Music composer Shri K.V. Mahadevan’s son was missing for quite some time. His wife asked Tamil Poet Vaali whether he can can take her to Kanchi Mahaswamigal for Darshan. Vaali took them both to Thenambakkam where Periyava was camping. Smt Mahadevan fell at Paramacharya’s feet and cried, “Will I ever see my son again?”.
Periyava looked at her for less than a minute and then turned His attention to other devotees. Smt Mahadevan was disappointed that Swamigal did not tell her anything about her son. Vaali consoled her and they returned to Madras.
At the gate of their home, their son welcomed them!
Shankara.
Here is Vaali’s poem on Mahaswamigal in Tamil..
ஆயிரத்து இருநூறு
ஆண்டுகள் முன்னம்
ஆரியாம்பாள் ஈன்றனள் — ஓர்
அழகு மதலை; அவள் –
அவ்வாறு ஈன்றெடுத்தது — அவ்
ஆதிமுதலை; அதைத்தான்
ஆதிசங்கரர் ஆக்கியது — ஓர்
ஆற்று முதலை!
காலடி பிறந்தவன்
காலடி பதிந்திடாத
நாலடி — இந்த
நாட்டினில் இல்லை; திரு –
மாலடி போற்றி — அவன்
மொழிந்த பஜகோவிந்தம் போல்
நூலடியொன்று — பிற
நூலோர் ஏட்டினில் இல்லை !
‘அவன்தான் –
இவன்;
இவன்தான்
அவன்!’
எனும்படி — இங்கு
எழுந்தருளினான்….
காஞ்சி –
காமகோடி — ஸ்ரீ
சந்திர சேகரேந்திர –
சரஸ்வதி; அந்த
இமயநதிக்கு இணையான — ஒரு
சமய நதி!
துவராடை தரித்த
திருவாசகத்தை; இரு
கால்கொண்டு — ஒற்றைக்
கோல்கொண்டு — இப்
படிமிசை உலவிய — அத்வைதப்
பெருவாசகத்தை;
கயிலைநீங்கி காஞ்சிவந்த — ஞான
வெயிலை; மன்பதையின் –
அவத்தைப் போக்க
பவத்தைப் போக்க –
தவத்தைப் புரிந்த சிவத்தை;
அரிசிப் பொறி
அருந்தி –
அஞ்சு பொறி
அவித்த….
நுழைபுலம் மிக்க — ஒரு
நூற்றாண்டுக் கிழவனை; நம்
நெஞ்சை — ஒரு
நஞ்சை நிலமாக்க — விழி
நாஞ்சில் கொண்டு
நாளும் உழுத உழவனை;
அரசுமுதல் ஆண்டிவரை –
அறியும் ‘பெரியவாள்’ என்று;
அழுக்கு மனங்களில்
அப்பிக் கிடக்கும் –
அவலப் புதர்களை
அரியும் பெரிய வாள் என்று!
ஆண்டுகள் முன்னம்
ஆரியாம்பாள் ஈன்றனள் — ஓர்
அழகு மதலை; அவள் –
அவ்வாறு ஈன்றெடுத்தது — அவ்
ஆதிமுதலை; அதைத்தான்
ஆதிசங்கரர் ஆக்கியது — ஓர்
ஆற்று முதலை!
காலடி பிறந்தவன்
காலடி பதிந்திடாத
நாலடி — இந்த
நாட்டினில் இல்லை; திரு –
மாலடி போற்றி — அவன்
மொழிந்த பஜகோவிந்தம் போல்
நூலடியொன்று — பிற
நூலோர் ஏட்டினில் இல்லை !
‘அவன்தான் –
இவன்;
இவன்தான்
அவன்!’
எனும்படி — இங்கு
எழுந்தருளினான்….
காஞ்சி –
காமகோடி — ஸ்ரீ
சந்திர சேகரேந்திர –
சரஸ்வதி; அந்த
இமயநதிக்கு இணையான — ஒரு
சமய நதி!
துவராடை தரித்த
திருவாசகத்தை; இரு
கால்கொண்டு — ஒற்றைக்
கோல்கொண்டு — இப்
படிமிசை உலவிய — அத்வைதப்
பெருவாசகத்தை;
கயிலைநீங்கி காஞ்சிவந்த — ஞான
வெயிலை; மன்பதையின் –
அவத்தைப் போக்க
பவத்தைப் போக்க –
தவத்தைப் புரிந்த சிவத்தை;
அரிசிப் பொறி
அருந்தி –
அஞ்சு பொறி
அவித்த….
நுழைபுலம் மிக்க — ஒரு
நூற்றாண்டுக் கிழவனை; நம்
நெஞ்சை — ஒரு
நஞ்சை நிலமாக்க — விழி
நாஞ்சில் கொண்டு
நாளும் உழுத உழவனை;
அரசுமுதல் ஆண்டிவரை –
அறியும் ‘பெரியவாள்’ என்று;
அழுக்கு மனங்களில்
அப்பிக் கிடக்கும் –
அவலப் புதர்களை
அரியும் பெரிய வாள் என்று!
– கவிஞர் வாலி
Source…input from a friend of mine
Natarajan
