” பிள்ளையார் எல்லோருக்கும் சொந்தம் ” ….

பிள்ளையார் ஏழை எளிய‌வ‌ர்க‌ளுக்கெல்லாம் ஸ்வாமி. ம‌ஞ்ச‌ள் பொடியிலும், க‌ளிம‌ண்ணிலும், சாணியிலும் கூட‌ எவ‌ரும் ஒரு பிள்ளையாரைப் பிடித்து பூஜை செய்துவிட‌லாம். அவ‌ர் எளிதில் ஸந்தோஷ‌ப்ப‌டுகிற‌வ‌ர். எங்கே, எப்ப‌டி, எதில் கூப்பிட்டாலும் உட‌னே வ‌ந்து அந்த‌க் க‌ல்லோ, க‌ளிம‌ண்ணோ அத‌ற்குள்ளிருந்துகொண்டு அருள் செய்வார். அவ‌ரை வ‌ழிப‌ட‌ நிறைய‌ சாஸ்திர‌ம் படிக்க‌வேண்டும் என்ப‌தில்லை. ஒன்றும் ப‌டிக்காத‌வ‌னுக்கும், அவ‌ன் கூப்பிட்ட‌ குர‌லுக்கு வ‌ந்துவிடுவார்.

‘ம‌ற்ற‌ தேவ‌தா விக்கிர‌ஹ‌ங்க‌ளில் ஸாங்கோபாங்க‌மாக‌ப் பிராண‌ப் பிரதிஷ்டை என்று ப‌ண்ணி, அவ‌ற்றில் அந்த‌ந்த‌ தேவ‌தைக‌ளின் ஜீவ‌ க‌லையை உண்டாக்குவ‌து போல் பிள்ளையாருக்குப் ப‌ண்ண‌ வேண்டுமென்ப‌தில்லை. பாவித்த மாத்திர‌த்தில் எந்த‌ மூர்த்தியிலும் அவ‌ர் வ‌ந்துவிடுகிறார்’. என்று சொல்வ‌துண்டு.

ம‌ற்ற‌ ஸ்வாமிக‌ளைத் த‌ரிச‌ன‌ம் செய்வ‌து என்றால், நாம் அத‌ற்காக‌ ஒரு கால‌ம் பார்த்து, குளித்து முழுகி, அர்ச்ச‌னை சாம‌ன்க‌ள் வாங்கிக் கொண்டு கோயிலுக்குப் போக‌ வேண்டியிருக்கிற‌து. கோயிலுக்குப் போனாலும் நேரே அந்த‌ ஸ்வாமியிட‌ம் போய்விட‌ முடியாது. பிராகார‌ம் சுற்றிக்கொண்டு உள்ளே போக‌வேண்டும். அப்போதும் கூட‌ ஸ்வாமிக்கு ரொம்ப‌ப் ப‌க்க‌த்தில் போக‌க் கூடாது. கொஞ்ச‌ம் த‌ள்ளித்தான் நிற்க‌ வேண்டும். பிள்ளையார் இப்ப‌டி இல்லை. எந்த‌ ச‌ம‌ய‌மானாலும் ச‌ரி, நாம் ஆபீஸுக்கோ, ஸ்கூலுக்கோ, க‌டைக்கோ போய் வ‌ருகிற‌போதுகூட‌, தெருவிலே த‌ற்செயலாக‌த் த‌லையைத் தூக்கினால், அங்கே ஒரு முக்கில் பிள்ளையார் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்! அவ‌ரைப் பார்த்த‌மாத்திர‌த்தில் நாமாக‌ நெற்றியில் குட்டிக் கொண்டு ஒரு தோப்புக்க‌ர‌ண‌ம் போட்டுவிட்டு ந‌டையைக் க‌ட்டுகிறோம். இதிலேயே ந‌ம‌க்குச் சொல்ல‌த் தெரியாத‌ ஒரு நிம்ம‌தி, ஸ‌ந்தோஷ‌ம் உண்டாகிற‌து.

அவ‌ருக்குக் கோயில் என்று இருப்ப‌தே ஒரு அறைதான். அத‌னால் ஒரு பேத‌மும் இல்லாம‌ல் யாரும் கிட்டே போய்த் த‌ரிசிக்க‌ முடிகிற‌து. எல்லோருக்கும் அவ‌ர் ஸ்வாதீன‌ம்! பிராகார‌ங்க‌ள் எல்லாம் தாண்டி உள்ளுக்குள்ளே உட்கார்ந்திருக்கிற‌ ஸ்வாமிக‌ளைவிட‌, இப்ப‌டி எங்கே பார்த்தாலும் ந‌ட்ட ந‌டுவில் உட்கார்ந்திருக்கிற‌ பிள்ளையார்தான் த‌ப்பாம‌ல் ஜ‌ன‌ங்க‌ளை இழுத்து தோப்புக் க‌ர‌ண‌ம் வாங்கிக் கொண்டுவிடுகிறார்!

பிள்ளையார் வ‌ழிபாட்டுக்கென்றே சில‌ அம்ச‌ங்க‌ள் இருக்கின்ற‌ன. சித‌று தேங்காய் போடுவ‌து, நெற்றியில் குட்டிக்கொள்வ‌து, தோப்புக் க‌ர‌ண‌ம் போடுவ‌து ஆகிய‌வை பிள்ளையார் ஒருவ‌ருக்கே உரிய‌வை.

பிள்ளையார் ச‌ந்நிதியில், இர‌ண்டு கைக‌ளையும் ம‌றித்து நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள‌வேண்டும். இப்ப‌டியே இர‌ண்டு கைகளையும் ம‌றித்துக் காதுக‌ளைப் பிடித்துக்கொண்டு, முட்டிக்கால் த‌ரையில் ப‌டுகிற‌ மாதிரி தோப்புக்க‌ர‌ண‌ம் போட‌வேண்டும். இவை எத‌ற்கு என்றால்:

யோக‌ சாஸ்திர‌ம் என்று ஒன்று இருக்கிற‌து. அதிலே ந‌ம் நாடிகளில் ஏற்ப‌டுகிற‌ ச‌ல‌ன‌ங்களால் எப்ப‌டி ம‌ன‌ஸையும் ந‌ல்ல‌தாக‌ மாற்றிக்கொள்ள‌லாம் என்று வ‌ழி சொல்லியிருக்கிற‌து. ந‌ம் உட‌ம்பைப் ப‌ல‌ தினுசாக‌ வ‌ளைத்துச் செய்கிற‌ அப்பியாஸ‌ங்க‌ளால், சுவாஸ‌த்தின் கதியில் உண்டாக்கிக்கொள்கிற‌ மாறுத‌ல்க‌ளால் ந‌ம் உள்ள‌ம் உய‌ர்வ‌த‌ற்கான‌ வ‌ழி அந்த‌ சாஸ்திர‌த்தில் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கிற‌து. நெற்றிப்பொட்டில் குட்டிக் கொள்வ‌து, தோப்புக்க‌ர‌ண‌ம் போடுவ‌து இவ‌ற்றால் ந‌ம் நாடிக‌ளின் ச‌ல‌ன‌ம் மாறும்; ம‌ன‌ஸில் தெய்விக‌மான‌ மாறுத‌ல்க‌ள் உண்டாகும். ந‌ம்பிக்கையோடு செய்தால் ப‌ல‌ன் தெரியும்.

