” அது ஒரு காலம் …” !!!

 

💥ஒரு காலம் இருந்தது.

💥மனிதாபிமானத்தையும்
மனச்சாட்சியையும்
எம்மில் பெரும்பாண்மையினர்
நேசித்த ஒரு காலம் இருந்தது.

💥கடவுளுக்கு பணிந்த காலம்.
💥சத்தியத்தை மதித்த காலம்.
💥நம்பிக்கையை காப்பாற்றிய காலம்.
💥வாக்குறுதிகளை பறக்கவிடாத காலம்.
💥அகிம்சைக்கு அடிபணிந்த காலம்.
💥பெண்களை போற்றிய காலம்.
💥நீதியை நிலைநாட்டிய காலம்.
💥நியாயத்தை துணிந்து கேட்ட காலம்.
💥பணத்துக்கு மதிப்பிருந்த காலம்.
💥பாசத்துக்கு கட்டுப்பட்ட காலம்.

💥நாடகக்கலை வளர்ந்த காலம்.
💥நடிப்புக்கு இலக்கணமிருந்த காலம்.
💥பயபக்தி என்ற சொல்லையே வணங்கிய காலம்.
💥சுவாமிமாரை கடவுள்களாய் பார்த்த காலம்.
💥வானொலிப் பாடல்களில் சுகித்திருந்த காலம்.
💥பழஞ்சோற்று உருண்டையை ருசித்த காலம்.
💥பனம்பாயில் படுத்துறங்கிய காலம்.

💥ஆறுகளில் எப்போதும் நீர் இருந்த காலம்.
💥முழுநிலவை சனங்கள் ரசித்த காலம்.

💥பத்திரிகைகைள் உண்மைகளை மட்டுமே சொன்ன காலம்.
💥கட்சிகள் மக்களுக்காய் உழைத்த காலம்.
💥கோயில்கள் சேவை செய்த காலம்.
💥மழை தவறாமல் பொழிந்த காலம்.
💥மலிவு விலையில் எல்லாம் கிடைத்த காலம்.
💥ஊழல் என்ற சொல் அறியாத காலம்.
💥தண்ணீர் விற்கப்படாத காலம்.
💥வயல்களில் கட்டிடங்கள் எழுப்பப்படாத காலம்.
💥கடிதங்கள் மட்டுமே இருந்த காலம்.

💥மீதிப் பணத்திற்கு மிட்டாய்களைத் தராத காலம்.
💥ஆபாசங்களை நம்பியிராத நடிகைகளின் காலம்.
💥பாடகிகள் நிலைத்து நின்று பாடிய காலம்.
💥மருந்தில் பழுக்காத மாம்பழங்கள் கிடைத்த காலம்.
💥நகைக்கடன் கடைகள் அதிகமிராத காலம்.
💥இராப் பிச்சைக்காரர்கள் வீடுதேடி வந்த காலம்.
💥விபத்துக்கள் அரிதாக இருந்த காலம்.
💥வீட்டு வாசல்களில் குடிதண்ணீர் வைத்திருந்த காலம்.

💥எல்லோரையும் கள்வர்களாய் பார்க்காத காலம்.
💥மருந்துக் கடைகள் குறைவாய் இருந்த காலம்.
💥புற்றுநோய் அதிகம் உயிரெடுக்காத காலம்.
💥உடலுழைப்பு அதிகமாய் இருந்த காலம்.
💥மின்வெட்டு பற்றி யாருமறியாத காலம்.
💥வண்ணத்துப் பூச்சிகளை இலகுவாய் பிடித்த காலம்.
💥வழுக்கல் இளநீரை மிகமலிவாய் குடித்த காலம்.

💥சிட்டுக்குருவிகள் முத்தத்துக்கு வந்த காலம்.
💥வாகன நெரிசல் இல்லாத காலம்.
💥இலவசங்கள் ஏதும் தரப்படாத காலம்.
💥அர்த்தமுள்ள பாடல்கள் எழுதப்பட்ட காலம்.
💥வார்த்தைகள் விளங்கும் சங்கீதம் வாழ்ந்த காலம்.
💥கலப்பில்லாத அழகுத் தமிழ் பேசிய காலம்.
💥வேப்பமரங்களும்,குயில்களும் நிறைந்திருந்த காலம்.
💥எல்லோருக்கும் நேரமிருந்த காலம்.
💥ஊர்கூடி தேர் இழுத்த காலம்.

💥இனிமேல் யாருக்கும் கிடைக்கவே கிடைக்காத
ஒரு காலமிருந்தது
ஒரு காலமிருந்தது.

💥அது நாங்களெல்லோரும்
அன்பில் திளைத்திருந்த காலம்.

Source….. input from a friend of mine

Natarajan

2 thoughts on “” அது ஒரு காலம் …” !!!

  1. sampathkumar K's avatar sampathkumar K July 14, 2016 / 4:37 am

    absolute truth. We will never get back those happy days. will the present day generation clean today’s corruptive world and the create those wonderful days again?

  2. Natarajan's avatar natarajan July 14, 2016 / 4:40 am

    Let us hope for the best ….History may repeat in our grandchildren time atleast !

Leave a reply to natarajan Cancel reply