வாரம் ஒரு கவிதை ….” ஆட்டுக்குட்டியை நனைத்த மழை ” 2

ஆட்டுக்குட்டியை நனைத்த  மழை ….2
++++++++++++++++++++++++++++++
அணிவகுத்து வந்தீங்க …திரண்டு வந்து
“குண்டு  மழையும்”  பொழிந்தீர்கள்  எங்கள்
மண்ணில் நீங்க !
ஆயிரம் ஆயிரம் நன்றி உங்களுக்கு எங்க
மண்ணையும் முத்தமிட்டு எங்க மனதையும்
குளிர வைத்த மேகக் கூட்டங்களே !
எங்க மண்ணை நீங்க தொட்டு முத்தமிட்ட
நேரம் மறந்து விட்டோம் எங்க வீட்டு
ஆட்டுக்குட்டியை !
எங்க வீட்டுக் கடைக்குட்டி பொழிந்து தள்ளி
விட்டாள் ஒரு “அழுகை மழை” எங்க
வீட்டுக்கு உள்ளே !
” என் செல்ல ஆட்டுக்குட்டியை நனைத்து
விட்டதே இந்த மழை  என்று ! எங்க
வீட்டுக் கடைக்குட்டிக்கு தெரியாதே   அவள்
செல்ல ஆட்டுக்குட்டிக்கும் தேவை இந்த மழை என்று !
K.Natarajan
04/07/2019

வாரம் ஒரு கவிதை … ” ஆட்டுக்குட்டியை நனைத்த மழை “

ஆட்டுக்குட்டியை நனைத்த மழை
+++++++++++++++++++++++++++++++
வீட்டில் இருக்கும் குட்டி ஆடு ஒரு
சுட்டி  ஆடாகவே இருக்கும் !
மழையில்  அது நனைந்தாலும்
சிலிர்த்து குதிக்கும்  மகிழ்ச்சியில் !
ஆட்டுக்கு தெரியும் மழை  அதை
நனைக்குமே  தவிர சிதைக்காது ஒருபோதும்
என்று …! மழை  ஒரு  ஓநாயும் அல்ல
ஆட்டுக் குட்டியை தனக்கு இரையாக்க !
ஆனால் எத்தனை எத்தனை ஓநாய்கள்
மனித வடிவில்  நம்  வீட்டு செல்லக்
குட்டிகளை ,பச்சிளம் பிஞ்சுகளை ,
குறி வைத்துக் குதற !
எத்தனை நாளைக்கு நாம் பொறுத்துக்
கொள்வது இந்த குரூர செயலை ?
நம் வீட்டு ஆட்டுக்குட்டிக்குத்  தெரியும்
நாய் எது ஓநாய் எது என்று !
நம்ம வீட்டு செல்லக்குட்டிக்கு மட்டும்
அல்ல …நமக்கே தெரிவதில்லையே
மனித வடிவில் மிருகம் யார் நம்
அருகில் என்று ?
K.Natarajan
 in http://www.dinamani.com  dated 03/07/2019