குழ‌ந்தைக‌ளுக்காக‌ நீதி நூல்களைச் செய்த‌ அவ்வையார் பெரிய‌வ‌ர்க‌ளுக்குக்கூட‌ எளிதில் புரியாத‌ பெரிய‌ யோக‌ த‌த்துவ‌ங்க‌ளை வைத்துப் பிள்ள‌யார் மேலேயே ஒரு ஸ்தோத்திர‌ம் செய்திருக்கிறாள். அத‌ற்கு “விநாய‌க‌ர் அக‌வ‌ல்” என்று பெய‌ர். அள‌வில் சின்ன‌துதான் அந்த‌ அக‌வ‌ல் ஸ்தோத்திர‌ம்.

பிள்ளையாரை நினைக்கிற‌போது அவ்வையாரையும் நாம் சேர்த்து நினைத்தால் இர‌ட்டிப்பு அநுக்கிர‌ஹ‌ம் கிடைக்கும். ‘விநாய‌க‌ர் அக‌வ‌லை’ச் சொன்னால் இர‌ண்டு பேரையும் ஒரே ச‌ம‌யத்தில் நினைத்த‌தாகும். எல்லோரும் இதைச் செய்ய‌வேண்டும். வெள்ளிக்கிழ‌மைதோறும் ப‌க்க‌த்திலுள்ள‌ பிள்ளையார் கோயிலுக்குப் போய் “விநாய‌க‌ர் அக‌வ‌ல்” சொல்லி விக்நேச்வ‌ர‌னுக்கு அர்ப்ப‌ண‌ம் ப‌ண்ண‌வேண்டும்.

பிள்ளையாருக்கு எல்லோரும் சொந்த‌ம்; பிள்ளையார் எல்லோருக்கும் சொந்த‌ம். ஏழை எளிய‌வ‌ருக்கும், சாஸ்திர‌ம் ப‌டிக்காத‌ சாமானிய‌ ஜ‌ன‌ங்க‌ளுக்கும்கூட‌ச் சொந்த‌ம். ம‌ற்ற‌ ஸ்வாமிக‌ளின் நைவேத்திய‌ விநியோக‌த்தில் பெரிய‌ ம‌நுஷ்ய‌ர்க‌ளுக்குத்தான் முத‌லிட‌ம். பிள்ளையாரோ த‌ம‌க்குப் போடுகிற‌ சித‌றுகாய் இவ‌ர்க‌ளுக்குப் போகாம‌ல் ஏழைக் குழ‌ந்தைக‌ளுக்கே போகும்ப‌டியாக‌ வைத்துக் கொண்டிருக்கிறார்! எல்லோரும் “அக‌வ‌ல்” சொல்லி அவ‌ரை வ‌ழிப‌ட‌ வேண்டும். பெண்க‌ளுக்கும், குழ‌ந்தைக‌ளுக்கும் இதில் அதிக‌ உரிமை உண்டு. அவ்வை பெண்ணாக‌ப் பிற‌ந்த‌தால், பெண்க‌ள் எல்லோருக்கும் அவ‌ளுடைய‌ இந்த‌ ஸ்தோத்திர‌த்தில் பாத்திய‌தை ஜாஸ்தி. அவ‌ள் குழ‌ந்தைக‌ளுக்கு உப‌தேசித்த‌ பாட்டி. விநாய‌க‌ரும் குழ‌ந்தைத் தெய்வ‌ம். அத‌னால் அவ‌ளுடைய‌ அக‌வ‌லைக் குழ‌ந்தைக‌ள் யாவ‌ரும் அவர்முன் பாடி ஸ‌ம‌ர்ப்பிக்க‌வேண்டும். கொஞ்ச‌ம் ‘க‌ட‌முட‌’ என்றிருக்கிற‌தே, அர்த்த‌ம் புரிய‌வில்லையே என்று பார்க்க‌ வேண்டாம். அர்த்த‌ம் புரிந்தாலும், புரியாவிட்டாலும் ‘அவ்வையின் வாக்குக்கே ந‌ன்மை செய்கிற‌ ச‌க்தி உண்டு’ என்று ந‌ம்பி அக‌வ‌லைப் பொட்டை நெட்டுருப் போட்டுச் சொன்னாலும் போதும்; அத‌னால் நாமும் க்ஷேம‌ம் அடைவோம். நாடும் க்ஷேம‌ம் அடையும்.

 

பிள்ளையார் எல்லாருக்கும் ந‌ல்ல‌வ‌ர்; எல்லாருக்கும் வேண்டிய‌வ‌ர்; சொந்த‌ம். சிவ‌ ச‌ம்ப‌ந்த‌மான‌ லிங்க‌ம், அம்பாள், முருக‌ன் முத‌லிய‌ விக்கிர‌ஹ‌ங்க‌ளைப் பெருமாள் கோயிலில் பார்க்க‌ முடியாது. ஆனால், பிள்ளையாரும் சிவ‌ குடும்ப‌த்தைதான் சேர்ந்த‌வ‌ர் என்றாலும், விஷ்ணு ஆல‌ய‌ங்க‌ளில்கூட‌ப் பிள்ளையார் ம‌ட்டும் இருப்பார். ‘தும்பிக்கை ஆழ்வார்’ என்று அவ‌ருக்குப் பெய‌ர் சொல்லுவார்க‌ள். ம‌தச்ச‌ண்டைக‌ளுக்கெல்லாம் அப்பாற்ப‌ட்ட‌வ‌ர் அவ‌ர்.

அத‌னால்தான் புத்த‌ம‌த‌ம், ஜைன‌ம‌த‌ம் எல்லாவ‌ற்றிலும்கூட‌ அவ‌ரை வ‌ழிப‌டுகிறார்க‌ள். த‌மிழ் நாட்டிலிருப்ப‌துபோல் ம‌ற்ற‌ ராஜ்ய‌ங்க‌ளில் த‌டுக்கி விழுந்த‌ இட‌மெல்ல‌ம் விநாய‌க‌ர் இல்லாவிட்டாலுங்கூட‌, பார‌த‌ தேச‌த்திலுள்ள‌ அத்த‌னை ஸ்த‌ல‌ங்க‌ளிலும் ஓரிடத்திலாவ‌து அவ‌ர் இருப்பார். “க‌ன்னியாகும‌ரியிலும் பிள்ளையார்; ஹிம‌ய‌த்தின் கோடியில் கேதாரத்திலும் ஒரு பிள்ளையார்” என்று ஒரு க‌ண‌ப‌தி ப‌க்த‌ர் என்னிட‌ம் பெருமைப்ப‌ட்டுக் கொண்டார்.

