” எப்போ நீங்க திரும்ப வருவீங்க எங்க வீட்டுக்கு …” ?

நீங்க வந்து எங்களுடன்  இருந்த இந்த ஒம்பது  நாளும் எங்களுக்கு
ஒரே கொண்டாட்டம்..சந்தோஷம் … உங்க பேர் சொல்லி நாங்களும்
சாப்பிட்டோம் தினம் தினம்  ஒரு இனிப்பு …சுண்டல் !!!
கூப்பிட்டு கூப்பிட்டு வீட்டுக்கு வந்த சொந்த பந்த உறவுக்கும்
ஒரே சந்தோஷம் …விருந்தாளி உங்களை எல்லாம் பார்க்க …அவங்க
சந்தோஷத்தில் பிறந்தது தினம் பல பாட்டும் , பஜனையும்
எல்லாமே உங்களுக்காக …
எங்களுக்கு இன்று ‘பொக்’கென்று போய் விட்டது
உங்களுக்கு தெரியுமா ஏன்  என்று ?
விஜய தசமி சுண்டல் இனிப்புடன் நீங்க எல்லாம்
உங்க உங்க ஊருக்கு கிளம்பி விடுவீர்களாம்
எங்க அம்மா சொன்னாங்க …
பிள்ளையாரப்பா , முருகன் மாமா  , சிவன் தாத்தா
பார்வதி பாட்டி , பெருமாள் தாத்தா , லக்ஷ்மி பாட்டி
குட்டி கிருஷ்ணா , நீங்க எல்லாம் எப்போ மறுபடி
எங்க வீட்டுக்கு வருவீங்க ? சீக்கிரமா வாங்க …
நாங்க உங்களையே நினைத்துக் கொண்டிருப்போம்
நீங்க திரும்ப  எங்க வீட்டுக்கு வரும்  வரைக்கும் !!!
………………
 நவராத்திரி கொலு நிறைவுற்றது …பொம்மைகள் எல்லாம் மீண்டும் பரண் மேலே செல்லும்…

வீட்டு குழந்தைகள் விஜயதசமி அன்று பொம்மைகளுடன் பேசுவதாக வடிக்கப்பட்ட ஒரு சிறு கவிதை.

நடராஜன்

22 OCT 2015
DSC_1014

Leave a comment