Message For The Day… Have a Meal of Good Acts of Service,& Divine Thoughts Daily…

Prayer is the very breath of religion; for, it brings man and God nearer and nearer to each other. Meditation (dhyana) is the process of listening to the Song Celestial, the flute of Krishna, with the mental ears alert on the melody. Just as every day you engage in exercises and consume tonics, calculating the intake of calories and vitamins, paying meticulous attention to the nutritional value of the food, pay attention also to the intake of impressions into the mind, whether they debilitate or strengthen, whether they add to the power of resistance of the mind against the viruses – greed, envy, hatred, pride, malice, etc. Have a meal of good acts of service, divine thoughts, and drink the juice of Love (Prema rasa), so that they may be washed down, and digested well. Then, you can be shining in mental health, happiness and wholesomeness.

 

Sathya Sai Baba

Divine Image of the Day….

Today on this day ,I just wanna bow down in front of my creator and say… 
You, God are the Giver of gifts,
the Lord of perfect understanding.
I am a mere beggar at Your Door
What should I beg for?
Nothing remains permanent
O Lord, Please , Bless me
with Your Beloved Name !!
Satnaam Satnaam Shri Wahe Guru Shri Wahe Guru!
Ram Ram Sai Ram-Mere Guru
Bless me with Your Beloved Name!!! 
source::::: H.DEEPA in sri shirdi sai speaks
natarajan

Message For The Day…God is The Truth …The Only Truth !!!

What exactly is Truth? Is it the description of a ‘thing seen’ as one has seen it, without exaggeration or under-statement? No. Or, the narration of an incident in the same word as one has heard it narrated? No. Truth elevates; it holds forth ideals; it inspires the individual and society. It is the Light that illumines one’s path to God. A life inspired by Truth will enable man to live as man – not degrade oneself to the status of a lower species. There is God everywhere and there is no second entity. God is the Truth, the only Truth. God is in every article or thing, as the basis, as understanding and understandability, as the source of Divine light, as Atma. Truth is the One Awareness, the One Divine Energy that activates every living being, nay, every particle of matter.

 

Sathya Sai Baba

Divine Image of the Day….

 

Quote of BABA:
If any devotee meditated on Me day and night with complete self surrender, he experiences complete union (without any difference) with Me like sweetness and sugar, waves and sea, eye and its lusture.   

 

source:::::H.Deepa in Sri Shirdi Sai Speaks

natarajan

 

 

 

 

 

 

Message For The Day….Take the Name of God and Repeat it with Faith….

Develop faith in yourselves, so that you can stand like a rock braving the rushing waters of the flood of negation. That faith will make you overcome the changing circumstances of the outer world. Keep the flame of detachment (vairagya) burning with tiny sticks until it grows into a big bonfire; welcome all chances to develop discrimination (viveka). Take the Name of the Lord and repeat it always. Sing to the Lord with faith and enthusiasm. Let the whole environment reverberate with the devotion you put into every Name that you sing. The Lord’s Name promotes comradeship and establishes concord; it stills all storms and grants peace. Become a blossom, exude the fragrance of seva (selfless service) and prema (love); then you will find a place in the garland that adorns the Lord.

 

Sathya Sai Baba

” ஏன் இன்று அந்த தெலுங்கர் வரலையா ” ?

காஞ்சி மஹானின் கருணை உள்ளத்திற்கு இது தான் அளவென்று சொல்ல முடியாது. பக்தர்களை இனம் பிரித்துப் பார்ப்பது அவருக்குப் பிடிக்காத காரியம். நல்லவன் யார் கெட்டவன் யார் என்பதையெல்லாம் அவரவர்களின் செயல்பாடுகளின் மூலம் அறியக்கூடியவர் அவர்.

1980ஆம் வருட வாக்கில் பெரியவா வடக்கே பாத யாத்திரை செய்யக் கிளம்பிய சமயம், ஆந்திராவில் ஒரு பெளர்ணமி நாளில் அந்த மஹானுக்கு ஷவரம் செய்து முடிகளை அகற்ற தெலுங்கரான ஒரு நாவிதர் அழைத்து வரப்பட்டார். அடுத்தடுத்த பெளர்ணமி நாட்களிலும் அதே நாவிதர் ஸ்ரீமடத்திற்கு அழைத்துவரப்பட்டு பெரியவா சேவைக்கு அமர்த்தப்பட்டார்.

