வாரம் ஒரு கவிதை …” இழப்புகள் தரும் வலி ” …

இழப்புகள் தரும் வலி
………………..
இருப்பதை  இழந்தால் உறுத்தும் மனசு …வலிக்கும்   இதயம்
பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி என்றால்
இருப்புக்கும் இழப்புக்கும் அதே நியதிதானே…பின்னர் ஏன்
 இருப்பதை இழக்கும் நேரம் வலிக்குது இதயம் ?
விடை இதுதான் …நம்மிடை ஒன்று இருக்கும் சமயம் தெரிவதில்லை
நம்முடன் இருப்பதன் அருமையும் பெருமையும் !
இழந்தது பொருளானால்  மீட்கலாம் அதை  கடும்  உழைப்பால்!
இழந்தது நட்பானாலும் மீண்டும் மலர்ந்து தொடரும் அதே நட்பு
நடந்ததை நண்பர்கள் மறந்தால் !
இழந்தது நெருங்கிய உறவானால் நிச்சயம் நொறுங்கும் இதயம் !
இந்த இழப்பினால் வரும்  வலி, ” நான் ”  ” எனது ” என்னும் நம்
குறுகிய உணர்வை  துறக்க ஒரு  வழியையும் திறக்கும் !
இழப்புகள் தரும் வலியால் பிறக்கும் ஒரு நல் வழியும்  இதுவே !
Natarajan

One thought on “வாரம் ஒரு கவிதை …” இழப்புகள் தரும் வலி ” …

  1. Sampathkumar K's avatar Sampathkumar K February 9, 2016 / 1:39 pm

    Nice kavithai. Heart warming and touching.

Leave a comment