“சூரியனக்கு அக்னியின் நினைவு இல்லையாம் “!!!

ஒருநாள் காலை தர்சனத்துக்கு ஒரு வயஸான தம்பதி வந்திருந்தனர். பெரியவா ஒரு வாதா மரத்தின் கீழ் அமர்ந்து தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார். தம்பதிகள் பழங்களை சமர்ப்பித்துவிட்டு நமஸ்கரித்தனர்.

“இதே மாதிரி வாதா மரம் ஒங்காத்து வாசல்ல இருந்துதே!……இன்னும் இருக்கோ?….”

“ஆமா…இன்னும் இருக்கு! பெரியவா பாத்து இருவது வர்ஷத்துக்கு மேலேயே இருக்கும்….இப்போ நன்னா பெருஸா வளந்திருக்கு; நெறைய காயக்கறது; தெருப் பசங்க கல்லை விட்டெறிஞ்சு வாதம் பழத்தை பொறுக்கித் திங்கறதுகள்..”

“கூடத்ல ஒரு பத்தாயம் இருந்துதே!….அதுல கரையான் அரிச்சு ரிப்பேர் பண்றா..ப்ல ஆயிருந்துதே!..”

“ஆமா….அத அப்போவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதுலதான் சாப்பாட்டு நெல்லைக் கொட்டி வெக்கறோம்….”

“ஒரு சே…ப்பு பசுமாடு கன்னு போடாம இருந்துதே!…..”

“அது ஆறு கன்னு போட்டுது பெரியவா…..இப்போ, சமீபத்லதான் தவறிப் போச்சு. எல்லாக் கன்னும் நன்னா இருக்கு…நல்ல வம்சம்….”

“ஐயங்கார் கணக்குப்பிள்ளை இருந்தாரே! திருநக்ஷத்ரம் எம்பதுக்கு மேலே இருக்குமோ இப்போ?….”

“சதாபிஷேகத்துக்கு ரெண்டு வர்ஷம் முன்னாடி, வைகுண்டம் போய்ட்டார் பெரியவா….”

“எட்டுக்குடி முருகனுக்கு தைப்பூசம் காவடி எடுக்கற வழக்கமாச்சே! ஒங்க புத்ராள் யாராவுது வந்து காவடி எடுக்கறாளா?…”

“பெரியவா க்ருபைல எட்டுக்குடி முருகன் கைங்கர்யம் நடந்துண்டிருக்கு..”

“வடுவூர் துரைஸ்வாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள்,பம்மல் சம்மந்த முதலியார் நாவல்கள், மதனகாமராஜன், விக்ரமாதித்தன் புஸ்தகங்கள் எல்லாம் அலமாரி நெறைய இருந்துதே! இருக்கா? யாராவுது படிக்கறாளா?….”

“எல்லாப் புஸ்தகமும் இருக்கு…ஆனா யாரும் படிக்கறதில்லே பெரியவா…..”

“ராமாயண பாராயணம் பண்ணிண்டிருந்தியே! நடக்கறதா..?”

“கண் செரியாத் தெரியறதில்லே, அதுனால ஒரு சர்க்கம் மட்டும் படிக்கிறேன்…”

கேட்டுக்கொண்டிருந்த பாட்டிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்! பாட்டி சொன்னாள்….”எத்தனையோ வர்ஷத்துக்கு முன்னாடி பெரியவா எங்க க்ராமத்துக்கு வந்தப்போ, எங்காத்துக்கு வந்து, கொஞ்ச நேரம் இருந்திருப்பேள் …..ஆனா, எப்டி இத்தனை நுணுக்கமா எல்லாத்தையும் பாத்து, இத்தனை வர்ஷத்துக்கப்புறம் கூட எதையுமே மறக்காம, அவ்வளவு ஞாபகமாக் கேக்கறேளே!…பெரியவா கேட்டதுல பாதி விஷயங்கள், அந்தாத்துல இருக்கற நேக்கே நெனைவுல இல்லே!……”

பெரியவா படாரென்று ஒரு பெரிய விஷயத்தை போட்டுடைத்தார்……..

“ஆமா……இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!…” ஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லையாம்!!

குறை என்று வரும்போது, பெரியவா மாதிரி மஹான்கள் தங்களை முன்னிறுத்தி சொல்லுவார்கள். நம்மை மாதிரி அல்பங்களோ, குறை என்றால் அடுத்தவர்களைத்தான் முன்னிறுத்திச் சொல்லுவோம்.
source::::periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4095/eswara-smaranai-prayers-new-year/#ixzz2RlqjYAfJ

தயிர் பாலாக மாறுமா?!!!….கேட்டார் மகாபெரியவர் !!!!!

வெள்ளைக்காரன் புத்திசாலி!

