|
The Gopikas lived their lives, doing everything as God’s work. They would get up early in the morning, and chant the name of Krishna even as they put curd in the pot. Then as they began churning curds, they would continuously utter the many names of Lord Krishna. Chanting Krishna’s name was like the Shruthi (musical scale), their jingling bangles became the rhythm, the sound of churning was the pitch and what they uttered became a mellifluous song. Where did the butter they churned come from? It came from the curds, though it was not visible in the beginning. Just like one can get butter out of milk, with effort you too who have come from God must merge in Him. Understand this principle well and you can experience Him anywhere and everywhere, all the time.
|
god
“அத்தை லெட்டர் போட்டிருக்காங்க …” !!!
திருமணமான புதியதில் பெண்கள்
1. கணவர் கூப்பிடாத போதே…என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள்
அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம்.
இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.
சிறிது ஆண்டுகள் கழித்து
===================
1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில்
வந்து சொல்லிட்டு போனா என்ன?
2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால்
போதும் புரியுதா??
3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை.
ஊறுகாய் போதும்ல?
4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான்
இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க
முடியுமா?
9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக்
கூப்பிடுவீங்க. நீங்க போங்க.
பல ஆண்டுகள் கழித்து
=================
1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க.
இல்லாட்டி போங்க.
4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான்
பார்த்துக்கிறேன்.
5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான்
மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ…? வாயை மூடுங்க. கொசு போய்ட
போது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என்
பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு
source::::::::::: input from a friend of mine
natarajan
” முருகனுக்கு வாகனம் மாறி விட்டதா … ” !!!
இந்தக் காட்சியைக் கண்டு எனக்குத் தோன்றியது…
உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
தன் வாகனத்தைத் தம்பிக்குத் தந்து
அண்ணன் அயர்ந்து அமர்ந்து விட்டார்!
எந்த சோதிடன் பலன் சொன்னானோ?
வாகன மாற்றம் உண்டு என்று?
ஆயிரம்தான் இருந்தாலும்,
அதிககனம் இருந்தாலும்,
இயல்புக்கு மாறாக இளவல் நிற்பினும்
முழி பிதுங்குது மூஞ்சுறு!
சோடி தேடி ஓடிப் போனதோ
இல்லை…
சோகத்தோடே பறந்து போனதோ?
தோகை மயில்!
கவலை அறுத்த உள்ளம்
கருணை பொங்கும் கண்கள்
முறுவல் பூத்த முகம்
முருகன் என்றால் அழகன்தானே!
ஒய்யாரக் கோலம்…
ஓய்வான நேரம்!
ஆண்டி என நின்றதால்
அச்சம் இல்லை.
மடியில் கனம் இல்லை
மனத்தில் பயம் இல்லை…
உணர்ந்த உண்மை இது!
மனையாள் பயம் இல்லை
மாலைக்குள் திரும்ப வேண்டாம்!
கைகட்டி சேவகம் என
எங்குமே குனிந்திருக்க வேண்டாம்!
குடும்பக் கவலையு மில்லை…
குழந்தை குட்டி பிக்கல் பிடுங்கல்
கொஞ்சமும் இல்லை என்றால்
முகத்தின் புன்னகை முழுநேரம்தானே!
உணர்ந்த உண்மை இது!
கையில் கொண்ட கோல் ஒன்று
நிமிர்ந்து நிற்கும் நிலைத்திருக்கும்!
செங்கோல் வழுவாது…
செங்கைவிட்டு நழுவாது!
(சென்னை, கே.கே.நகர் சிவன் பூங்கா அருகிலுள்ள, விநாயகர் கோவில் மண்டபத்தில் க்ளிக்கியது!)
source::::Kavithai by Sengottai Sriram in Dinamani.blogspot.com
natarajan