ந‌ம் தேச‌த்தில் ம‌ட்டும்தான் என்றில்லை. ஜ‌ப்பானிலிருந்து மெக்ஸிகோ வ‌ரை உல‌கத்தின் எல்ல‌த் தேச‌ங்க‌ளிலும் விநாய‌க‌ர் விக்கிர‌ஹ‌ம் அக‌ப்ப‌டுகிற‌து! லோக‌ம் பூராவும் உள்ள‌ ஸ‌க‌ல‌ நாடுகளிலும் அவ‌ரைப் ப‌ல‌ தினுசான‌ மூர்த்திக‌ளில் வ‌ழிப‌டுகிறார்க‌ள்.

அப்ப‌டி லோக‌ம் முழுவ‌த‌ற்கும் சொந்த‌மாக‌ இருக்க‌ப்ப‌ட்ட‌வ‌ரை நாம் எல்லோரும் த‌வ‌றாம‌ல் ஆராதிக்க‌ வேண்டும். வ‌ச‌தி இருப்ப்ப‌வ‌ர்க‌ள் அவ‌ருக்கு மோத‌க‌மும், ம‌ற்ற‌ ப‌க்ஷ‌ண‌மும், ப‌ழ‌ங்க‌ளும் நிறைய‌ நிவேத‌ன‌ம் செய்து, குழ‌ந்தைக‌ளுக்கு விநியோக‌ம் ப‌ண்ண‌வேண்டும். அவ‌ர் குழ‌ந்தையாக‌ வ‌ந்த‌ ஸ்வாமி. குழ்ந்தை என்றால் அது கொழுகொழு என்று இருக்க‌வேண்டும். அத‌ற்கு நிறைய‌ ஆகார‌ம் கொடுக்க‌ வேண்டும். பிள்ளையாரின் தொப்பை வாடாம‌ல் அவ‌ருக்கு நிறைய‌ நிவேத‌ன‌ம் செய்ய‌வேண்டும். வெள்ளிக்கிழ‌மைதோறும் அவ‌ருக்கு சித‌றுகாய் போட்டுக் குழ‌ந்தைக‌ளை ஸ‌ந்தோஷ‌ப்ப‌டுத்த‌ வேண்டும். பெரிய‌வ‌ர்க‌ள் இவ்வாறு ம‌ற்ற‌க் குழ‌ந்தைக‌ளை ம‌கிழ்வித்தால், ஈச‌ன் குழ‌ந்தையான‌ பிள்ளையாரும் ம‌கிழ்ந்து, பெரிய‌வ‌ர்களையும் குழ‌ந்தைக‌ளாக்கித் த‌ம்மோடு விளையாட‌ச் செய்வார்.

பெரிய‌வ‌ர்க‌ளானால் துக்கமும், தொல்லையும் தான். குழ‌ந்தை ஸ்வாமியோடு சேர்ந்து இந்த‌த் துக்க‌த்தை தொலைத்து அவ‌ரைப்போல் ஆன‌ந்த‌மாகிவிட‌ வேண்டும். அவ‌ர் எப்போதும் சிரித்த‌ முக‌முள்ள‌வ‌ர். ‘ஸுமுக‌ர்’, ‘பிர‌ஸ‌ன்ன‌ வ‌தன‌ர்’ என்று பெய‌ர் பெற்று எப்போதும் பேரான‌ந்த‌த்தைப் பொங்க‌ விடுப‌வ‌ர். நாம் உண்மையாக‌ ப‌க்தி செய்தால் ந‌ம்மையும் அப்ப‌டி ஆக்குவார்.

த‌மிழ் நாட்டின் பாக்கிய‌மாக‌த் திரும்பிய‌ இட‌மெல்லாம் அம‌ர்ந்திருக்கும் அவ‌ரை நாம் எந்நாளும் ம‌ற‌க்க‌க் கூடாது. நாம் எல்லோரும் த‌வ‌றாம‌ல் பிள்ளையார் கோயிலுக்குப் போவ‌து, தேங்காய் உடைப்ப‌து, ‘விநாய‌க‌ர் அக‌வ‌ல்’ சொல்வ‌து என்று வைத்துக்கொண்டால் இப்போதிருக்கிற‌ இத்த‌னை ஆயிர‌ம் கோயிலுங்கூட‌ப் போதாது; புதிதாக‌க் க‌ட்ட‌ வேண்டியிருக்கும்.

 

ந‌ம‌க்கும், நாட்டுக்கும், உல‌குக்கும் எல்லா க்ஷேம‌ங்க‌ளும் உண்டாவ‌த‌ற்கு அவ்வையார் மூல‌ம் பிள்ளையாரைப் பிடிப்ப‌தே வ‌ழி.

 

Source…..N.Ramesh Natarajan and Tirupur S.Ramanathan

Natarajan

13/09/2018

மற(றை)க்கப்பட்ட உண்மைகள்! – வீட்டில் விளக்கேற்றுங்கள்!….

‘விளக்கு ஏற்றிய வீடு வீணாய் போகாது’ என்று ஒரு பழமொழி உள்ளது.
வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?


தீபத்தின் சுடருக்கு, தன்னை சுற்றி உள்ள தேவையற்ற எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் சக்தி உண்டு.
அவ்வாறு ஈர்க்கும்போது, தானாகவே, ‘பாசிடிவ் எனர்ஜி’ அதிகரிக்கும்.
நம் சுற்றுப்புறம் தெளிவாகவும், பலத்தோடும் காணப்படும். இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால், வீடே மயானம் போல் தோன்றும். எல்லாருமே சோர்வாக இருப்பர்.
நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் துாய்மையடைகிறது. அதேபோல், மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய் விளக்கு ஏற்ற, துாய்மை அடைந்து, நற்பலன்களை அடைகிறது.
நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரிய நாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாக கருதப்படுகிறது.
* சூரிய நாடி, நல்ல சக்தியையும், வெப்பத்தையும் தருகிறது. சந்திர நாடி குளுமையை தருகிறது
* சுஷம்னா நாடி அந்த பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு ஆன்மிக பாதையை வகுக்கிறது
* நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற, சூரிய நாடி சுறுசுறுப்படைகிறது
* நெய் விளக்கு, சுஷம்னா நாடியை துாண்டிவிட உதவுகிறது
* பொதுவாக நெய் தீபம், சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலன்களையும் தருகிறது.
திருவிளக்கை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம்; இதற்கு தடையேதும் இல்லை.
ஆனால், பொதுவாக மாலை, 6:30 மணிக்கு ஏற்றுவதே நம் மரபு.
சூரியன் மறைந்ததும், சில விஷ சக்திகள் சுற்றுச்சூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்ப்பிருக்கிறது.
ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டு போகும். எனவே, அந்நேரத்தில் விளக்கேற்ற வேண்டும் என்கின்றனர்.
ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு இது: அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருந்த ஒரு தாய், மாலையில், மகனும் – மருமகளும் தாமதமாக வீட்டுக்கு வருவதை பார்த்தார். இருவரும் வேலைக்கு செல்பவர்கள்.
ஒருநாள் மகன் முன்னதாகவும், ஒருநாள் மருமகள் முன்னதாகவும் வருவர்.
மகனை அழைத்து, தாமதமாக வரும் காரணம் கேட்க, ‘உனக்கு இதெல்லாம் புரியாதும்மா…
‘எங்கள் இருவருக்கும் பயங்கர, ‘ஸ்ட்ரெஸ்…’ இருவரும், ‘கவுன்சிலிங்’ போய் வருகிறோம்… ஒரு மணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம். மிக சிறந்த டாக்டர், அவரது சிகிச்சையில் எல்லாம் சரியாகிவிடும்…’ என்று கூறினான்.
அதற்கு அந்த தாய், ‘நாளை அந்த டாக்டரை பார்க்க போக வேண்டாம்; சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும்…’ என்று கூறினார்.
அடுத்த நாள் மாலை, வீட்டுக்குள் நுழைந்த மகன் – மருமகள் மூக்கை சுகந்த மணம் துளைத்தது.
இருவரையும் கை கால் கழுவி, உடை மாற்றி, பூஜை அறைக்கு வருமாறு கூறினார், தாய்.
அவர்களும் அவ்வாறே செய்தனர். மணம் வீசும் மலர்களின் வாசம்… அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்றுநேரம் அமர்ந்து, இருவரும் தாமாகவே கண் மூடி அந்த சூழலின் இன்பத்தை அனுபவித்தனர். பின், கண் திறந்தபோது, ‘கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாக சொல்ல…’ தாயார் மகிழ்ந்தார்.
இன்னொரு விஷயம்…
வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால், அவர்களை தினமும் விளக்கேற்றும்படி சொல்ல வேண்டும்.
இப்படி செய்தால், அவர்களின் முகப்பொலிவு பன்மடங்கு கூடும். விளக்கேற்றிய வீடு, வீண் போகாது.

