வாரம் ஒரு கவிதை …” மறு ஜென்மம்”

 

மறு ஜென்மம்
————–
நெரு நெல் உளனொருவன் இன்று இல்லை
என்னும் பெருமை படைத்த இந்த உலகில்
இரவில் கண்ணுறங்கி மீண்டும் கண் விழிக்கும்
அந்த இனிய காலை நேரமே நம் யாவருக்கும் ஒரு
மறு ஜென்மம் !  மறுக்க முடியுமா இந்த உண்மையை ?
கிடைத்தது ஒரு  அரிய மனிதப் பிறவி …தெரியும் இந்த
உண்மை நமக்கு ! தினமும்  காலையில் நாம்
எடுப்பது ஒரு மறு  ஜென்மம் ! இதுவும் தெரியும் நமக்கு !
இருக்கும் அந்த ஒரே ஒரு  நாளில் மறக்கலாமா
நாம் மனித நேயம் ?
தினம் காணும் மறு ஜென்ம விடியல் மறந்து
வேறு ஒரு புது  ஜென்ம மாய வலையில்
சிக்கி, கிடைத்த மனிதப்   பிறவியின்  மதிப்பைக்
குறைக்க வேண்டாமே நாம் !
மனிதராய் பிறந்தோம் …மனிதராகவே
வாழ்ந்து காட்டுவோம் ! அது ஒன்றே நமக்கு
கிடைத்த மனிதப் பிறவியின் பயன் !
Natarajan  in http://www.dinamani.com dated 26th june 2017

Leave a comment