வாரம் ஒரு கவிதை …” முதல் முத்தம் ” 3

முதல் முத்தம் ..3
+++++++++++++
இதயத்தில் ஒரு பட படப்பு ..ஒரு
எதிர்பார்ப்பு !  புது மணப்பெண்ணின்
புத்தாடை நளினம்  ,சுகந்த மலர் நறுமணம் !
இதழும் என் கையில் இதமாக !
அவசரம் அவசரமாக இதழில்
தேடினேன் ! தேடியது கிடைத்ததும்
இமை மூடாமல்  கொடுத்தேன் அந்த
இதழுக்கு  ஒரு அன்பு முத்தம் ! ஆம்
முதல் முதலாக என் கவிதையை
அச்சில் பார்த்த நான் அந்த வார
இதழுக்கு மகிழ்ச்சியில் கொடுத்த முத்தமே
என் முதல் முத்தம் !
K.natarajan
15/05/2019

வாரம் ஒரு கவிதை…..முதல் முத்தம் ” 2

முதல் முத்தம் ..2
+++++++++++++
அன்னையர் தினம் என்று என் காலத்தில்
எதுவும் இல்லை! எல்லா நாளும் அன்னையர்
தினம்தான் !
அன்னையர் தினம் இன்று  எல்லோரும் சொல்லும்
போதும் அவரவர் அம்மாவுக்கு ஒரு பரிசு
கொடுக்கும் போதும் நான் தேடுகிறேன்
என் அம்மாவை ! என் அம்மா எதுவும்
என்னைக் கேட்டது இல்லை ! நானும்
அம்மாவுக்கு பரிசு என்று எதுவும்
கொடுத்தது இல்லை !
நிஜமாய் இருந்த என் அம்மா நிழலாக
புகைப்படத்தில் இன்று !  அன்னையர் தினம்
இன்று அம்மா நான் உன் நிழலுக்கு
தருகிறேன் ஒரு பரிசு ! கண்ணில் நீர் மல்க
தருகிறேன் உன் பிள்ளை நான் உனக்கு ஒரு
அன்பு முத்தம் உன் புகைப் படத்துக்கு !
இதுவே என் முதல் முத்தம் உனக்கு அம்மா !
Natarajan.K
15/05/2019

வாரம் ஒரு கவிதை ….” முதல் முத்தம் “

 

 

முதல் முத்தம்
++++++++++++++
சுட்டெரிக்கும் வெயில் … அனல் பறக்கும் காற்று
தண்ணீருக்கு தவியாய் தவிக்கும் என் நகர மக்கள் !
வாடும் பயிர் பார்த்து வானம் பார்த்தான் விவசாயி
அன்று !  வறண்டு கிடைக்கும் குடிநீர் ஏரி கண்டு
கதி கலங்கி மிரண்டு கிடக்கிறான் நகரவாசி இன்று !
மிரட்டியது போதும் ! இயற்கை அன்னையே !
கரு மேகம் திரட்டி  ஒரு கோடை மழை என் நகருக்கு
பெரு மழை யாய்  பொழிந்து விடு அம்மா !
உன் அருள் மழை என் மண்ணை முத்தமிடும்
நேரம் நானும் என் மண்ணில் மண்டியிட்டு  குனிந்து
என் மண்ணை முத்தமிடுவேன் !  என் நகர மண்ணுக்கு
நான் கொடுக்க இருக்கும்  முதல் முத்தம் அதுவே !
சீக்கிரமே உன் அருள் மழை ஒரு பெரு மழையாய் மாறி
முத்தமிடவேண்டும் என் மண்ணை மாரி தாயே !
Natarajan.K
in http://www.dinamani.com dated 15/05/2019

வாரம் ஒரு கவிதை …”யாருக்கு யார் சேவகர் ? “

 