 பி.எஸ்.புஷ்பலதா in http://www.dinamalar.com

natarajan

Ethiopia’s Churches In The Sky…

The ancient Kingdom of Axum, now a part of Ethiopia, was one of the first nations in the world to adopt Christianity. The religion took strong foothold in 330 AD when King Ezana the Great declared it the state religion and ordered the construction of the imposing basilica of St. Mary of Tsion. Legend has it, that it here that Menelik, son of King Solomon and the Queen of Sheba, brought the Ark of the Covenant containing the Ten Commandments.

By the fifth century, nine saints from Syria, Constantinople and elsewhere had begun spreading the faith far beyond the caravan routes and deep into the mountainous countryside. These missionaries played a key role in the initial growth of Christianity in Ethiopia. The monks translated the Bible and other religious texts from Greek into Ethiopic allowing the locals who couldn’t read Greek to learn about Christianity. The religion’s mystical aspects found a curious draw among the young. As Christianity grew, a series of spectacular churches and monasteries were built high atop mountains or excavated out of solid rock, many of which are still in use today.                                                

 

 

 

 

 

 

 

 

 

A priest is seen looking out of Abuna Yemata church’s only window. The church is located on aside of a cliff, 650 feet up from the floor of the valley. This image is from a recently published book “Ethiopia: The Living Churches of an Ancient Kingdom.”

These ancient churches were often built in the most impossible of places. A good example is the Abuna Yemata Guh in Tigray, in Northern Ethiopia. This 5th century church is perched 650 feet up in the sky, on the face of a vertical spire of rock. To reach it, one has to climb without any climbing ropes or harnesses, inching along narrow ledges and crossing a rickety makeshift bridge. The final leg of the journey involves scaling a sheer 19 feet-high wall of rock. The church was founded by Abuna Yemata, one of the nine saints, who chose the secluded spot as his hermitage.

Photo credit: Andrea Moroni/Flickr

Source….Kaushik in http://www.amusing planet.com

Natarajan

 

 

 

 

 

God on the Runway ….

As part of the custom, the idols along with temple elephants are taken to Shangumugam beach for the ritualistic bath.

For two days in a year, the Thiruvananthapuram International Airport halts its flight operations for five hours on the basis of a ‘Notice to Airmen’ (NOTAM).

Respecting a centuries old temple tradition, the airport runway makes way for a grand procession.

Saturday is one of the two days in a year that sees members of the Travancore royal family, temple priests, police, and even elephants walk down the runway, as part of the temple procession. Hundreds of people also escorted the idols past the 3400-metre runway.

Flights have been halted between 4pm and 9pm at Thiruvananthapuram on Saturday.

 

The ‘Arat’ procession marks the conclusion of the Painkuni festival and the Alpassi festival. Painkuni and Alpassi are references to Tamil months. While Painkuni is in April, Alpassi is in October.

Arat is the ritualistic bath procession of temple idols at Sree Padmanabha Swami temple in Thiruvananthapuram. The procession, which began at 5pm, crossed the runway at 6.30 pm.

As part of the custom, the idols along with temple elephants are taken to Shangumugam beach for the ritualistic bath. The procession sees royal family members wearing traditional attire and carrying swords. All priests along with royal family members take a dip into the sea three times. The idols are also given a ritualistic bath.

The procession returns to the temple on the same route, accompanied by people carrying traditional fire lamps.

They have to, however, ensure that they clear the runway by 8.45pm.

“The ritual was started centuries ago when the Travancore royal family ruled here. Even after the airport was established, the procession continued to pass through the runway. When the airport was established in 1932, it was under the Royal Flying Club. Since then, the runway was open for these processions. Even after it was converted into an international airport in 1991, the practice continued as the tradition is very important to this place,” an airport official told TNM.

Since the runway is part of traditional arat procession route, the Airport Authority of India issues passes to those who participate in it. Only those who have a pass can enter the route and cross the runway to head to the beach.

“There are strict restrictions inside the airport area. CISF officials guarding the area allow only people with passes. We issue the pass only to people in the list given by temple authorities,” he added.

NOTAM is issued a week before these two dates in the year, so that all the international flights can change their schedule. NOTAM is a notice issued to pilots or airline operators before flights, alerting them of the circumstances or changes in aeronautical facilities or about local procedures that affect safety.

 

 

 

 

 

 

 

 

Source….Haritha John in http://www.the newsminute.com

Natarajan

 

 

“மிகவும் தொன்மை வாய்ந்த வாய்ஸ் ரெக்கார்டர் எது தெரியுமா …? “

 

விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது…

1950-களில் ஒருநாள் ஒரு வானொலி நிருபர் ஸ்ரீமஹாபெரியவாளை பேட்டிகண்டு அதனை டேப்ரிகார்டரில் பதிவு செய்துகொண்டிருந்தார்.

திடீரென்று பெரியவா அவரிடமும்,அங்கு இருந்தவர்களிடமும்,”மிகவும் பழைய காலத்து வாய்ஸ் ரிகார்டர் எதுவென்று யாருக்காவது தெரியுமா” என்று கேட்டார்.

யாரும் பதில் சொல்லவில்லை.

பெரியவா மற்றொரு கேள்வியைக் கேட்டார், ”விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?”

யாரோ ஒருவர்,”விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பீஷ்மர் நமக்குத் தந்தார்” என்றார்.

