“தமிழிலே தான்பேசணும்.தமிழ் தாய்மொழி
.தாய்தான் முதல் கடவுள். தமிழ்ப் பேச்சை
மறக்கக் கூடாது.”

நடு வயதுத்தம்பதிகள்.நான்கு குழந்தைகள்
எல்லாம் நவீன ஆடை-அலங்காரம்,
நவீனத் தோற்றம்.பெண் குழந்தைகளுக்கு
கழுத்து வரை மட்டுமே கூந்தல்.
எல்லையோரச் செடிகளை,இடுப்பளவு
உய்ரத்துக்கு மேல் வளராதபடி கத்தரிக்கோலால்
வெட்டி விட்ட மாதிரி , நுனி நாக்கில் ஆங்கிலம்
விளையாடியது. கான்வென்ட் படிப்பு.
பெரியவா,அந்தக் குழந்தைகளைத் தன் அருகில்
வரச் சொன்னார்கள்.-வந்தன
“பேரென்ன? எங்கே படிக்கிறே” என்று
விசாரணையாய் உரையாடல்.
குழந்தைகள் ரொம்ப சகஜமாகி விட்டன:
உற்சாகமாக,தயக்கமில்லாமல் பதில்
சொல்லிக் கொண்டிருந்தன.
அருகிலிருந்த பழத் தட்டைக் காட்டி,
“யாருக்கு என்ன பழம் வேணுமோ,
எடுத்துக்கலாம்” என்று சொன்னார்கள்.
குழந்தைகளுக்கு ரொம்ப சந்தோஷம்.
Thanks – என்று சொல்லிவிட்டுப் பழங்களை
எடுத்துக் கொண்டன.
பெரியவா சொன்னார்கள் : “ஒரு request
நான் சொன்னா, கேட்பேளா?”
ஒரே குரலில்,”Oh Yes! certainly we will do”
என்று குழந்தைகள் கூறின.
“வெளி இடத்திலே,பள்ளிக்கூடத்திலே
அல்லது வேறு மனுஷ்யாளிடத்திலே
பேசறபோது இங்கிலீஷ்லே பேசு, உங்க
வீட்டிலே, அப்பா – அம்மா, சுவாமிகளா
இருக்கிற நான்; அப்புறம்,பகவான்
இவாளிடம் தயவு பண்ணி,தமிழிலே தான்
பேசணும்.தமிழ் தாய்மொழி,தாய்தான்
முதல் கடவுள். தமிழ்ப் பேச்சை மறக்கக்
கூடாது.”
குழந்தைகள், “இனிமே, அப்பா -அம்மா-குரு
தெய்வத்துக்கிட்டே தமிழிலேயே பேசறோம்
Promise என்றன.
பெரியவா முகத்தில் கோடி சூர்யப் பிரகாசம்
பண்டிதர்களுடன் அத்வைத விசாரம்
பண்ணும்போது பளீரிடும் ஒளியைக்
காட்டிலும் நூறு மடங்குப் பிரகாசம்.
Read more: http://periva.proboards.com/thread/10392/#ixzz3pMiWwZF3
source….www.periva.proboards.com
Natarajan