இந்த வாரக் கவிதை …..” புதுமை பொங்கல் ” !!!

புதுமை பொங்கல்
…………….
தை பிறந்தால் நல் வழி பிறக்கும் …வாழ்வு சிறக்கும்  !
பிறக்கும் தை மாதமதை நாம்  கை தட்டி வரவேற்போம் !
இரு கரம் கூப்பி  தை தாய்க்கு வந்தனமும்  செய்வோம்
நம் வாழ்வு சிறக்க ..  நாடு செழிக்க வேண்டி !
புதுப் பானையில்  மஞ்சள் கொத்துடன் ,செங்கரும்பு சூழ
 நம் வீட்டில் பொங்கல்  பொங்கும் நேரம்
நமக்கு பொன்னான நேரம் !…நாம் தொடுவதெல்லாம்
பொன்னாக மாற  இதுவே  அச்சாரம் !
பொங்கலுடன் சேர்ந்து மங்களமும்   பொங்கட்டும் …பொங்கும்
மங்களம் தங்கட்டும் நம் எல்லோர்  இல்லத்திலும் உள்ளத்திலும் !
பொங்கல் வாழ்த்து பிறருக்கு நாம் சொல்லும் அதே நேரம்
மறக்காமல்  சொல்லவேண்டும்  பல்லாயிரம்   நன்றி …
புத்தரிசி கொடுத்த பெருமகன் , வேளாண் குடிமகன் அவனுக்கு !
சேற்றில் கால் வைக்க அவன் மறுத்தால்  , பொங்கல் சோற்றில்
கை வைக்க முடியுமா நம்மால் ? மறுக்க முடியாது  இந்த உண்மையை !
உன்ன உணவு கொடுக்க உழைக்கும்  உழவனவன் இறைவனே நமக்கு!
வரும் தை பொங்கல் நன்னாளில் நம் வீட்டு பொங்கலை உழவர்
 குடும்பம் ஒன்றுடன் சேர்ந்து அமர்ந்து பகிர்ந்து நாம் உண்ணும்
தருணம் நம் வீட்டு பொங்கலுக்கு பெருமை சேர்க்கும் !
தித்திக்கும் பொங்கல் நன்னாளில் புதுமை இதை
நாம் செய்தால் நம் வீட்டு பொங்கலின் தித்திப்பு மேலும் கூடும் !
Credit……. My kavithai  published in http://www.dinamani.com  on 18 Jan 2016
natarajan

Leave a comment