செல்லாக் காசு
………….
சேர்த்து வைத்த செல்வம் எல்லாம் ஒரே ஒரு சொல்லால் செல்லாக் காசானதே !
பார்த்து நடந்து கொள் தம்பி …புரிந்து கொள்ளவேண்டும் நீ …
செல்வாக்கு ஒருவனுக்கு அவன் சேர்த்து வைக்கும் பணத்தால் அல்ல என்று !
சுத்தமான சொல்வாக்கு தரும் உனக்கு ஒரு தனி செல்வாக்கு !
கறை படியா கரமும் நெறிபிறழா வாழ்வு முறையும் சேர்த்து வைக்கும்
உனக்கு எங்கும் என்றும் செல்லுபடியாகும் ஒரு செல்வாக்கை !
காசு பணம் செல்லாது நாளை முதல் என்று சொல்ல முடியும் ! ஆனால் மாசற்ற
செல்வாக்கு செல்லாது இனிமேல் என்று சொல்ல முடியுமா யாரும் ?
யோசிக்க வேண்டும் நீ… தம்பி !
Natarajan
http://www.dinamani.com dated 21st Nov 2016