வாரம் ஒரு கவிதை… ” புதையல் ” !

 

புதையல்
……….
கையில் இருக்கும் பொருளின் மதிப்பு தெரியாது நமக்கு
அது மண்ணுக்குள் புதையும் வரை … உறவுகளும்
இதில் அடங்கும் !  அன்பும் ஆதரவும்  தேடும்
முதியோரை உனக்கு கிடைத்த  புதையலாக
நினைத்து அரவணைத்தால் வேறு  எந்த ஒரு புதையலையும்
தேடி என்றும் அலைய வேண்டாம் தம்பி நீ !
காலம் மாறும்!  காட்சியும் மாறும்!  நீயும் ஒரு
புதையலாக தெரிய வேண்டும் ஒரு நாள் உன் பிள்ளைக்கு!..இந்த
புதையல் மட்டும் மண்ணில்  புதையாமல் வளர வேண்டும்
ஒரு மரமாக உன் வீட்டில் என்றும் ! புதையல் மரம்
துளிர்த்து தளிர்த்து வளர விதைத்திடு ஒரு விதை  நீ இன்று !
Natarajan
http://www.dinamani.com  dated 28th Nov 2016

One thought on “வாரம் ஒரு கவிதை… ” புதையல் ” !

  1. ரவிச்சந்திரன்'s avatar ரவிச்சந்திரன் December 4, 2016 / 7:22 am

    மிகவும் அருமை.

Leave a comment