யாருக்கு  யார்  சேவகர் ?
+++++++++++++++++++++++
அரசாங்க  வேலையோ  தனியார்  கம்பெனி
வேலையோ …கீழ் மட்ட ஊழியர் முதல்
மேல் மட்ட அதிகாரி வரை அனைவருக்கும் இருக்கு
“திறன் காணும் சோதனை ” காலம் (“Probation”)
பணியில்  சேர்ந்தவுடன் அங்கு!
திறனில் குறை இருந்தால் அரை குறையாக
முடிந்து விடும்  சேவகரின்  பணிக் காலம்!
பணியில் அமர்த்தியவருக்கும்  தெரியும்
பணியில் சேர்ந்தவருக்கும் தெரியும்
பணி நியமனம் ஒரு “பணிக்  கொடை “
அல்ல என்று !
திறன் இருந்தால் மட்டுமே பணி
தொடரும்!  இல்லையேல் மீண்டும்
வேறு  வேலை தேடும் பணி தொடரும்
அந்த ஊழியருக்கு !
ஊழியருக்கு எல்லாம் “திறன் காணும்
சோதனை ”  காலம் இருக்கு !
மக்கள் உங்களுக்காக ஊழியம் செய்கிறேன்
என்று சொல்லி ” மக்கள் சேவகர் “
நாற்காலியில் அமரும் நம் “மக்கள்
சேவகர்களுக்கு” இன்று வரை இல்லையே
ஒரு ” திறன் காணும் சோதனைக் காலம் ” ?
அது ஏன் ?
திறமை இல்லையேல் சேவகரை பதவி
நாற்காலியில் இருந்து உடனே கீழே இறக்கும்
அதிகாரம் இருக்க வேண்டாமா அவரை
வேலையில்  நியமித்த மக்களுக்கு ?
“மக்கள் சேவகருக்கு ” மட்டும் அப்படி என்ன
ஒரு விதிவிலக்கு … உத்திரவாதம் (Guarantee )அவர்
“பணிக்கு” ஐந்து ஆண்டு என்று ?
நடராஜன்
10/05/2019

வாரம் ஒரு கவிதை…..” கிடைக்குமா நல்ல செய்தி எனக்கு ” ?

 

கிடைக்குமா நல்ல செய்தி எனக்கு ?
+++++++++++++++++++++++++++++++
என் பெண்  பாஸ் பண்ணி விட்டாள் 10ஆவது !
பையனும்  பிளஸ் டூ  பாஸ் செய்து விட்டான்
நல்ல  மார்க்  வாங்கி !
நான்தான் என்ன செய்யப் போகிறேனோ
தெரியவில்லை !
எந்த தேர்விலும் நான் வெற்றி பெற்றது
இல்லையே இதுவரை !
இந்த தேர்தல் முடிவு நாளிலாவது கிடைக்குமா
ஒரு நல்ல செய்தி எனக்கு ?   தப்பிப் பிழைக்குமா
என் மானம்   என் குழந்தைகள் முன்னால் ?
( ஒரு வேட்பாளரின் புலம்பல் !)
K.Natarajan
04/05/2019

வாரம் ஒரு கவிதை …” வருவாயா நீ ” பானி ” ?

 

வருவாயா  நீ …” பானி ” ?
===========================
பேய்  மழை  வேண்டாம் எங்களுக்கு
பணி முடக்கிடும் புயல் காற்றும்
வேண்டாம்  எங்களுக்கு !   நீ
வருவாய் , ஒரு மழை தருவாய் என்று
காத்திருக்கோம் “பானி “!
நீ வருவாயா ? எங்கள் மண்ணும்
மனமும் குளிர ஒரு பெரு மழை தருவாயா நீ ?
ஆடி அசைந்து   நீ வரும் முன்னரே
 விருந்தாளி உன்னைப் பற்றி விமர்சனம்
ஒரு நூறு !  முகம் திரிந்து நோக்கக்
குழையும் விருந்தாக மாறி சினம் கொண்டு
நீ  தடம் மாறி செல்ல வேண்டாம்”பானி”
கண்ணில் நீருடன் காத்திருக்கோம்
உன் வரவுக்கு ..எங்கள் கண்ணீரைக்
காணிக்கையாக  ஏற்றுக்கொள் “பானி ” நீ !
இயற்க்கை அன்னை நீ அருள் மழை
பெரு மழை வடிவில் பொழிய வேண்டும்
இந்த மண்ணுக்கு ! எங்கள் ஆனந்தக்
கண்ணீரும்  உன் மழைப் பொழிவுடன்
சேர்ந்து நனைக்க வேண்டும் என் மண்ணை !
வருவாயா நீ “பானி” ?   கருமேக ஆடை
கட்டி  இதமான ஒரு நாட்டியம் ஆட என் மண்ணில் !
K.Natarajan
29/04/2019