மஹானை ஸ்பர்ஸித்து தொண்டு செய்யும் பாக்கியம் பெற்ற அந்த நாவிதர் சிரத்தையோடு தன் தொழிலைச் செய்தார். மஹானுக்கு பணி செய்யும் மகத்துவத்தை முதலில் புரியாமல் இருந்தவருக்கு மாதந்தோறும் இந்தத் திருப்பணி கிட்டியதில் மஹான் சிலரை ஈர்த்து ஆட்கொண்டுவிட்டதில் வியப்பே இல்லை எனலாம்.

அதனால் பணிவிடைகள் செய்ய வருவது போல் அல்லாமல் இந்த நாவிதர் பூர்வ பக்தியோடு வரும் நிலை தானாக அவருக்கு ஏற்படலாயிற்று. அப்படி வரும்போது மஹாபெரியவாளுக்கு ஏழ்மையான இந்த பக்தர் எதைக் கொண்டு வர முடியும்?

ஒரு மூட்டை நிறைய புற்று மண் மாங்குச்சி என மஹான் உபயோகிக்கும் வஸ்துக்களைக் கொண்டுவந்து சமர்ப்பித்தபின் முடி இறக்கும் பணியைச் செய்துவிட்டு விடைபெறுவது தொடர்ந்தது.

மஹாபெரியவா வடக்கே இருந்து திரும்பவும் காஞ்சி ஷேத்திரம் வந்தாயிற்று. தெலுங்கு தேசத்திலிருந்து நாவிதர் காஞ்சி வருவதும் தொடர்ந்தது.
இப்படித் தொடர்ச்சியாக வந்து கொண்டு இருந்த அந்த நாவித பக்தரின் மனதில் தாழ்வு மனப்பான்மை பக்தியினால் எழுந்தது. புற்று மண்ணை ஒரு அழுக்கான துணியில் கட்டி அதோடு மாங்குச்சியை தட்டில் வைத்து ஒரு ஓரமாக வைத்துவிடுவார்.

அதேசமயம் பெரியவா முன் அவர் விரும்பாமலேயே பக்தர்கள் சமர்ப்பிக்கும் உயரிய பழவகைகள் முந்திரி, பிஸ்தா பருப்பு, விலை உயர்ந்த சால்வைகள், தங்க நாணயங்கள் என பல தட்டுகளில் அணிவரிசைகளுக்கிடையே மஹாபெரியவா என்னும் ஏழை பங்காளனுக்கு நாவிதர் சமர்ப்பித்துச் செல்லும் அழுக்கு மூட்டையே உயர்வாகத் தெரியும்.

மஹானின் முன்னால் சமர்ப்பிக்கப்படும் பொருள்களைப் பார்த்தபோதுதான் அந்த நாவிதனுக்கு மனதில் ஆதங்கம் ஏற்பட்டது. தானும் இப்படி தரிசனத்திற்கு அடுத்த தடவை வரவேண்டும் என்று தீர்மானித்த அந்த பக்தர் தான் புற்று மண் வைத்த தட்டில் விலை உயர்ந்த பழங்கள், தேங்காய் திராட்சை என பல வஸ்துக்கள் நிறைந்திருக்க அத்துடன் சில ரூபாய் நோட்டுக்களும் காணப்பட்டன.

மற்றவர்களுக்கு இணையாகத் தானும் மஹானுக்கு இதைப்போன்ற வஸ்துக்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த நாவிதர் நினைத்ததன் விளைவு இது.
இருந்தாலும் மஹானின் முன்னிலையில் இவைகள் சமர்ப்பிக்கப்பட்டபோது அவரிடமிருந்து ஒரு சந்தேகம் எழுந்தது.

“ஏன் இன்னிக்கு அந்தத் தெலுங்கர் வரலையோ” என்று கேட்க, மடத்து சிப்பந்திகள் தெலுங்கர் சமர்ப்பித்த தட்டைக் காண்பித்தனர்.