கல்வித்துறையில் ரொம்ப பெரிய போஸ்டில் இருந்தவர் ஒருவர் மடத்துக்கு அடிக்கடி வருவார்.

ஒருதடவை அப்படி வரும் போது தன்னுடன் இரண்டு வெள்ளைக்காரர்களை அழைத்து வந்தார். வந்தவர், வெறுமனே அவர்களுடன் வரவில்லை, கூடவே “தன்னை நாடி இங்க்லாண்டிலிருந்து மாணவர்கள் வந்திருக்கிறார்கள்!” என்ற பெருமிதம் தலைக்கேற வந்தார்.

பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்து விட்டு “இவா ரெண்டு பேரும் லண்டன்ல ரிஸர்ச் பண்ணிண்டிருக்கா…. almost எல்லா சப்ஜெக்ட்லேயும் புகுந்து வெளையாடியிருக்கா….பொதுவா இங்க்லீஷ்காராளே ரொம்ப புத்திசாலிகள்! அதுலேயும் இவா ரெண்டு பேரும் ரொம்ப intelligent! பிஹெச்.டி பண்ணியிருக்கா… இங்க்லீஷ்லதான் வர்ஷாவர்ஷம் புதுசுபுதுசா வார்த்தைகள் சேர்ந்துண்டே போறதே! புது scientific வோர்ட்ஸ் நெறைய கண்டு பிடிச்சிருக்கா. அதான், அந்த பாஷை தேங்கிப் போய் பாஸி பிடிக்காம pureஆ இருந்துண்டு இருக்கு…”

இங்க்லிஷுக்கு ஒரு ஸ்தோத்ரமே பண்ணிவிட்டார் !

யார் முன்னால் பேசினாலும் டம்பம் இல்லாமல் அடக்கமாகப் பேசவேண்டும். அதுவும் ஞானக்கடலான பெரியவா மாதிரி மஹான்கள் முன்னால், தெரிந்தாலும் பேசாமல் அடக்கமாக இருப்பதுதான் சிறப்பு.

தலைகால் தெரியாமல் அதிகம் பேசுவது நம்முடைய மடமை. ஏனென்றால் யார் முன் பேசுகிறோம்! ஒரு வழியாக அவர் மூச்சு விட சற்று நிறுத்தியதும், ஞான சாகரத்திலிருந்து ஒரு துளி வெளியே வந்து விழுந்து அங்கிருந்தோரைத் திணற அடித்தது.

“ஆமாமா….இங்க்லிஷ்காரன் ரொம்…ப புத்திசாலிதான்! நாம என்ன பண்றோம்? பாலைத் தயிரா ஆக்கறோம். அது ஸ்வபாவமா நடக்கறது. ஆனா, தயிரைப் பாலா மாத்தறதில்லே; ஏன்னா…..அது முடியாத விஷயம்.

அதுனாலதான் அக்ஞானிகளான நாம, அந்த மாதிரில்லாம் முயற்சி பண்றதில்லை. ஆனா, இங்க்லிஷ்காரன் புத்திசாலியோன்னோ…. “இதோ, தயிரைப் பாலாக்கி காட்டறேன்”..னான்! Butter Milk ன்னு ஒரு வார்த்தையை கண்டுபிடிச்சுட்டான்! பாத்தியா! எவ்ளோ..வ் சுலபமா butterஐ மில்க் ஆக்கிட்டான்!

நாம என்னவோ அதை “மோர்”ன்னு சொல்றோம்; milk ன்னு சொல்றதில்லே”…. புன்சிரிப்புடன் பெரியவா சொன்னதும் கல்வித்துறையின் முகத்தில் ஈயாடவில்லை. சுற்றி இருந்தவர்கள் இந்த விளக்கத்தை கேட்டு, அதிலிருந்த “இதுநாள் வரை காணத் தவறிய” உண்மையை உணர்ந்து புன்னகைத்தனர்.

அந்த வெள்ளைக்கார மாணவர்களோ, பெரியவா சொன்னதை மொழி பெயர்த்து கேட்ட பின்,

“Oh ! My God ! It is not a butter research; but a better research!!!!!என்று ஆச்சர்யப்பட்டு மிகவும் ரசித்தார்கள்….

source::::periva.proboards.com
Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4173/butter-milk-research/#ixzz2Rf0RcKEJ

பிணி தீர்த்த மஹா முனிவர் !!!!

Post by uma2806 on Apr 19, 2013 at 12:50pm
மூலம் : மஹாபெரியவா தரிசன அனுபவங்கள் – ஐந்தாம் பாகம்
நினைவு கூர்ந்தவர் : பி.எஸ். தேவராஜ சர்மா, பழையனூர்.