அனைவரும் “ஆம்” என்று ஒப்புக்கொண்டனர்.

பெரியவா சிரித்துக்கொண்டே தலையசைத்து விட்டு, மற்றொரு கேள்வியை வீசினார்,

”குருக்ஷேத்திரத்தில் அனைவரும் பீஷ்மர் சொன்ன விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பக்தியோடு கேட்டுக் கொண்டிருந்தபோது, அதனை குறிப்பெடுத்ததோ, எழுதிக்கொண்டதோ யார்?” மீண்டும் அமைதி.

ஸ்ரீசரணர் புன்னகையுடன் சொல்ல ஆரம்பி த்தார்

“பீஷ்மர், ஸ்ரீகிருஷணரின் புகழையும், பெருமைகளையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தால் விளக்கிக் கொண்டிருந்தபோது, ஸ்ரீகிருஷணரும், வியாசரும் உட்பட அனைவரும் வேறு எந்த நினைப்புமின்றி அவரையே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர்.

பிதாமகர் பீஷ்மர் ஆயிரம் நாமங்களையும் சொல்லி முடித்தபின்பு அனைவரும் விழிப்படைந்தனர்.

முதலில் யுதிஷ்ட்டிரர் பேசினார்,

”பிதாமகர், ஸ்ரீவாசுதேவரின் ஒப்பற்ற பெருமை வாய்ந்த ஆயிரம் புனித நாமாக்களை சொன்னார். அவற்றைக் கேட்பதில் கவனமாக இருந்த நாம் அனைவரும் அவற்றை குறிப்பெடுக்கவோ, எழுதிக்கொள்ளவோ தவறிவிட்டோம்.

நாம் அற்புதமான விஷயத்தை இழந்து நிற்கின்றோம்” என்றார்.

அப்போதுதான் அனைவரும் எப்படிப்பட்ட தவறு நேர்ந்துவிட்டதென்று உணர்ந்து திகைத்தனர்.

பிறகு யுதிஷ்டிரர் ஸ்ரீகிருஷணரிடம் திரும்பி,”ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர தாங்களாவது உதவக்கூடாதா” என்று கேட்டார்.

ஸ்ரீகிருஷ்ணர் வழக்கம்போல், “என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்? உங்கள் எல்லோரையும் போல நானும் ஆச்சார்யர் பீஷ்மரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன் என்றார்.

அனைவரும் சேர்ந்து ஸ்ரீகிருஷ்ணரிடம், “ஹே.. வாசுதேவா, நீ ஆனைத்தும் அறிந்தவர். உம்மால் இயலாததென்பது எதுவுமே இல்லை. தாங்கள் தயைகூர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும்.

அந்த ஒப்புயர்வற்ற பெருமைவாய்ந்த பரந்தாமனின் ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர வேணடும். அது தங்களால் மட்டுமே முடியும்” என்று வேண்டினர்.

அதற்கு ஸ்ரீகிருஷ்ணர்,”இதனை செய்ய முடிந்த ஒருவர் உங்களுக்குள்ளேயே இருக்கின்றார்” என்றார்.

எவருக்கும் ஒன்றும் புரியவில்லை.

ஸ்ரீவாசுதேவர் தொடர்ந்தார்,”சகாதேவன் அதனை மீட்டு சொல்ல, வியாசர் எழுதுவார்” என்றார்.

அனைவரும் சகாதேவனால் எப்படி சஹஸ்ர நாமத்தை மீட்க முடியும் என்பதை அறிய ஆவலாக இருந்தனர்.

ஸ்ரீவாசுதேவர் கூறினார்,”உங்கள் அனைவருள்ளும் சகாதேவன் மட்டுமே ‘சுத்த ஸ்படிக’ மாலை அணிந்திருந்தான்.

சகாதேவன் சிவபெருமானை பிரார்த்தனை செய்து தியானித்து ‘சுத்த ஸ்படிகம்’ உள்வாங்கியுள்ள சஹஸ்ரநாமத்தை சப்த அலைகளாக மாற்ற, அதனை வியாசர் எழுதிக்கொள்ளுவார்” என்றார்.

‘சுத்த ஸ்படிகம்’ அமைதியான சூழ்நிலையில் எழும் சப்தங்களை கிரகித்துக்கொள்ளும்.

இது ஸ்படிகத்தின் குணம், தன்மை.

‘ஸ்வதம்பரராகவும்’ ‘ஸ்படிகமாகவும்’ இருக்கும் சிவபெருமானை தியானித்து அந்த சப்தங்களை மீட்க முடியும்.

உடனே சகாதேவனும் வியாசரும், பீஷ்மர் சஹஸ்ரநாமம் சொல்லிய அதே இடத்தில் அமர்ந்தனர்.

சகாதேவன் மஹாதேவரை பிரார்த்தித்து, தியானம் செய்து சஹஸ்ரநாமத்தை மீட்கத் துவங்கினர்.

அந்த ‘சுத்த ஸ்படிக’ மாலையே உலகின் முதல் ‘வாய்ஸ் ரிகார்டராக’, அற்புதமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை நமக்குத் தந்தது………..”

என்று சொல்லி குழந்தைபோல சிரித்தார் ஸ்ரீசரணர்.

ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.

Source….FB input from Mohan Krishnaswamy and Subramanian Thanappa

Natarajan

திருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன்?

 

திருப்பதி பெருமாள் தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன்? திருப்பதி திருமலைவாசனை தரிசிக்கச் செல்லும்போது பிரதான வாசலின் வலப் புறத்தில் ஒரு கடப்பாரை தொங்குவதைப் பார்க்கலாம். இதுவரை பார்க்காதவர்கள் இனிமேல் செல்லும்போது அந்த கடப்பாரையை அவசியம் பாருங்கள். காரணம் அந்தக் கடப்பாரை பெருமாளை ஸ்பரிசித்த பெருமை கொண்டது.
எப்படி..?

பெருமாள்

திருப்பதி திருமலையின் தண்ணீர்த்தேவையைத் தீர்த்துவைக்கும் குளமான ‘கோகர்ப்ப ஜலபாகம்’ என்னும் குளத்தைத் தோண்ட  பல நூறு ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட கடப்பாரைதான் அது என்பதும், அப்போதுதான் பெருமாளின் திருமேனியை ஸ்பரிசிக்கும் வாய்ப்பு அந்த கடப்பாரைக்கு ஏற்பட்டது என்றும் சொல்லும்போது நம்முடைய வியப்பு பன்மடங்கு கூடுகிறது. திருமலையில் இன்றைக்கும் எங்கு பார்த்தாலும் மலர்கள் பூத்துக் குலுங்கும் இந்த நந்தவனத்தை முதலில் அமைத்த அனந்தாழ்வான்தான், அந்தக் குளத்தையும் ஏற்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யார் இந்த அனந்தாழ்வான்?

