நல்லதோர் வீணை
——————
நல்லதோர் வீணை … அதன் நாதம்
சுருதி பிறழாத சப்தஸ்வர கீதம் !
இந்த மண்ணில் பிறக்கும் ஓவ்வொரு
குழந்தையும் நல்லதோர் வீணைதான் !
அந்த வீணை இசைக்கப் போவது இனிய
கீதமா …இல்லை அபஸ்வர ஒலியா ?
விடை இதற்கு அதன் அம்மா அப்பாவிடம்தான் !
வீணை வாசிப்பு எப்படி என்று தெரியவேண்டும்
குழந்தையின் அம்மா அப்பாவுக்கு !
அம்மா அப்பாவின் இனிய இசை இயக்கத்தில்
வளரும் பிள்ளை தப்பு தாளம் போடாது ..
தவறியும் சுருதி பிசகு செய்யாது ! தன் இசையால்
பிறர் மனதை கொள்ளை அடிக்குமே அல்லாமல்
மறந்தும் தன் வீட்டையும் நாட்டையும் கொள்ளை
அடிக்காது !
நல்லதோர் வீணை செய்வோம் ஒவ்வொரு
வீட்டிலும் …வீணையின் இனிய இசை
ஒலிக்கட்டும் நம் வீட்டிலும் நாட்டிலும் !
Source…..Natarajan
in http://www.dinamani.com dated 27th Jan 2018