இந்த வாரக் கவிதை ….” துணையாய் தொடரும் நிழல்கள் “!!!

துணையாய் தொடரும் நிழல்கள் ….
………………………..
பிறந்த மண்ணை முத்தமிடும் குழந்தை தன்  அன்னையின் நிழலில்
மழலை அது நடை பயிலும்   தந்தையின் நிழலில் !
ஒரு நல்ல ஆசானின் நிழலில் கல்வி ….தக்க பருவத்தில்
இல்லறம் செழிக்க நல்லற நிழலாய் தொடரும்  ஒரு வாழ்க்கை துணை !
துணையாய் தொடரும் நிழல்கள்  இப்படி எத்தனை எத்தனை… ஒருவர்
வாழ்வில் !
காலம் மாறும் …காட்சியும் மாறும் !  தொடரும் நிழல் துணையும்
உருமாறும் !…
காலத்தின் கோலத்தில் மாற்றம் பல நிகழ்ந்தாலும் தொடர்ந்து
உறு துணையாகும் ஒரே ஒரு நிழல்…  நம் வாழ்வில் !
காட்சியும்  சாட்சியும் தேவை இல்லை இந்த நிழலுக்கு !
அதுதான் நம் மனசாட்சி !  வாழ்க்கையின்  நல்லாட்சிக்கு
என்றும் துணையாக தொடரும்  அதன் அரசாட்சி !
Natarajan

Leave a comment