“என்ன இது, அவர் எப்போதும் கொண்டு வந்து வைக்கிற மாதிரி தெரியலையே” என்று அந்த பக்தரைப் பிரத்தியேகமாக அங்கீகரிக்கவே கேட்பது போல மஹான் வினவ, அப்போதுதான் அந்த உண்மை வெளிப்பட்டது. நாவிதர் மஹானின் முன்னால் சற்று தூரத்தில் நிற்க, “உனக்கேது இவ்வளவு பணம்” என்கிற கேள்வியை கேட்டு அவரது உண்மையான பக்தியை வெளிக்கொணர்ந்தார்.

எல்லோரையும் போல் மஹானுக்கு தன்னால் ஏதும் கொண்டு போக முடியவில்லையே என்று வருந்திய அந்த நாவிதர் தெரு ஓரத்தில் தன் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்த குடிசையை விற்றுவிட்டார்.

மனைவியும் குழந்தைகளும் தெருவில் நிற்க இவர் குடிசை விற்ற பணத்தில் மஹானுக்குத் தேவை என நினைத்து வாங்கிய பொருட்களோடு மீதம் இருந்த பணத்தையும் தட்டிலேயே வைத்து மஹான் முன் சமர்ப்பித்துவிட்டார். அப்போதுதான் அங்கிருந்த மற்ற பக்தர்களுக்கு இவரைப் பற்றித் தெரியலாயிற்று.
குடும்பத்தையே தெருவில் நிறுத்திவிட்டு இப்படித் தன் உடைமைகள் யாவையும் மஹானின் மீது கொண்ட பக்திக்காக சமர்ப்பித்து நிற்கும் நாவிதரின் பக்தி மேன்மையை அனைவரும் அறியச் செய்தார் மஹான்.

அவருக்காக ஒரு நிரந்தரமான வீட்டைக் கட்டித் தரும்படி உத்தரவிட்டார் மஹான். அவருக்கு மேலும் பேரின்பம் அருளினார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

source:::::www.periva.proboards.com

natarajan
Read more: http://periva.proboards.com/thread/5278/barbers-devotion-mahaperiyavaa/#ixzz2gMUA2eU4

” Your job Doesn’t Define You..But Being a Good Human Being Does ” !!!

 

A doctor, a lawyer, a little boy and a priest were out for a Sunday afternoon flight on a small private plane. Suddenly, the plane developed engine trouble. In spite of the best efforts of the pilot, the plane started to go down. Finally, the pilot grabbed a parachute and yelled to the passengers that they better jump, and he himself bailed out.
Unfortunately, there were only three parachutes remaining.
The doctor grabbed one and said “I’m a doctor, I save lives, so I must live,” and jumped out.
The lawyer then said, “I’m a lawyer and lawyers are the smartest people in the world. I deserve to live.” He also grabbed a parachute and jumped.
The priest looked at the little boy and said, “My son, I’ve lived a long and full life. You are young and have your whole life ahead of you. Take the last parachute and live in peace.”
The little boy handed the parachute back to the priest and said, “Not to worry Father. The smartest man in the world just took off with my back pack.”
Moral: Your job doesn’t always define you, but being a Good Human being Does.
source:::: H.DEEPA … Shri shirdi sai speaks
natarajan

Message For The Day…Practice Detachment From Now On …

There was a man from Puttaparthi who lived in a solitary hut on the banks of the Ganga. He was engaged in severe penance and was admired by other monks. One day, while bathing in the river, he overheard a party of pilgrims who had just alighted from the bus, talking in Telugu. His attachment to his mother tongue dragged him; He asked them where they came from. Slowly, he gathered that they were from Anantapur District, Penukonda Taluk. His ears ached for further details. When they said they were from Puttaparthi, the monk was elated and began enquiring about his lands, family and friends. When he learnt that a few of them had passed away, he started weeping! All his years of penance broke down before the onslaught of language-attachment! Practice detachment from now on, slowly and steadily! Do not continue to add things that bind you to them. Bind yourself to the great liberator, God.

 

Sathya Sai Baba

” அம்மாவின் அன்புக்கரங்கள் ” ….

அம்மாவின் கைகள்.