1978 ஏப்ரல் 13-ஆம் தேதி. மறுநாள் தமிழ் வருஷப் பிறப்பு. அன்றைய தினம் விடியற்காலையிலேயே பெரியவாளை தரிசித்துவிட வேண்டும் என்று உத்வேகம். முதல்நாளே தேனம்பாக்கம் சென்று, கிடைத்த இடத்தில் படுத்துக் கொண்டோம். முதலில் கண் விழிப்பவர், மற்றவர்களை எழுப்பிவிட வேண்டும் என்று ஒப்பந்தம்.

காலை மணி மூன்று முப்பது.

மின்சாரம் பாய்ந்தது போல் உடலில் ஓர் ஓட்டம்.

சட்டென்று கண்விழித்து எழுந்தோம்.

எதிரே, மஹாஸ்வாமிகள்! விபூதி, ருத்ராட்சம்.. மங்கிய விளக்கொளியில் காஷாயம் பளபளக்கிறது. யாருக்கும், பக்கத்தில் இருப்பவர் யார் என்று தெரியவில்லை; கண்ணில் படவில்லை. ஒரே ஒருவரை, அருட்புன்னகையுடன் நிற்கும் பரமேஸ்வரனை மட்டுமே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். ஹரிக்கேன் விளக்கொளி வழிகாட்ட, பெரியவாள் வெளியே வந்து நடக்கத் தொடங்கினார்கள். முந்தைய இரவு அவ்வளவு பேசிய அவர், இப்போது மௌனம். நாற்பது பேர் பின் தொடர்ந்து சென்றோம்.

வரதராஜர் கோயில் தெற்கு வாசல் வந்ததும், விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லிக்கொண்டே, நான்கு மாடவீதிகளிலும் வலம் வந்தோம். வரும் வழியில் சாலையின் நடுவில், சாக்கடை நீர் ஓடிக் கொண்டிருந்தது. “பெரியவா எப்படிக் கடந்து செல்வார்கள்?” என்று நாங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தபோதே, பெரியவாள் ஒரே தாண்டாகத் தாண்டி சென்றார்கள்! (அனுமான் அம்சமும் இருக்குமோ?)

பிறகு தேனம்பாக்கம் திரும்பினோம். காமாட்சியை தரிசித்துவிட்டு, ஊர் திரும்பினோம். அந்த ஆண்டு முழுவதும், எனக்கு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம்தான்.

1985-ஆம் ஆண்டு எனக்குக் காதில் வலி ஏற்பட்டு, எந்த வைத்தியத்துக்கும் கட்டுப்படாமல் போய், பெரிய ஆபரேஷன் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

பெரியவாளை தரிசனம் செய்யாமல், எப்படி ஆபரேஷனுக்குச் சம்மதிக்க முடியும்?

எண்கணிதத்தின்படி, என் பகை எண், ஏழு.

பெரியவாளுக்கு சமர்ப்பிக்க ஏழு ஆரஞ்சுப் பழங்களும் வில்வமாலையும் வாங்கிச் சென்றேன். பிற்பகல் இரண்டு மணி. பெரியவாள் மேனாவில் சாய்ந்து கொண்டிருந்தார்கள். பொதுப்படையாகச் சில கேள்விகளைக் கேட்டுக்கொண்டே, ஆரஞ்சுப் பழங்களை உரித்து உரித்து வைத்தார்கள். (என் தீவினைகளைத் தோலுரித்து விட்டார்கள் என்பதைப் பின்னால் புரிந்து கொண்டேன்).

ஆபரேஷனுக்கு முதல் நாள் மருத்துவமனைக்குச் சென்றேன். டாக்டர் என்னை நன்றாகப் பரிசோதித்தார்.

“உண்மையைச் சொல்லுங்கள். நான் கொடுத்த மருந்துகளைத் தவிர, வேறு எந்த மருந்துகளை உபயோகப்படுத்தினீர்கள்? வேறு எந்த டாக்டரிடம் போனீர்கள்?” என்று கேட்டார்.

“நான் வேறு எந்த டாக்டரிடமும் போகவில்லை; எந்த மருந்தும் போடவில்லை”.

“பயப்படாமல் சொல்லுங்கள். அந்த டாக்டர் கொடுத்த மருந்துகள் ரொம்ப effective-ஆக இருக்கின்றன. நான் அதைத் தெரிந்து கொண்டால், மற்றவர்களுக்கும் எழுதிக் கொடுப்பேனில்லையா?”

“டாக்டர்! உண்மையைத்தான் சொல்கிறேன். இரண்டு நாள் முன்னர் காஞ்சிபுரம் சென்று மஹாஸ்வாமிகளைத் தரிசித்து, பிரார்த்தித்துக் கொண்டேன். அவ்வளவுதான்.”

டாக்டரின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.

“உங்கள் காது நோய் குணமாகிவிட்டது. ஆபரேஷன் தேவையில்லை.”

