வாரம் ஒரு கவிதை …” வள்ளுவம் வாழ்வது எங்கே ? “

வள்ளுவம்  வாழ்வதெங்கே ?

வள்ளுவம் வாழ்வது எங்கே…?
வள்ளுவம் வாழ்வது இங்கே அங்கே என்றில்லாமல்
எங்கும்  வாழ்கிறது வள்ளுவம் என்னும்  வாழ் நெறி  தத்துவம் !
தங்கத் தமிழில் வள்ளுவன்  தந்த இரண்டு அடி குறட்பாவில்
இல்லாத செய்தி இது என்று  இன்று வரை ஒன்று இல்லையே !
மொழி மத பேதம் மறந்து கடல் கடந்தும் பல மொழியில் ,குரலில்
ஒலிப்பது வள்ளுவன்  குறள் ஒன்று மட்டுமே !..அன்னை
தமிழுக்கு இருக்காதா பூரிப்பு ? ..இங்கு அங்கு என்றில்லாமல்
எங்கும்  நிறைந்திருக்கும் தன் பிள்ளை வள்ளுவனை நினைத்து !
நம் இதயத்தில் இறைவனை வைத்துக்கொண்டு இறைவன் எங்கே
எங்கே என்று தேடவும் வேண்டாம் !
திருக்குறள் நம் கையில் இருக்கையில்
வாழ் நெறி தத்துவம் எங்கே எங்கே என  நாம் அலையவும் வேண்டாம் !
Natarajan

2 thoughts on “வாரம் ஒரு கவிதை …” வள்ளுவம் வாழ்வது எங்கே ? “

  1. Sampathkumar K's avatar Sampathkumar K April 15, 2016 / 1:47 pm

    nice kavithai. Enjoyed reading it

Leave a comment