ரமணருக்கு முதுமையுடன் நோயும் சேர்ந்து உடல் மிக நலிந்திருந்த சமயம். ஆனால் எப்போதும் யாராவது அவரைத் தரிசிக்க வந்தவண்ணம் இருந்தனர். மருத்துவரோ கண்டிப்பாக ஒய்வு தேவை என்று கூறினார். குறைந்தபட்சம் மதியச் சாப்பாட்டுக்குப் பின் பகவான் சற்று ஒய்வு எடுக்கட்டும் என்று மிகுந்த நல்லெண்ணத்தோடு தீமானித்த நிர்வாகம் ஒரு போர்டு வைத்தது. ‘பகல் பன்னிரண்டு மணி முதல் இரண்டு மணி வரை யாருக்கும் அனுமதியில்லை’ என்று அதில் எழுதியிருந்தது.
சாப்பிடப் போயிருந்த பகவான் திரும்பி வந்தார். போர்டைப் பார்த்தார். பேசாமல் கூடத்துக்கு வெளியே உட்கார்ந்து விட்டார்.
‘பகவான் உள்ளே போகலாமே’ என்று மற்றவர்கள் கூறினர்.
‘யாருக்கும் அனுமதியில்லை என்று எழுதியிருக்கிறதே. அது நமக்கும் தானே’ என்று சொல்லிப் பகவான் எல்லோரையும் திகைக்க வைத்தார்.
……………
SOURCE:::: http://www.balhanuman.wordpress.com
Natarajan
Jan 13 2015
