எத்தனை அழகான முத்துக்கள்! ஒவ்வொரு முத்தையும், பெட்டகத்தில் பதித்து, பட்டை தீட்டி, ஒன்றோடு ஒன்று உரசி உடையாமல், இடையிடையே மென்மையான தடுப்புக் கொடுத்து, மேலே ஒரு தடித்த தோலால் பேக்கிங் செய்து, இத்தனை வேலைப்பாடுடன் கூடிய முத்துப் பார்சலை, குரூரமாக இயந்திரத்தில் இட்டு அரைத்து, கரைத்து, வடிகட்டிக் குடிக்காவிட்டால் என்ன… நான் இனிமேல் குடிக்கப் போவதில்லை, மாதுளம் பழம் ஜூசை.

— பாக்கியம் ராமசாமி. in DINAMALAR … Varamalar Sunday
Natarajan