வாருங்கள் திருவரங்கத்துக்குச் செல்வோம்…

திருவரங்கத்தில் திருவரங்கப் பெருமானின் கைங்கர்யத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஶ்ரீராமாநுஜருக்கு நீண்டகாலமாகவே ஒரு குறை இருந்துவந்தது. ‘நாம் திருவரங்கத்தில் நந்தவனமும், தபோவனமும் அமைத்துக்கொண்டு பெருமாளின் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருக் கிறோம். ஆனால்,  ‘சிந்துப்பூ மகிழும் திருவேங்கடம்’ என சதா சர்வகாலமும் பாடிப் புகழும் வேங்கடமுடையானுக்கு இப்படி ஒரு நந்தவனமும் தபோவனமும் அமைக்க முடியவில்லையே’ என்பதுதான் அவருடைய ஆதங்கம்.

அதை ஒரு நாள், தமது சீடர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது தெரிவித்தும்விட்டார். தெரிவித்ததோடு நில்லாமல், ‘உங்களில் எவர் வேங்கடவனின் கைங்கர்யத்துக்கு அனுதினமும் மாலை தயாரித்துத் தரும் வேலையை எடுத்துக்கொள்ளப் போகிறீர் ?’ எனக் கேட்கவும் செய்தார். ஆனால், பசுஞ்சோலைகளும் மருதாணிப் பூக்களும் செழித்துக் கிடக்கும் காவிரிக்கரையில் நீராடிவிட்டு, அரங்கனைத் தொழும்போது கிடைக்கும் சுகானுபவம் வேறெங்கு கிடைக்கும் என்ற எண்ணத்தில் எவரும் வாய் திறக்கவில்லை.

‘குருவின் மனக்குறையைப் போக்குபவர் உங்களில் எவருமில்லையா?’ என்ற மறுபடியும் ஆச்சர்யத்துடன் பார்த்தார். அப்போது ஒற்றை ஆளாக எழுந்து நின்றார் அனந்தாழ்வான், கண்களில் வைராக்கியம். உதட்டில் புன்முறுவல். அனந்தாழ்வானை வாரி அணைத்து உச்சி முகர்ந்து திருமலைக்கு அனுப்பி வைத்தார். ஏழுமலை ஆண்டவனுக்கு ‘திருமாலை சேவை’ செய்யும்பேறு தனக்குக் கிடைத்த மகிழ்ச்சியோடு தனது மனைவியுடன் அவரும் திருமலைக்கு வந்து சேர்ந்தார்.

முன்னதாகவே அங்கே வந்து சேர்ந்திருந்த ராமாநுஜரின் தாய்மாமனான திருமலை நம்பி அவரை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார்.

‘அனந்தாழ்வா, உனக்கு குடிசைபோட்டுத் தருகிறேன். மேலும் நந்தவனம் அமைக்கவும் ஏற்பாடு செய்கிறேன். முதல் காரியமாக பெருமாளை வணங்கிவிட்டு வந்து உணவு அருந்துங்கள். களைப்பு தீர ஓய்வு எடுங்கள். நாளை முதல் உங்கள் பணியை ஆரம்பிக்கலாம்’ என்றார். அனந்தாழ்வானும் அவரது மனைவியும் அப்படியே செய்தனர்.

திருமலையில்  குடிசை ஒன்றைக் கட்டினார்.  அதனருகே நந்தவனம் அமைத்தார். மண்வெட்டியால் வெட்டி நிலத்தைப் பண்படுத்தி பூச்செடிகளை நட்டார். அந்த நந்தவனத்துக்கு தமது குருநாதரின் திருப்பெயரே நிலைக்கும்படி ‘ராமாநுஜ நந்தவனம்’ என்று பெயரும் வைத்தார். இப்போதும் அந்த நந்தவனம் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

மழைக்காலத்தில் செடிகள் பூத்துக் குலுங்கின. தண்ணீர் பிரச்னை எழவில்லை. கோடைக் காலத்தின்  தண்ணீர்த் தேவைக்காக குளம் வெட்டி அதில் தண்ணீரைத் தேக்க முடிவுசெய்தார். இச்சமயம் அவரது மனைவி கர்ப்பம் தரித்திருந்தார். நந்தவனம் அருகே சிறுபள்ளம் இருந்தது. அந்தப் பள்ளத்தில் ஒரு பகுதியை மேடாக்கினார். குளத்தின் ஒரு பக்கத்தை மட்டும் மண்இட்டு உயரமாக நிரப்பி, பள்ளத்தை ஆழப்படுத்தினார். ‘நானும் உங்களுக்கு உதவுகிறேன்’ என குளம் வெட்டும் பணியில் மனைவியும் சேர்ந்துகொண்டார்.

மண்ணை ஒரு புறமிருந்து மறுபக்கம் கொண்டு சென்று மனைவி கொட்டிவிட்டு வந்தார். அப்போது அவர் கருவுற்று இருந்தார். ஒரு கர்ப்பிணிப் பெண் மண் சுமந்து செல்வதைப் பார்த்த ஒரு சிறுவன், அவருக்குத் தானும் உதவுவதாகக் கூறினான். ஆனால், அனந்தாழ்வானோ, ‘நம்மால் ஊரார் பிள்ளை எதற்கு சிரமப்பட வேண்டும் என்று நினைத்தவராக, அந்தச் சிறுவனைப் பார்த்து, ‘உன் வேலை எதுவோ அதைப் போய் செய்’  என்று அனுப்பிவிட்டார்.

தனக்குக் கூலி எதுவும் வேண்டாம் என்று சிறுவன் கூறியும், அனந்தாழ்வான் மறுத்துவிட்டார். பெருமாளின் கைங்கர்யத்தில் தானும் தன் மனைவியும் மட்டுமே ஈடுபடவேண்டும் என்று நினைத்தார். அதனாலேயே அந்தச் சிறுவனை தன் திருப்பணியில் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனாலும், கர்ப்பிணிப் பெண் கஷ்டப்பட்டு மண் சுமப்பதைப் பார்த்து அந்தச் சிறுவன் மிகவும் வருந்தினான்.
எனவே, ‘வேலை செய்ய கூலியே வேண்டாம். நான் மண் சுமக்கிறேன். மண் சுமந்த புண்ணியம் தங்கள் மனைவிக்கே கிடைக்கட்டும்’ என்றான் சிறுவன்.  ‘பாவ புண்ணிய விஷயங்களில் சிறுபையனான இவன் தனக்கு புத்திமதி சொல்கிறானே என ஆத்திரமுற்ற அவர் ‘அதிகப் பிரசங்கித்தனமாகப் பேசாமல் போய்விடு. கண்டிப்பாக இவ்விஷயத்தில் நீ தலையிடாதே’ என்று சிறுவனைக்  கடிந்துகொண்டு அங்கிருந்து அனுப்பினார்.

சற்று வளைவான பாதையில் சென்று மண்ணைக் கொண்டுபோய் கொட்ட  வேண்டியிருந்ததால், மனைவி அங்கு சென்று மண்ணைக் கொட்டி விட்டு வந்தார்.  அனந்தாழ்வான் இந்தப் பக்கம் மண் தோண்டினார். வளைவுக்கோ அதிக தூரம் இருந்தது. என்ன ஆச்சர்யம்… அவர் போகச் சொன்ன சிறுவன் போகாமல், அந்தப்பக்கத்தில் கூடையுடன் நின்றிருந்தான்.