கண்ணீரை அடக்க முடியவிலலை தெய்வத்தின் மறு பெயர்தான் தாய்.தியாகத்தின் சிகரம் தாய்

சில வருடங்களுக்கு முன்பு, வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்று இருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின் கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்து, அதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில் பயணம் செய்யும்போது, அதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில் அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.

அவர் புகைப்படத்தைக் கையில் எடுத்துப் பார்க்கும்படியாகச் சொன்னார். புகைப்படத்தை அருகில் தொட்டுப் பார்த்தபோது, அது வயதான ஒரு பெண்ணின் கைகள் என்பதைக் கண்டுகொண்டேன். முதுமையின் ரேகை படிந்த நீண்ட விரல்கள். நகங்கள் சுத்தமாக வெட்டப்பட்டு இருக்கின்றன. நரம்புகள் புடைத்துத் தெரிகின்றன. யாராக இருக்கும் என்று மனது ஏதேதோ துறவிகளை, ஞானிகளை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.

அவர் அந்தக் கைகளைப் பெருமூச்சுடன் பார்த்து ஆதங்கமான குரலில் அது என் அம்மாவின் கைகள் என்று சொன்னார். ஆச்சர்யமாக இருந்தது. “எதற்காக அம்மாவின் கைகளை மட்டும் புகைப்படமாக வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

“அந்தக் கைகள்தான் என்னை வளர்த்தன. என் நினைவில் எப்போதுமே அம்மாவின் கைகள்தான் இருக்கின்றன. அம்மாவின் முகத்தைவிட, அந்தக் கைகளைக் காணும்போதுதான் நான் அதிகம் நெகிழ்ந்துபோகிறேன்.

அம்மா இறப்பதற்குச் சில மணி நேரம் முன்பாக இந்தப் புகைப்படத்தை எடுத்தேன். இந்தக் கைகள் இப்போது உலகில் இல்லை. ஆனால், இதே கை களால் வளர்க்கப்பட்டவன் உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். என் அம்மா எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து ஓய்வு எடுத்ததே இல்லை.

அப்பா பொறுப்பற்ற முறையில், குடித்து, குடும்ப வருமானத்தை அழித்து 32 வயதில் செத்துப் போனார்.அம்மாதான் எங்களை வளர்த்தார். நாங்கள் மூன்று பிள்ளைகள். அம்மா படிக்காதவர். ஒரு டாக்டரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். பகல் முழுவதும் அவர்கள் வீட்டினைச் சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, நாய்களைப் பராமரிப்பதுபோன்ற வேலைகள். மாலையில் இன்னும் இரண்டு வீடுகள். அங்கும் அதேபோல் சுத்தம் செய்யும் வேலைதான். எத்தனை ஆயிரம் பாத்திரங்களை அம்மாவின் கைகள் விளக்கிச் சுத்தம் செய்து இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவே மனது கஷ்டமாக இருக்கிறது.

இரவு வீடு திரும்பிய பிறகு, சமைத்து எங்களைச் சாப்பிடவைத்து உறங்கச்செய்துவிட்டு அதன் பின்னும் அம்மா இருட்டிலேயே கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டு இருப்பார்கள். சமையல் அறையில்தான் உறக்கம். அப்போதும் கைகள் அசைந்தபடியேதான் இருக்கும். எங்கள் மூவரையும் பள்ளிக் கூடம் அழைத்துப் போகையில் யார் அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பது என்பதில் போட்டியே இருக்கும்.

அந்தக் கைகளைப் பிடித்துக்கொள்வதில் அப்படி ஒரு நெருக்கம், நம்பிக்கை கிடைக்கும். அதுபோலவே உடல் நலம் இல்லாத நாட்களில் அம்மாவின் கைகள் மாறி மாறி நெற்றியைத் தடவியபடியே இருக்கும். அம்மா நிதானமாகச் சாப்பிட்டு நான் பார்த்ததே இல்லை. தனது சகலச் சிரமங்களையும் அம்மா தன் கைகளின் வழியே முறியடித்து எங்களை வளர்த்தபடியே இருந்தார். மருத்துவரின் வீட்டில் அம்மா ஒருநாள் ஊறுகாய் ஜாடியை உடைத்துவிட்டார் என்று அடி வாங்குவதைப் பார்த்தேன். அம்மாவின் கன்னத்தில் மருத்துவரின் மனைவி மாறி மாறி அறைந்துகொண்டு இருந்தார். அம்மா அழவே இல்லை.

