நிலைக்கும் என்றே …
———————
மாற்றம் ஒன்றே நிரந்தரம் …அது ஒன்றே
நிலைக்கும் என்றென்றும் என்ற ஆன்றோர்
வாக்கு பொய்க்காதே தம்பி …
ஆன்றோர் சான்றோர் சொல் மறந்து என்றும்
நிலைக்கும் என் பதவியும் பணமும் என்று
நீ நினைக்க வேண்டாம் தம்பி !
மாற்றம் கொடுக்கும் ஏற்றம் ஒருவனுக்கு !
அதே மாற்றம் ஒருவனுக்கு ஏமாற்றம் !
இது உலக நியதி ! விதி விலக்கு ஏதும்
இல்லையே இதில் !
வாழ்வில் சுகமும் துக்கமும் என்றும் உன் வாழ்வில்
நிலைக்கும் என்றே எண்ணி விடாதே தம்பி !
“இதுவும் எதுவும் கடந்து போகும்” என்று சொல்லி
நீ நேர் வழி நடந்தால் உன் பெயர் மற்றவர்
மனதில் நிலைத்து நிற்கும் இன்றும் என்றும்
என்றென்றும் !
My Kavithai in http://www.dinamani.com dated 3rd Sep 2017
Natarajan
Reblogged this on My Blog.