வீட்டுக்கு வந்ததும், மனைவி – குழந்தைகளுக்கு ஏற்பட்ட ஆனந்தத்தை விளக்க வார்த்தைகளே இல்லை.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::periva.proboards.com
Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4130/vaitheeswarar#ixzz2RcforNdj

Message For The Day…Conquer Your Tongue….Victory is Yours !!!!

All the five elements have been created by the Will of the Supreme. They have to be used with reverential care and vigilant discrimination. Reckless use of any of them will only rebound on you with tremendous harm. External nature has to be handled with caution and awe. So too, handle your inner ‘nature,’ your internal instruments! While the eye, the ear and the nose serve as instruments of knowledge about one particular characteristic (form, sound or smell) of Nature, the tongue makes itself available for two purposes: to judge taste and to communicate. So you must control the tongue with double care, since it can harm you physically and mentally. Without the control of the senses, spiritual practices (sadhana) are ineffective. If the senses are given full sway, it is like storing water in leaky pot. Pathanjali (the celebrated author of the Yogasuthras) said that if tongue is conquered, victory is yours.

 Sathya Sai Baba

பிஞ்சு குழந்தைக்கு கிடைத்த பழுத்த சால்வை !!!!

வேத பாடசாலை குழந்தைகள் சிலரை தம்முடன் யாத்திரை அழைத்து சென்றபோது, நல்ல குளிர் காலம், மலை பிரதேசம் வேறு. ’emergency ‘ கொட்டகையில் இரவு கடுங்குளிராக இருக்கும் என்று எண்ணினார்.

பழுத்த கனபாடிகளுக்கே வழங்கப்படும் சால்வைகளை, அந்த பிஞ்சு வித்யார்த்திகளுக்கே வழங்க செய்தார். அதுகளுக்கு கொள்ளை சந்தோஷம். பாதாள கங்கை சென்றார்.

திடீரென்று அங்கே ஒரு பழுத்த கனபாடிகளே வந்துவிட்டார். தரிசனம் முடிந்தவுடன் புறப்பட வேண்டிய அவசரத்தில் இருந்தார். பெரியவா அவரை சம்மானிக்க சால்வை கொண்டுவர சொன்னார்.

மானேஜருக்கோ அந்த குறுகிய நேரத்திற்குள் முகாமுக்கு சால்வை எதுவும் கொண்டு வரவில்லை. சட்டென்று அன்று பாடசாலை பசங்களுக்கு புது சால்வை கொடுத்தது நினைவு வந்தது. எனவே, பெரியவாளிடம் எதுவும் பிரஸ்தாபிக்காமல், காதும் காதும் வைத்தாற்போல் ஒரு பையனிடமிருந்து சால்வையை திரும்ப பெற்றுவந்து, கனபாடிகளுக்கு கொடுத்துவிட்டார்.

இரவு ஏமாற்றத்துடனேயே கையை காலை முடக்கி கொண்டு, அந்த பையன் தூங்கிபோனான். காலையில் எழுந்திருக்கும்போது,அதி சொகுசும், கதகதப்பும் தன்னை ஆற அணைதிருப்பதால் அதிசயித்தான். அவன் இழந்ததைவிட உயர் ரகமான சால்வை அவன் மீது போர்த்தபட்டிருந்ததே அந்த சுகத்துக்கு காரணம்.

“போர்வை வந்துதாடா?” மனேஜரின் குசலப்ரச்னம் அவனுக்கு உண்மையை புரியவைத்தது.

கூர்ந்த திருஷ்டி கொண்ட பெரியவா, கனபாடிகளுக்கு கொடுத்த சால்வை, பாடசாலை சிறுவனுடையது என்று கண்டுபிடித்து விட்டார். அதற்குபின் மாலை அனுஷ்டானம், இரவு பூஜை, எல்லாம் முடிந்ததும், மனேஜரை கூப்பிட்டு விசாரித்தார்.

அவர் செய்தது தனக்கு திருப்தி இல்லை என்றும், தன் சகாக்களுக்கு கிடைத்தது தனக்கு தங்கவில்லையே என்று எப்படி அந்த குழந்தை வருந்தும் என்று விளக்கினார். விட்டால், எங்கே தன்னுடைய சால்வையையே கொடுத்துவிடுவாரோ என்று மனேஜருக்கு கவலை வந்துவிட்டது.

எனவே தாம் முந்திக்கொண்டு “எனக்கு போர்த்திகொள்ள நல்ல கம்பிளி போர்வை இருக்கு. அதையே பையனுக்கு கொடுத்துடறேன்” என்றார்.

“தூங்கிண்டு இருந்தா எழுப்பாதே! நைஸா மேலே போத்திட்டு நீயும் போய் விஸ்ராந்தி பண்ணிக்கோ”

“நைஸ்” இதயத்தால், அதி நைஸ் போர்வை பாலனுக்கு கிடைத்து.

SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM

source::::periva.proboards.com
Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4122#ixzz2RMoinIro