” வர வேண்டும் ஒரு அஞ்சல் அட்டை எனக்கு நாளைக்கு … அப்பா “…

நினைவலைகள் …

இன்று 31 மே…என் தந்தை மறைந்த நாள் …7 வருடம் முன்பு. அதிகம் பேச மாட்டார் …ஆனால் முகத்தில் தெரியும் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று. மனதில் பட்டதை பட் என்று சொல்லும் பழக்கம் … கடமை தவறா அரசு அதிகாரி. நேர்மை வழி வளர்ந்து அந்த வழியில் தன் பிள்ளைகளையும் நடக்க செய்தவர் …

புது வருட வாழ்த்து, திருமண வாழ்த்து முதல் இரங்கல் செய்தி வரை , எல்லோருக்கும் ஒரு அஞ்சல் அட்டை செல்லும் அவரிடம் இருந்து !!!

அஞ்சல் அட்டை அவரின் தனி அடையாளம் ஆனதால் , அவருக்கு தேவைப்படவில்லை ஒரு மின்அஞ்சல் முகவரி அடையாளம் !!!

நாளை 1 ஜூன் என் பேரனின் முதல் பிறந்த நாள் … நான் ஒரு கவிதை வடிவில் என் அப்பாவைக் கேட்கிறேன் …அவ்ர்

நல் வாழ்த்துக்களை என் பேரனுக்கு. இது வெறும் கவிதை அல்ல … என் நினைவலைகளில் இருந்து பிறந்த உணர்ச்சி

வரிகள்….

நடராஜன்

மே 31 2014

ஆயிரம் பிறை கண்டாய் … வந்த வேலை முடிந்து விட்டது என நீ நினைத்தாயோ ?

சொந்தமும் பந்தமும் மறந்து நீ மறைந்து விட்டாய் பிறை ஆயிரம் கண்ட மறு வருடம் !

பறந்து விட்டது வருடம் 7 இன்றுடன் நீ விண்ணில் பறந்து …

மறக்க முடியுமா அப்பா உன்னை ? என் அப்பா உன்னை ஒரு நல்ல

தாத்தாவாகவும் பார்த்த உன் பிள்ளை நான்! என்னை தாத்தாவாக பார்க்க நீ இல்லையே இன்று இங்கு ..

இயற்க்கையின் விதி அது … அது போகட்டும் … எனக்கு இந்த மண்ணில்

முகவரி தந்த தந்தை உன்னிடம் இருக்கிறதே என் முகவரி …இது வரை உங்க

ஒரு வரி அஞ்சல் அட்டையும் வரவில்லையே எனக்கு … ஏன் அப்பா ?

அஞ்சல் அட்டைதானே உங்க அடையாளம் …

வர வேண்டும் ஒரு அஞ்சல் அட்டை எனக்கு நாளைக்கு அப்பா…நீங்க

தர வேண்டும் நீங்க உங்க நல் வாழ்த்துக்க்கள் ஒரு ஆயிரம் …என் பேரனுக்கு அதுவே சிறந்த

பரிசாகும் , அவன் முதல் பிறந்த நாள் அன்று { 1 ஜூன் 2014 }

உங்கள் அன்பு பிள்ளை

நடராஜன்

3 thoughts on “” வர வேண்டும் ஒரு அஞ்சல் அட்டை எனக்கு நாளைக்கு … அப்பா “…

  1. A.V.Ramanathan's avatar A.V.Ramanathan May 31, 2014 / 5:54 pm

    Your touching letter, a tribute to your Father reminded me my (late) Father who too enjoyed writing only post cards to all dear and near ones. Thank you.

Leave a reply to A.V.Ramanathan Cancel reply