1).அடுத்தவர்கள் குடும்பத்தை எப்படி கெடுப்பது?
2).அடுத்தவர்கள் சொத்தை எப்படி அபகரிப்பது?
3).மாமியாரை எப்படி வீட்டை விட்டு
வெளியேற்றுவது?
4).மருமகளை எப்படி மகனிடம் இருந்து பிரிப்பது?
5).பெற்றோருக்கு தெரியாமல் எப்படியெல்லாம் தவறு
செய்வது?
6).எந்த தவறை எப்படி மறைப்பது?
7).அக்கம்பக்கத்தினர் உடன் எப்புடியல்லாம்
சண்டையிடுவது?
8).மற்றவர்களை பற்றி எப்படியெல்லாம் புறம்
பேசுவது?
9).கணவருக்கு எப்புடி அடங்காமல் நடப்பது?
10).மனைவியை எப்படி அடிமை படுத்துவது?
11). எப்படி பழிக்குபழி வாங்கலாம்?
12).ஆபாசமாக பேசுவது எப்படி?
மற்றும் கொலை, கொள்ளை, ஏமாற்றம், அபகரிப்பு,
ஆள் கடத்தல்,வன்முறை, வஞ்சகம், கள்ள காதல்
,விபச்சாரம்,அநியாயம்,அக்கிரமம், பொய்,திருட்டு
இப்படி எல்லாவற்றையும் அழகாக, தெளிவாக
சொல்லியும் கற்றும் தருவதுதான் இந்த நாடகம்
எனும் “சீரியல்“
காலையில் இருந்து இரவு 11 மணிவரை இந்த
சீரியலுக்கு அடிமையாக பலர் இருக்கிறார்கள்
குறிப்பாக “பெண்கள்“
குடும்பத்தில் வரும் பிரச்சனைகளுக்கு 70 % காரணம்
இந்த சீரியல்கள்தான்!
பொழுதுபோக்கு என்ற பெயரில் “எதை“வேண்டுமானாலும்
பார்ப்பதற்கு நாம் தயாராகிவிட்டோம் என்பதுதான் உண்மை!
நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும்தான் ஒரு சிறந்த
சமூகத்திற்கான அடையாளம்.
தீமைகளையும்,பாவங்களையும்
ரசிப்புக்குரியவையாக
நாம் பார்ப்பது அழிவுக்கே வழி வகுக்கும்.
சீரியல் என்பது தீமைகளின் “சிற்றேடு“
எனவே சீரியல் பார்ப்பதை விட்டும் நம்மையும் நமது
குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்வோம் !!!
சிறந்த சமூகத்தை உருவாக்கிடுவோம்!!!
Source……..Input from a friend of mine
Natarajan