பறவையின் மனசு
——————–
பறவைக்கும் உண்டு மனசு ..
சிறகு கட்டிப் பறக்கும் அதன்
மனசும்… ஆசையும் பாசமும்
பறவைக்கும் சொந்தமே !
ஆனால் இலக்கு ஒன்று மட்டுமே
பறவைக்கு குறி ! விதி விலக்கு
இல்லையே இதில் எந்த ஒரு பறவைக்கும் !
கண்டம் விட்டு கண்டம் பறக்கும்
பறவை எந்த பள்ளியில் படித்தது ?
எங்கே பாடம் கற்றது விண் வெளியில்
தன் பயண வழி தேட ?
மனிதன் கற்க வேண்டும் பாடம்
ஒரு பறவையிடம் இன்று
தன் இலக்கு நோக்கி சரியான
வழியில் பயணிக்க !
இங்கும் அங்கும் அலையாமல்
ஒரு வழி அதுவும் நேர் வழியில்
பயணித்து தன் வாழ்வின் சிகரம்
தொட இன்று மனிதனுக்கு தேவை
பறவை சொல்லும் பாடம் !
Natarajan
in http://www.dinamani.com dated 25th Sep 2017
super.