வாரம் ஒரு கவிதை ….” நெடு வாழ்வின் நினைவு “

நெடு வாழ்வின் நினைவு
+++++++++++++++++++++++
நெருநெல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை படைத்தது இந்த பூமி !
சில நாள்  வாழ்ந்தாலும்  பல நாள் வாழ்ந்தாலும்
பதிக்க வேண்டும் நான்   ஒரு நல்ல முத்திரை !
வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் என்று நானும்
படைக்க வேண்டும் சரித்திரம் !
ஆயிரம் பிறை காண ஆசை எனக்கு  என் நெடு
வாழ்வில் ! அந்த நெடு வாழ்வின் நினைவலைகள்
மீது விடாது தொடர வேண்டும் என் படகுப்
பயணம் …நெடு வாழ்வின் இனிய பயணம் !
என் பயணம் முடிந்தாலும் தொடர வேண்டும்
என் பிள்ளைகள் பயணம் அதே படகில்
என் நெடு வாழ்வின் நினைவலைகள் மீது !
படைக்க வேண்டும் அவரும் ஒரு சரித்திரம்
அவரவர் நெடு வாழ்வில் !
K.Natarajan
in http://www.dinamani.com dated  26/06/2019

வாரம் ஒரு கவிதை ….” தாக்குங்கள் எங்களை ….” !!!

தாக்குங்கள் எங்களை ….
++++++++++++++++++++++++
படையெடுத்து வாருங்கள் …அணிவகுத்து
வாருங்கள்  எங்களைத்  தாக்க !
குறி பார்த்து தாக்குங்கள் எங்களை !
காத்திருக்கிறோம் நாங்கள் !
மிரண்டு ஓடி ஒளிய மாட்டோம் நாங்க !
திரண்டு வாருங்கள் கருமேகங்களே
“குண்டு ”  மழை  பொழிய !
மண்டியிட்டு உங்களை வணங்குவோம்
உங்கள் “குண்டு ” மழை எங்களை
முத்தமிடும் நேரம் !
தாக்குங்கள் எங்களை சீக்கிரம் !
K .நடராஜன்
22/06/2019