தூரத்தில் கேட்குது ..
———————-
அம்மா உன் குரல் முதன் முதல் கேட்டேன் தூரத்தில்…
உன் கருவில் நான் மலர்ந்து வளர்ந்த போது !
இப்போதும் உன் குரல் நான் கேட்கிறேன்
தினமும் …தூரத்திலிருந்தே !
அயல் நாட்டு மண்ணில் நான் இன்று இருந்தாலும்
நம் நாட்டு மண் வாசம் மறக்கவில்லையே அம்மா நான் !
தூரத்திலிருந்து உன் குரல் நான் கேட்டாலும்
அம்மா..பாசமுடன் மண் வாசம் கலந்து ஒலிக்கும்
உன் குரல் நான் அன்று கருவில் கேட்ட
அதே குரலாக இன்றும் ஒலிக்கும் மாயம் என்ன அம்மா ?
தூரத்தில் கேட்குது உன் குரல் என்று என்னிடம்
இது வரை நீ சொன்னதில்லையே அம்மா !
எங்கே நீ இருந்தாலும் நீ இருக்குமிடம் என்
இதயத்தில்தான் என்று எனக்கு சொல்லாமல்
சொல்லுகிறாயா அம்மா ?
Natarajan …..in http://www.dinamani.com dated 24th July 2017
What a reality! Keep it up.
Thanks… Mr.Ramakrishnan.