வாரம் ஒரு கவிதை …” இழந்தது கிடைக்குமா எனக்கு ? “

 

இழந்தது  கிடைக்குமா  எனக்கு ?
===================================
வீடு இருந்தது… வீட்டை சுற்றி மரம் இருந்தது
மரம் நிறைய பறவைகள் கூட்டுக்குள்ளும்,
மரத்தின் கிளைகளிலும்!!! …வீட்டுக்குள்ளே
கிணறு  இருந்தது … கிணறு நிறைய தண்ணீர்!
வீட்டின் பின்னால் தோட்டம் .  தென்னம்
பிள்ளையும் வீட்டின் பிள்ளைகளோடு
பிள்ளைகளாக !
என் வீடு ,தோட்டம் இருந்த இடம்
இப்போ ஒரு பெரிய அடுக்கு மாடி
குடியிருப்பு ! என் ஒரு வீடு இருந்த
இடத்தில் இருக்கு இப்போ ஒரு நூறு வீடு !
பறவைக்கூடு போல நானும் ஒரு வீட்டுக்குள் !
தொலைத்து விட்டேன் என் பெரிய வீட்டை
கை நிறைய காசு , அடுக்கு மாடி சொகுசு
என்னும் மாய வலையில் சிக்கி !
தாத்தா நான் புலம்புகிறேன் இப்போ
தொலைத்து விட்டேனே ,தெரியாமல்
தொலைத்து விட்டேனே என்று !
என் புலம்பல் கேட்ட பேரன் கேட்டான்
தொலைந்தது என்ன என்று சொல்லுங்க
தாத்தா …நான் தேடி எடுத்துக் கொடுக்கிறேன்
உங்களுக்கு  என் கூகுள்  தேடல் வழியே !
நான் என்ன பதில் சொல்ல என் பேரனுக்கு ?
K.Natarajan
25/04/2019

வாரம் ஒரு கவிதை ….” பார்த்து நடந்து கொள் …தம்பி “

 

பார்த்து  நடந்து கொள் …தம்பி !
+++++++++++++++++++++++++++++++
காசை தண்ணீர் போல செலவு செய்றான் பாரு
இப்படி ஒரு சொல் கேட்டோம் நாம் ஒரு காலம் !
இன்று காசு கொடுத்தாலும் தண்ணீர் இல்லை !
தெரு குழாயில் தண்ணீர் பிடித்து தாகம் தணித்த
காலம் மாறி கையில் வாட்டர் பாட்டிலுடன்
சுற்றுகின்றோம்  இன்று !
தண்ணீரை காசு போல கணக்கு பார்த்து செலவு
செய்யும் காலத்தில் நாம் இன்று !
தண்ணீருக்கு வந்த நிலைமை சுவாசிக்கும்
காற்றுக்கும் வர வேண்டாம் ..தம்பி !
பார்த்து நடந்து  கொள்  தம்பி ..
.
ஒரு வாரத்துக்கு  தேவையான  ஆக்ஸிஜன்
சிலிண்டர் ஒன்று இலவசம் உங்களுக்கு சுவாசிக்க
என்று தேர்தல் நேரத்தில் கட்சிகள் எல்லாம்
அறிவிக்கும் அவலம் நேர வேண்டாம் உன்
காலத்தில் !
பார்த்து நடந்து கொள் …தம்பி நீ !
K .நடராஜன்
17/04/2019