” தாயே, நான் மண் சுமந்தால்தானே அவர் கோபப்படுவார். அவருக்குத் தெரியாமல் உங்களுக்கு உதவுகிறேன். இந்த வளைவுக்கு இந்தப் பக்கம் நான் சுமக்கிறேன். அந்தப்பக்கம் நீங்கள் சுமந்து வாருங்கள் ”என்றான் சிறுவன். சிறுவனின் கெஞ்சல் மொழியைக் கேட்ட பிறகு அவளால் மறுக்க இயலவில்லை.

‘சரி, தம்பி’ என்று கூடையை மாற்றிக் கொடுத்தாள். சற்றுநேரம் இப்படியே வேலை நடந்தது.  திடீரென்று அனந்தாழ்வானுக்கு சந்தேகம் தோன்றியது. ‘மண்ணைக்  கொட்டிவிட்டு சீக்கிரம் சீக்கிரமாக வந்து விடுகிறாயே’ என்று மனைவியைக் கேட்க, ”சீக்கிரமாகவே சென்று போட்டு விடுகிறேன் சிரமம் இல்லை”என்று பதில் சொல்லி சமாளித்தாள்.

சிறிது நேரம் சென்றதும், அனந்தாழ்வான்  கரையைப் பார்க்க வந்தார். சிறுவன் கர்மசிரத்தையாக மண்ணைக் கொண்டு போய் கொட்டிக்கொண்டிருந்தான். தன்னை அவர் கவனிப்பதைக்கூட பொருட்படுத்தாமல் சிறுவன் தன் பணியைச் செய்தவாறு இருந்தான். இதனால், கோபம் தலைக்கேற கடப்பாறையால் சிறுவனின் கீழ்த்தாடையில் அடித்தார்.  சிறுவனின் தாடையில் இருந்து ரத்தம் கொட்டியது. கடப்பாரையால் அடிபட்டு ரத்தம் பெருகிய நிலையில், அந்தச் சிறுவன் ஓடிப்போய்விட்டான்.

 

 

 

அவசரப்பட்டுத் தான் சிறுவனை ரத்தம் வரும்படி அடித்துவிட்டோமே என்ற வருத்தத்தில் அனந்தாழ்வானுக்கும் தொடர்ந்து வேலை செய்யப் பிடிக்கவில்லை. குடிசைக்குத் திரும்பிவிட்டார்.

மறுநாள் காலை திருமலை பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்யவந்த அர்ச்சகர்கள் கதவைத் திறந்ததும் அலறினர். பெருமாளின் தாடையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. ‘அர்ச்சகரே பயப்படவேண்டாம். அனந்தாழ்வாரை அழைத்து வாருங்கள்’ என ஒரு அசரீரி கேட்டது. உடனே அவரை அழைத்துவந்தனர்.

பெருமாள் தாடையில் ரத்தம் வடிவதை அனந்தாழ்வான் கண்டார். ஆனால், அவருக்கு மட்டும், தான் மண்சுமந்த கோலத்தைக் காண்பித்தார் பெருமாள்.

”சுவாமி, என்னை மன்னித்து விடுங்கள். தங்கள் தொண்டுக்கு அடுத்தவர் உதவியை நாடக்கூடாது என்ற சுயநலத்தில் சிறுவனை விரட்டினேன். அவன் வலிய வந்து மண் சுமந்ததால் வந்த கோபத்தில் அடித்தேன். அந்தச் சிறுவனாக வந்தது தாங்கள்தான் என்று தெரியாது. சுவாமி என்னை மன்னித்தருள்க” என்று விழுந்து வணங்கினார் அனந்தாழ்வான்.

‘அனந்தாழ்வா, நீ மலர்மாலை நேர்த்தியாகக் தொடுத்து அணிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி.  ஆனால், கர்ப்பிணியான உன் மனைவி மண் சுமப்பதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பக்தர்களின் கஷ்டத்தைப் போக்கத்தான் நான் இங்கு இருக்கிறேன். என் பக்தை கஷ்டப்படுவதைக் கண்டு வேடிக்கை பார்க்க என் மனம் எப்படி இடம் கொடுக்கும்”என்று அசரீரியாகக் கேட்டார்.

”கருணைக் கடலே! உன் அருளே வேதனை போக்கும். கஷ்டம் துடைக்கும். என்னை மன்னியுங்கள் சுவாமி” என்றார். பெருமாளோ மோகனமாக தனக்கே உரிய புன்னகையை உதித்தார்.

‘சரி ‘ ரத்தம் வழியாமல் இருக்க என்ன செய்வது?’ என்று அர்ச்சகர்கள் குழம்பினர்.

‘சுவாமியின் தாடையில் பச்சைக்கற்பூரத்தை வைத்து அழுத்துங்கள் ரத்தம் வழிவது நின்றுவிடும்’ என்றார்.

அர்ச்சகர்களும் மூலவரின் கீழ்தாடையில் பச்சைக் கற்பூரத்தை வைக்க, ரத்தம் வழிந்தது நின்று போனது. இதை நினைவுபடுத்தும்விதமாகவே திருப்பதிப் பெருமாளின்தாடையில் பச்சைக் கற்பூரம் வைக்கும் நிகழ்ச்சி இன்றளவும் தொடர்கிறது.

Source…

 எஸ்.கதிரேசன் in http://www.vikatan.com
Natarajan

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?…

 

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?

புரட்டாசி, ஐப்பசி மாதங்களிலும், சித்திரை மாதத்திலும் நவராத்திரி கொண்டாடப்பட வேண்டும் என, இந்து சாஸ்திரம் கூறுகிறது. இவை முறையே, சரத் ருது, வசந்த ருது என்றழைக்கப்படுகின்றன.ஏன் இப்படி என்ற கேள்விக்கு, இந்த மாதங்கள், எமனின் கோரைப் பற்கள் என்றும், மனித குலம், கடுமையான நோய்களால் பீடிக்கப்படும் காலம் என்றும் பதில் வருகிறது.

சண்டிகையை வழிபட்டால், நோய்களைத் தவிர்க்கலாம். சண்டிகை என்பவள் சாதாரணமானவள் அல்ல. 18 கைகளை உடையவள்; ஆயுதம் தரிப்பவள். மகா வீரியம் கொண்டவள். எப்பேற்பட்ட துக்கங்களையும் துாக்கி எறிபவள். இவளை வழிபடுவதற்கான காலமாகவே, நவராத்திரி ஏற்படுத்தப்பட்டது. மகாளய பட்சம் முடிந்த அடுத்த தினத்திலிருந்து கொண்டாடினால், நோய் வரும் முன் விரட்டலாம்.

