வள்ளுவம் வாழ்வதெங்கே ?
வள்ளுவம் வாழ்வது எங்கே…?
வள்ளுவம் வாழ்வது இங்கே அங்கே என்றில்லாமல்
எங்கும் வாழ்கிறது வள்ளுவம் என்னும் வாழ் நெறி தத்துவம் !
தங்கத் தமிழில் வள்ளுவன் தந்த இரண்டு அடி குறட்பாவில்
இல்லாத செய்தி இது என்று இன்று வரை ஒன்று இல்லையே !
மொழி மத பேதம் மறந்து கடல் கடந்தும் பல மொழியில் ,குரலில்
ஒலிப்பது வள்ளுவன் குறள் ஒன்று மட்டுமே !..அன்னை
தமிழுக்கு இருக்காதா பூரிப்பு ? ..இங்கு அங்கு என்றில்லாமல்
எங்கும் நிறைந்திருக்கும் தன் பிள்ளை வள்ளுவனை நினைத்து !
நம் இதயத்தில் இறைவனை வைத்துக்கொண்டு இறைவன் எங்கே
எங்கே என்று தேடவும் வேண்டாம் !
திருக்குறள் நம் கையில் இருக்கையில்
வாழ் நெறி தத்துவம் எங்கே எங்கே என நாம் அலையவும் வேண்டாம் !
Natarajan
nice kavithai. Enjoyed reading it
Thanks …Sampath