வாரம் ஒரு கவிதை …” செய்வதை சொல்லனும் …சொன்னதை செய்யனும் “

 

செய்வதை சொல்லனும்  …சொன்னதை செய்யனும் !
===============================================
மணலை கயிறாக திரிப்பேன் …சொல்கிறார்
ஒருவர் … மணல் கொள்ளையை  நிறுத்துங்க
அய்யா …முதலில் !
நதிகளை இணைப்பேன் …இது இன்னொருவர் !
மனித மனம் இணையட்டும் முதலில் …
நதிகள் தன்னால் இணையும் பின்னர் !
இனத்தின் பெயரால் , மதத்தின் பெயரால்
நசுக்கி விடாதீர்கள் மனித நேயத்தை !
குழந்தையைக் கிள்ளி விட்டு தொட்டிலையும்
ஆட்டாதீர்கள் தேர்தல் ஆட்டத்தில் !
எங்கள் வங்கி கணக்கில் நீங்கள் போட
வேண்டாம் அய்யா பணம் !
நாங்கள் உழைத்து எங்கள் குலம் பிழைக்க,
தழைக்க ,வேலை வேண்டும்  அய்யா
எங்களுக்கு ! வழி  செய்யுங்க  அதற்க்கு!
தேர்தல் அறிக்கை என்ற பெயரில், இல்லாத
ஓரு ஊருக்கு வழி சொல்ல வேண்டாம் அய்யா !
இருக்கும் நம்ம ஊருக்கு ஒரு நல்ல வழி
காட்டுங்க அய்யா !
செய்வதை சொல்லுங்க …சொல்வதை
செய்யுங்க அய்யா ! தேர்தல் ஒரு விளையாட்டு
அல்ல …தனி நபரின் வெற்றி தோல்வி கணக்கிட !
தேர்தல் இருக்க வேண்டும் ஜனநாயகத்தின்
வெற்றிக் குரலாக ! வெற்றுக் கூச்சலால்
மட்டும்  பறிக்க முடியாது வெற்றிக் கனியை!
K.  நடராஜன்
10/04/2019

வாரம் ஒரு கவிதை ….” யாருக்கு என் வாக்கு ? “

யாருக்கு என் வாக்கு ?
=====================
யாருக்கு என் வாக்கு ?  குழப்பத்தில் நான் !
இந்த கட்சியுடன் அந்த கட்சி கூட்டணி
அந்த கட்சியுடன் இன்னொரு கட்சி கூட்டணி !
நேற்று வரை இரண்டு கட்சியும் எதிர் எதிர்
திசையில் …இன்று தேர்தல் கூட்டணி என்னும்
போர்வையில்  ஒரே அணியில் !
தாக்கு தாக்கு என்று தாக்கிக் கொண்டவர் எல்லாம்
வாக்கு வங்கியில் வேட்டையாட நிஜம் மறைத்து
ஒரே மேடையில் நின்று வாக்கு கேக்கும் அவலம் இன்று !
இது என்ன கூட்டணியா ….இல்லை குழப்ப
அணியா ?  இல்லை நம்மை எல்லாம்
குழப்பி,  குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும்
கூட்டமா ?
இந்த குழப்பம் எனக்கு மட்டுமா …இல்லை
உங்கள் எல்லோருக்குமா ?  யோசிப்போம்
பொறு”மை” யாக …நம் விரலில் வைக்கும்
“மை ” வெறும் “மை” அல்ல ! அது சொல்லும்
உண்”மை ” ! சேர்க்கும் பெரு”மை”… நம்
ஜனநாயகத் திருவிழாவுக்கு !
காத்திருக்கட்டும் குழப்பவாதிகள் விடை தெரியும்
வரை… அவர் கண் இ”மை”க்காமல் !
K. நடராஜன்
April  1  2019