ஆனால், நாங்கள் பார்த்துக்கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல், விடுவிடுவென எங்களை இழுத்துக்கொண்டு அந்த வீட்டில் இருந்து வெளியேறினாள். வழியில் பேசவே இல்லை. அம்மாவை எந்தக் கைகளும் ஆறுதல்படுத்தவோ, அணைத்துக்கொள்ளவோ இல்லை. அவள் கடவுள் மீதுகூட அதிக நம்பிக்கைகொண்டு இருந்தாள் என்று தோன்றவில்லை. வீட்டில் சாமி கும்பிடவோ, கோயிலுக்குப் போய் வழிபடவோ, அதிக ஈடுபாடு காட்டியதே இல்லை. வேலை… வேலை… அது மட்டுமே தன் பிள்ளைகளை முன்னேற்றும் என்று அலுப்பின்றி இயங்கிக்கொண்டு இருந்தார்.

சிறு வயதில் அந்தக் கைகளின் முக்கியத்துவத்தை நான் புரிந்துகொள்ளவே இல்லை. ஆசையாகச் சமைத்துத் தந்த உணவைப் பிடிக்கவில்லை என்று தூக்கி வீசி இருக்கிறேன். கஷ்டப்பட்டுப் பள்ளியில் இடம் வாங்கித் தந்தபோது படிக்கப் பிடிக்கவில்லை என்று போகாமல் இருந்திருக்கிறேன். கைச் செலவுக்குத் தந்த காசு போதவில்லை என்று அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் திருடி இருக்கிறேன். மற்ற சிறுவர்களைப்போல சைக்கிள் வாங்கித் தர மாட்டேன் என்கிறாள் என்று கடுமையான வசைகளால் திட்டிஇருக்கிறேன். அம்மா எதற்கும் கோபித்துக்கொண்டதே இல்லை.அம்மா கஷ்டப்படுகிறாள் என்று தெரிந்தபோதும் யார் அவளை இப்படிக் கஷ்டப்படச் சொன்னது என்றுதான் அந்த நாளில் தோன்றியது. கல்லூரி வயதில் நண்பர்களோடு சேர்ந்து சுற்றவும், புதுப் புது ஆடைகள் வாங்கவும் குடிக்கவும் எத்தனையோ பொய்கள் சொல்லி இருக்கிறேன். என் அண்ணனும் தங்கையும்கூட இப்படித்தான் செய்திருக்கிறார்கள். ஆனால், அம்மா அதற்காக எவரையும் கோபித்துக்கொள்ளவே இல்லை.

கல்லூரி இறுதி ஆண்டில் மஞ்சள் காமாலை வந்து, நோயாளியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் அம்மா. அப்போதுதான் அவர் எங்களை எவ்வளவு அக்கறையோடு, ஆதரவோடு காப்பாற்றி வந்திருக்கிறார் என்று புரிந்தது. அதன் பிறகு, என்னைத் திருத்திக்கொண்டு தீவிரமாகப் படிக்கத் துவங்கி, ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்து கடுமையாக உழைத்துப் பதவி உயர்வுபெற்றேன். அம்மாவை என்னுடனே வைத்துக்கொண்டேன். நான் சம்பாதிக்கத் துவங்கியபோதும், அம்மா ஒருபோதும் எதையும் என்னிடம் கேட்டதே இல்லை. நானாக அவருக்கு எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று நினைத்து, தங்க வளையல் வாங்கித் தருகிறேன் என்று அழைத்துப் போனேன்.

