புதையல்
……….
கையில் இருக்கும் பொருளின் மதிப்பு தெரியாது நமக்கு
அது மண்ணுக்குள் புதையும் வரை … உறவுகளும்
இதில் அடங்கும் ! அன்பும் ஆதரவும் தேடும்
முதியோரை உனக்கு கிடைத்த புதையலாக
நினைத்து அரவணைத்தால் வேறு எந்த ஒரு புதையலையும்
தேடி என்றும் அலைய வேண்டாம் தம்பி நீ !
காலம் மாறும்! காட்சியும் மாறும்! நீயும் ஒரு
புதையலாக தெரிய வேண்டும் ஒரு நாள் உன் பிள்ளைக்கு!..இந்த
புதையல் மட்டும் மண்ணில் புதையாமல் வளர வேண்டும்
ஒரு மரமாக உன் வீட்டில் என்றும் ! புதையல் மரம்
துளிர்த்து தளிர்த்து வளர விதைத்திடு ஒரு விதை நீ இன்று !
Natarajan
http://www.dinamani.com dated 28th Nov 2016
மிகவும் அருமை.