கவிக்கோவுக்கு கவிதாஞ்சலி
————————-
கவிஞன் என்று சொன்னாலே அது கவிக்கோ !
கதையிலும் கவிதை விதை விதைத்து கவி
சொன்ன கவிஞன் அவன் ….இந்த புவி கேட்ட
கவிதை தானும் கேட்க விழைந்தானோ அந்த
இறைவன் ? இறை அழைப்பு ஏற்று இப்புவி
துறந்து எமை மறந்து பறந்து சென்றாயோ கவிஞனே ?
நீ பறந்து சென்ற வேகம் பார்த்து நான் வாய் மூடி
மௌனியானேன் …உன் பால் வீதி கவிதைப் பயணம்
முடித்து உன் வீட்டு வீதிக்கு நீ மீண்டும் திரும்பும் நாள்
வரை காத்திருப்பேன் நான் மெளனமாக !
உன் பால் வீதி பயணத்தில் என் மௌனத்தின் குரல்
உனக்கு கேட்காமல் இருக்குமா என்ன ?
Natarajan
12th June 2017