முதிய வயதில் அம்மா மிகுந்த கூச்சத்துடன், ‘எனக்கு ஒரே ஒரு வாட்ச் வேண்டும். சின்ன வயதில் வாட்ச் கட்டிக்கொண்டு வேலைக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், அது நடக்கவே இல்லை. அதன் பிறகு, எனக்குள் இருந்த கடிகாரம் ஓடு… ஓடு… என்று என்னை விரட்டத் துவங்கியது. அலாரம் இல்லாமலே எழுந்துகொள்ளப் பழகிவிட்டேன். இப்போது வயதாகிவிட்டது. சில நாட்கள் என்னை அறியாமல் ஆறு மணி வரை உறங்கிவிடுகிறேன். இரவு உணவை ஏழு மணிக்குச் சாப்பிட்டுவிடுகிறேன். ஒரு வாட்ச் வாங்கித் தருவாயா?’ என்று கேட்டார்.

அம்மா விரும்பியபடி ஒரு வாட்ச் வாங்கித் தந்தேன். ஒரு பள்ளிச் சிறுமியைப்போல அதை ஆசையாக அம்மா எல்லோரிடமும் காட்டினாள். அதை அணிந்துகொள்வதில் அம்மா காட்டிய ஆர்வம் என்னை நெகிழ்வூட்டியது. அதன் பிறகு அம்மா, நான் திருமணம் செய்து டெல்லி, பெங்களூரு என்று வேலையாக அலைந்தபோது கூடவே இருந்தார். டெல்லியில் எதிர்பாராத நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். நான் கூடவே இருந்தேன்.

‘நாங்கள் ஏமாற்றியபோது எல்லாம் ஏன் அம்மா எங்களை ஒரு வார்த்தைகூடத் திட்டவே இல்லை?’ என்று கேட்டேன். அம்மா, ‘அதற்காக நான் எவ்வளவு அழுதிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால், அன்று நான் கோபப்பட்டு இருந்தால், என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போயிருப்பார்கள்’ என்று சொல்லி, தன் கையை என்னுடன் சேர்த்துவைத்துக்கொண்டார்.

அப்போதுதான் அந்த முதிய கைகளைப் பார்த் தேன். அது எவ்வளவு உழைத்திருக்கிறது. எவ்வளவு தூய்மைப்படுத்தி இருக்கிறது. எவ்வளவு அன்பைப் பகிர்ந்து தந்திருக்கிறது. அதை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பிறகு ஒருநாள், எனது கேமராவை எடுத்து வந்து, புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இன்று அம்மா என்னோடு இல்லை. ஆனால், இந்தக் கைகள் என்னை வழி நடத்துகின்றன. ஒவ்வொரு நாளும் நான் எப்படி வளர்க்கப்பட்டேன் என்பதை இந்தக் கைகள் நினைவுபடுத்துகின்றன. இதை வணங்குவதைத் தவிர, வேறு நான் என்ன செய்துவிட முடியும்?” என்றார்.

ராணுவ அதிகாரியினுடைய முகம் தெரியாத அந்தத் தாயின் கைகளை நானும் தொட்டு வணங்கினேன். அந்தக் கைகள் யாரோ ஒருவரின் தாயின் கைகள் மட்டும் இல்லை. உலகெங்கும் உழைத்து ஓய்ந்துபோன தாயின் கைகள் யாவும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அவை எதையும் யாசிக்கவில்லை. அணைத்துக்கொள்ளவும், ஆதரவு தரவும், அன்பு காட்டவுமே நீளுகின்றன. அதை நாம் புறந்தள்ளிப் போயிருக்கிறோம். அலட்சியமாகத் தவிர்த்து இருக்கிறோம்.

இலக்கு இல்லாத எனது பயணத்தில் யார் யார் வீடுகளிலோ தங்கியிருக்கிறேன். சாப்பிட்டு இருக்கி றேன். எனது உடைகளைத் துவைத்து வாங்கி அணிந்து இருக்கிறேன். அந்தக் கைகளுக்கு நான் என்ன நன்றி செய்து இருக்கிறேன். ஒரு நிமிடம் என் மனம் அத்தனை கைகளையும் வணங்கி, தீராத நன்றி சொன்னது.

‘கை விரல்களுக்கு இடையில் இடைவெளி இருப்பது இன்னொரு கைகள் நம்மோடு சேர்ந்துகொள்ளத்தான்’ என்று எங்கோ படித்தேன். அதை நிறைய நேரங்களில் நாம் உணர்வதே இல்லை. நம் மீது அன்பு காட்டும் கைகளுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

source::::: input from a friend of mine

natarajan