எதிர்கால கனவு
……………
குழந்தை பிறந்த நிமிடம் முதல் அம்மா அப்பாவுக்கு கனவு
அவர் பிள்ளையின் எதிர்காலம் !
கனவு பல கண்டு வளரும் பிள்ளை உனக்கும் அந்த கனவுதான்
அஸ்திவாரம் நீ கட்டும் உன் வாழ்க்கை வீட்டுக்கு …உன் நாட்டுக்கு !
கனவு பல இருக்கலாம் ..ஆனால் அது உன் தூக்கத்தில்
வரும் கனவு அல்ல தம்பி… உன்னை தூங்க விடாமல் உன்னை
துரத்தும் உன் லட்சியக் கனவாக மட்டுமே இருக்கலாம் தம்பி !
கனவிலும் உன் சிந்தனை இருக்கலாம் …சிந்தித்து சிந்தித்து
உன் லட்சியம் எட்ட நீ ஏறும் ஏணியாக உன் கனவு இருக்கலாம் !
முடியாத செயலை முடிக்க வேண்டும் என்று கனவு இருக்கலாம் !
இதை நான் சொல்லவில்லை தம்பி !…அந்த மாமனிதன்
கலாம் சொன்னது உனக்கு !.. மறக்க வேண்டாம் நீ அந்த
மாமனிதனின் மணி மொழி ! அவன் சொல் வழி நீ நடந்து
மாற்றிக் காட்டு உன் தாய் நாட்டை ஒரு புதிய பாரதமாக !
“இருபது இருபது …பாரதம் ஒரு வல்லரசு” …இதுவே உன்
கனவாகட்டும் …உன் கனவு நனவாகும் அந்த நாள்
மாமனிதன் கலாம் கண்ட கனவும் நனவாகும் பொன்னாள் !
Natarajan……My kavithai in http://www.dinamani.com on 22 august 2o16