காத்திருப்பு ….
……….
அன்னையின் கருவறையில் காத்திருந்து இந்த மண்ணில்
பிறந்த நேரம் முதல் முடியாத ஒரு தொடர்கதை மனிதனின் காத்திருப்பு !
நம் வாழ்வின் ஒவ்வொரு திருப்புமுனையும் காத்திருப்பின் முடிவில்
அரும்பும் புது மலர்களே … புன்னகைப் பூக்களே !!!
நல்லதே நடக்கும் நாளைக்கு என எதிர் வரும் நாளுக்கு
நல்வரவு சொல்லி நம்பிக்கை யுடன் காத்திருக்கும் நமக்கு
இன்றைய பொழுதின் இன்னல் யாவும் பகலவன் முன் பனி போல்
மறையும் !
நாளை நமதே …இது நம் நம்பிக்கை! காத்திருப்போம் நாம்
ஒரு வளமான ஒளி மிகு பாரதம் காண !
இந்த காத்திருப்பு நிச்சயம் ஒரு சுமையல்ல நமக்கு…அது ஒரு
சுகமான சுவையான முன்னோட்டமே !
Natarajan