம் !!!!!!!!!!!!

By….
Sankaranarayanan Sadasivam

இன்ஸ்டன்ட் கவிதை !!!… ஆஸ்திரேலியா கொலு !!!

This slideshow requires JavaScript.

பாட்டி  வைத்த கொலு நான் பார்த்ததுண்டு   –ஒரு
குட்டி  பயலாக !!!..  அம்மா கொலு வைக்க  படிக்கட்டு
 கட்டி  நான்  அடுக்குவேன் பொம்மை ,   ஒரு  சுட்டி பயலாக !!!!
 வீட்டு கொலு பார்க்க  நேரம் எங்கே   அப்போ!!!!…
 வீடு வீடாக  கொலு பார்த்து  சுண்டல் சுவைக்கவே
 நேரம் இருக்காதே அப்போ!!!!
  அருமை மனைவி  கொலு வைக்கும் நேரம்
  பொறுமையா  ரசிக்க நேரம் எங்கே அப்போ!!!!..
  அலுவல்  நிமித்தம் அவசரம் எப்பவும்  அப்பப்பா !!!!!
   இப்போ  இருக்கு நேரம் நிறைய ….மனம் நிறைய
   நான்   ரசிக்க ஒரு கொலு இப்போ இங்கே  … தினம்  ஒரு
  சுண்டலுடன்!!!! … அதுவும் அயல் நாட்டு  மண்ணில் !!!
   எதுவும் முடியும் …. மாமா …மனம் இருந்தால் …..கொலு
    என்ன பிரமாதம் ?!….  ..இது  என் மருமகள்  வாதம் !!!!!
    ஆமாம் ஆமாம்  இதுவும்  எதுவும் அந்த பிள்ளையாரப்பன்
    ஆசீர்வாதம் !!!  நாளும்  நாம் பணிவோம்  அவன் பாதம் !!!!
     when i am seeing  Navarathri Kolu  in Queensland, Australia , i recall my school days when i read WASHINGTANIL  THIRUMANAM by SAVI
     in ANANDA VIKATAN those days !!!!  what a lovely serial story it was with full of  humour !!!!   …..Now at this juncture, sitting in Australia and
    watching  KOLU at my son”s house , i recall that  story by SAVI wherein he picturised a south indian wedding at Washington with all fanfare and fun
     including MRS.Rockfeller”s
        active participatin in that wedding!!!!!!….
       Natarajan

இன்ஸ்டன்ட் கவிதை …யோசித்து சொல்லுங்க !!!

நீருக்கும் நிலத்துக்கும் உரிமை கோரி பகை வளர்த்து

போருக்கும் வித்திடும் பித்தர்களே – சற்று

யோசித்து சொல்லுங்க ….ஒளி கொடுக்கும்

நிலவும் பரிதியும் உங்களில் யாருக்கு சொந்தம் ?

Natarajan

உறவுகள் இதுதானா ?….

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த
முதியோர் இல்லம்

• பொறுப்பாய் என்னை
ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை
வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால்
நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க
இந்த இல்லத்தை
தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும்
பொருத்தமான பள்ளி
எதுவென்றே
ஓடி அலைந்ததை
ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில்
ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும்
என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை
மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக
மனம் மகிழ்ச்சியடைகிறது
நீ விடுதியில்
தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும்
படிப்பை நினைத்து
உன்னை சந்திக்க மறுத்ததன்
எதிர்வினையே இதுவென்று
இப்போது அறிகிறேன்!

இளம் வயதினில்
நீ சிறுகச் சிறுக சேமித்த
அனுபவத்தை
என் முதுமைப் பருவத்தில்
மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய்
ஆயினும்…
உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு
நான் கற்றுக்கொடுத்தேன்
உனக்கு…
வாழ்க்கை இதுதானென்று
நீ கற்றுக் கொடுக்கிறாய்
எனக்கு…
உறவுகள் இதுதானென்று!

இந்தக் கவிதையைப் படித்ததும் கண்கள் குளமாகின்றது.. எவ்வளவு
யதார்த்தமும் வலியும் இந்தக் கவிதையில் அடங்கியுள்ளது..
கவிஞரைப் பாராட்டுவோம்..

Source::::: unknown… input from one of my contacts…. a natural poetic flow from an unknown Poet… sentiments of an old man at an Elders Home expressed in simple and sober way…

Natarajan

True Friends are Like Shining Stars!!!!!

Source:::: Input from one of my friends…what a nice way to say THANK YOU to your friend!!!…I am sure you will appreciate the sentiments expressed in this small poem and share it with your friends and well wishers

Just smile and say… THANK YOU ….to all your friends …

Natarajan

Dear Lord,
I know you’re watching over me
And I’m feeling truly blessed
For no matter what I pray for
You always know what’s best!

I have a circle of E-mail friends,
Who mean the world to me;
Some days I ‘send’ and ‘send,’
At other times, I let them be !!!

I am so blessed to have these friends,
With whom I’ve grown so close;
So this little poem I dedicate to them,
Because to me they are the ‘Most’!

When I see each name download,
And view the message they’ve sent;
I know they’ve thought of me that day,
And ‘well wishes’ were their intent.

AND to YOU, my friends, I would like to say,
Thank you for being a part;
Of all my daily contacts,
This comes right from my heart..

God Bless YOU, is my prayer today,
I’m honored to call You ‘Friend’;
I pray the Lord will keep YOU Cheerful
Until we MEET AND GREET again!!!!!!!!!

Natarajan