வாரம் ஒரு கவிதை ….” நிழலாடும் நினைவு “

 

நிழலாடும்  நினைவு…
——————-
கடல் அலை போல்  நினைவலைகள்…
ஓயாத  கடல் அலை போல்
நினைவலையும்  ஒரு தொடர்கதையே !
மெல்லிசையாய் ஒலிக்கும் வாழ்வின்
இனிய நினைவலைகள் இடைவிடாமல்
தொடரும் ஒரு நிழலாய் நம் வாழ்வின் நிஜத்தில் !
இளமை  கால நினைவின் நாட்டியம் நல்ல
கட்டியம் கூறும் எதிர் வரும் கால நிஜங்களுக்கு !
மனதில் நிழலாடும் நினைவே எதிர் வரும் காலத்துக்கு
ஒரு நம்பிக்கை நட்சத்திரம் !
இனிய பழைய நினைவின் ஓட்டம் இருக்க  வேண்டும்
என்றும் நம்  மனதில் ஒரு நிழலாக ! நினைவுகள் நிழலாடும்
வரைதான் நம் வாழ்வின் ஆட்டமும் ஓட்டமும் !
மனதின் நிழலே நம் வாழ்வின் நிஜம் !
நிஜம் இல்லாமல் நிழல் இல்லை !
நிழல் இல்லாத நிஜமும் இல்லை !
Natarajan
My Tamil kavithai in http://www.dinamani.com dated 10th July 2017

3 thoughts on “வாரம் ஒரு கவிதை ….” நிழலாடும் நினைவு “

  1. Ramakrishnan's avatar Ramakrishnan July 11, 2017 / 2:16 pm

    very true

  2. BALU's avatar BALU July 14, 2017 / 6:38 pm

    Wah!!! Mr.Mani…..
    Balu athan-now in B’lore

Leave a reply to BALU Cancel reply