நினைவலைகள் …
இன்று 31 மே…என் தந்தை மறைந்த நாள் …7 வருடம் முன்பு. அதிகம் பேச மாட்டார் …ஆனால் முகத்தில் தெரியும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று. மனதில் பட்டதை பட் என்று சொல்லும் பழக்கம் … கடமை தவறா அரசு அதிகாரி. நேர்மை வழி வளர்ந்து அந்த வழியில் தன் பிள்ளைகளையும் நடக்க செய்தவர் …
புது வருட வாழ்த்து, திருமண வாழ்த்து முதல் இரங்கல் செய்தி வரை , எல்லோருக்கும் ஒரு அஞ்சல் அட்டை செல்லும் அவரிடம் இருந்து !!!
அஞ்சல் அட்டை அவரின் தனி அடையாளம் ஆனதால் , அவருக்கு தேவைப்படவில்லை ஒரு மின்அஞ்சல் முகவரி அடையாளம் !!!
நாளை 1 ஜூன் என் பேரனின் முதல் பிறந்த நாள் … நான் ஒரு கவிதை வடிவில் என் அப்பாவைக் கேட்கிறேன் …அவ்ர்
நல் வாழ்த்துக்களை என் பேரனுக்கு. இது வெறும் கவிதை அல்ல … என் நினைவலைகளில் இருந்து பிறந்த உணர்ச்சி
வரிகள்….
நடராஜன்
மே 31 2014
ஆயிரம் பிறை கண்டாய் … வந்த வேலை முடிந்து விட்டது என நீ நினைத்தாயோ ?
சொந்தமும் பந்தமும் மறந்து நீ மறைந்து விட்டாய் பிறை ஆயிரம் கண்ட மறு வருடம் !
பறந்து விட்டது வருடம் 7 இன்றுடன் நீ விண்ணில் பறந்து …
மறக்க முடியுமா அப்பா உன்னை ? என் அப்பா உன்னை ஒரு நல்ல
தாத்தாவாகவும் பார்த்த உன் பிள்ளை நான்! என்னை தாத்தாவாக பார்க்க நீ இல்லையே இன்று இங்கு ..
இயற்க்கையின் விதி அது … அது போகட்டும் … எனக்கு இந்த மண்ணில்
முகவரி தந்த தந்தை உன்னிடம் இருக்கிறதே என் முகவரி …இது வரை உங்க
ஒரு வரி அஞ்சல் அட்டையும் வரவில்லையே எனக்கு … ஏன் அப்பா ?
அஞ்சல் அட்டைதானே உங்க அடையாளம் …
வர வேண்டும் ஒரு அஞ்சல் அட்டை எனக்கு நாளைக்கு அப்பா…நீங்க
தர வேண்டும் நீங்க உங்க நல் வாழ்த்துக்க்கள் ஒரு ஆயிரம் …என் பேரனுக்கு அதுவே சிறந்த
பரிசாகும் , அவன் முதல் பிறந்த நாள் அன்று { 1 ஜூன் 2014 }
உங்கள் அன்பு பிள்ளை
நடராஜன்
Your touching letter, a tribute to your Father reminded me my (late) Father who too enjoyed writing only post cards to all dear and near ones. Thank you.
Thanks, Mr.Ramanathan sir.
Reblogged this on Take off with Natarajan.