நீதியைத் தேடி …
…………..
அன்றைய அரசன் சொன்னது நீதி ..செய்தது நீதி !.அவன் நடந்து காட்டிய வழியும்
நீதி வழியே ! …அரசனும் அவனே …நீதிமானும் அவனே !
நீதி தேடி அவன் மக்கள் வேறு எங்கும் சென்றது இல்லை
மன்னன் அவன் தீர்ப்புக்கு மறு கேள்வி இல்லை !
இன்று அரசே நீதி தேடி ,ஓடி , அலையும் அவலம் …ஒரு நதி நீருக்காக !
ஒரு அரசுக்கே கதி இது என்றால் , எனக்கும் உனக்கும்
விடிவு காலம் எப்போது ? தேசிய நதி நீர் பங்கீட்டு விதி என்று ஒன்று உதித்து
அதை அரசும் மக்களும் மதிக்கும் அந்த நாள் எந்த நாள் ?
Natarajan
http://www.dinamani.com dated 26th sep 2016