” இதுவும் ஒரு புரியாத புதிரா ? …பதில் சொல்லு மனிதா …”

 

இந்த மண்ணில் எத்தனை  நாடு….  எத்தனை மனிதர் கூட்டம்
ஒவ்வொரு நாட்டுக்கும்  ஒரு எல்லைக்  கோடு வேறு !!!
மொழி எத்தனை …மனித  இனம் , மதம்  எத்தனை எத்தனை !!!
அத்தனையும் தாங்குகிறாள்   ஒரு தாய் … இந்த  பூமித் தாய் …
இந்த மண்ணை  விட்டு  விண்ணுலகம் செல்லும்  மனிதர் கூட்டம்
அத்தனை பேருக்கும் இருக்குமா  இடம்  விண்ணுலகில் ? …
இனம்  மொழி மதம்  பார்த்து இட ஒதுக்கீடும் கிடைக்குமா  அங்கே ?
புரியாத புதிர் இது… விடை  தெரியாத  கேள்வியும்  இது …பின்
இருக்கும் இடத்தில்  இன்று  ஏன்  இந்த ஆட்டம் …
ஒருவர் மேல் ஒருவர்  காட்டம் ? …இதுவும்
ஒரு புரியாத  புதிரா ? …பதில்  சொல்லு  மனிதா
ஒரு நிமிடம் யோசித்து …!!!
நடராஜன்
7ஏப்ரல் 2015

 

Leave a comment