வட மாநிலங்களில் நவராத்திரி, துர்கா பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. கல்வியில் சிறந்து விளங்க விரும்புபவர்கள், எதிலும் வெற்றி வாகை சூட விரும்புபவர்கள், அதிகாரத்தில் தொடர்ந்து இருக்க விரும்புபவர்கள், சுக வாழ்வு வாழ விரும்புபவர்கள், நவராத்திரியைக் கொண்டாட வேண்டும் என, வியாசர் சொல்கிறார்.நவராத்திரி, பெண்களுக்கு மட்டுமே உரிய பண்டிகை என நம்பப்படுகிறது. ஆனால், மேலே சொன்ன பராக்கிரமங்களை பெரும்பாலும் விரும்புபவர்கள் ஆண்களே. எனவே, அவர்களுக்கு இந்த பண்டிகை மிகவும் முக்கியம்.

நவராத்திரி விரதம், பிரதமையில் துவங்கி நவமியில் முடிகிறது. இந்த நாட்களில், அம்பிகையை பூஜித்தால், அம்மை நோய் வராது என்றும், கிரக தோஷங்கள் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது. எதிர்மறையான விளைவுகள் எதுவும் வாழ்க்கையில் அண்டாது.

அழகு, அன்பு, ஆற்றல், அருள், அறிவு ஆகியவற்றை, பெண் வடிவமாக கருதுவது நம் மரபு. கல்லையும், பெண்ணுருவாக்கி வழிபடுவது, நம் கலாசாரம். இவை இப்படி இருக்க, பெண் என்றால் பலவீனம் என நினைத்து, சுயஅழிவை தேடிக் கொண்ட மகிஷாசுரனின் கதை தான், நவராத்திரி விழாவின் துவக்கம். அன்னை பராசக்திக்காக, ஒன்பது நாட்கள் இரவில் தொடர்ந்து செய்யப்படும் பூஜையாகும். பொதுவாக, நவராத்திரி பூஜை, ஆண்டிற்கு நான்கு முறை கொண்டாடப்பட வேண்டும் என்பது புராண வரலாறு.

நான்கு வகை நவராத்திரி

ஆடி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் – வராஹி நவராத்திரி

புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் – சாரதா நவராத்திரி

தை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி – சியாமளா நவராத்திரி

பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் – வசந்த நவராத்திரி

இந்தியாவில், புரட்டாசி மாத மகாளய அமாவாசைக்கு பின் வரும், பிரதமை நாள் முதல் ஆரம்பிக்கும் சாரதா நவராத்திரி பெரும்பாலானோரால் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் பிறந்தால், புது வாழ்வு அமையும் என்பது புதுமொழி.

அரிசி மாவு கோலம்

சுண்ணாம்பு மாவு பயன்படுத்தாமல், அரிசி மாவு மற்றும் செம்மண் கோலமிட்டால், குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். நவக்கிரக கோலம் போட்டால், அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.இரவு, 7:00 மணி முதல், 9:30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

பூஜையில் கலந்து கொள்ளும் கன்னிப் பெண்களுக்கு புதிய ஆடை, பல விதமான மங்கலப் பொருட்கள், மஞ்சள், குங்குமம், வளையல், ரிப்பன், பொட்டு என, அளிப்பது நன்மை தரும்.

ஒன்பது நாட்களின் மகிமை

இந்த ஒன்பது நாட்களும், பராசக்தி, ஒவ்வொரு தேவியின் வடிவில், ஒரு வயது முதல் 10 வயது கன்னிப்பெண் வடிவில் அவதாரம் செய்கிறாள்.கன்னியின் வயதிற்கேற்ப, ஒவ்வொரு நாளும் ஒரு கன்னிகையாக ஒன்பது நாள் ஒன்பது கன்னிகைகளையும், ஒன்பது சுமங்கலிகளையும் பூஜை செய்வது, அளவிட முடியாத புண்ணியம் உண்டாகும்

குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா
என்ற பெயர்களால் ஒன்பது நாட்களும் பூஜிக்கப்பட வேண்டும்.அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை, உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது. பராசக்தி, அசுரர்களுடன் சண்டையிட்ட போது, தேவர்கள், பொம்மை மாதிரி நின்று கொண்டிருந்ததைக் காட்டத்தான், ‘பொம்மை கொலு’ வைப்பதாகவும் சொல்வதுண்டு.

இந்த ஒன்பது நாட்களில், தினமும், பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். பகலில், 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபட்டால் பலன்கள் கிடைக்கும்.தசரதனின் மகன் ராமர் தான், முதன்முதலில் கொண்டாடினார். அதன் பின் தான், அவருக்கு சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று கூறப்படுவதும் உண்டு.

Source….www.dinamalar.com

Natarajan

Legends of Onam: Let us all welcome Maveli, the righteous king!…

 

Onam is one the most anticipated festivals celebrated with much fanfare and merriment by the people in Kerala, irrespective of one’s caste or creed.

Usually coinciding with crop harvests in the region, the story behind how the festival came into being goes all the way back to Vedic and Puranic ages.

The mythical King Mahabali, considered to be one of the greatest kings to have ever ruled Kerala, is believed to ascend to Earth from the netherworld to meet his subjects once every year.

It is his homecoming that is celebrated as the festival of Onam, as we know it today.

The king remains quite popular in Kerala even to this day, as testified by the folk song, Maaveli Naadu Vannidum Kaalam (When Maveli, our King, ruled the land), that speaks of his reign being one where all were equal.

According to the traditional legend, the king’s growing popularity amidst the common people became a rising concern for the jealous gods, Indra in particular.

According to Hindu beliefs, when a king or an emperor has a considerable number of fair and just deeds to his credit, he has the power to dethrone even Indra, who is the god of the gods.

Threatened by Mahabali’s rising greatness, they decided to hatch a scheme against the king and rope in the supreme god Vishnu.

Taking the form of a poor Brahmin monk named Vamana, Vishnu approached the king and asked to be granted a boon. Mahabali, who was known for his altruistic qualities, readily agreed to the monk’s request. 

An ancient illustration depicting Vamana casting the king to netherworld. Source: Wikimedia
Vamana wished for a parcel of land that he could cover in three paces or steps. Amused by such a trivial request, the king granted his wish. However, the ‘simple’ monk soon transformed into a giant – and covered all of the king’s lands in just two steps.

Where to put the third step? The king could not go back on his word. Having nothing left that he could pledge, Mahabali offered his head to the monk as the third step. Vamana’s final step pushed the king to the netherworld, thus robbing him of his earthly commitments and his throne to heaven.

Vishnu offered the king a chance to visit his kingdom once every year, for his attachment to his subjects was well known even amidst the gods.

And thus, the festival of Onam came into being, marking the homecoming of the noble king, who is lovingly called Maaveli by his people.

Different rituals are practised even today that celebrate the reign of the king, which is considered to be a golden era in the history of Kerala.

Interestingly, despite the role that Vamana had in the banishment of Mahabali, he is not written off as a villainous character in the state.

In fact, one of the major instalments of the festivities includes statues of both figures. These are circulated in homes of people as a representation of the king’s visit as well as the god’s.

While the statue of Mahabali is known as Onathappan, Vamana’s form goes by the name of Thrikkarayappan, the lord of the land covered in three paces. And both make way into the floral arrangement of Pookalam on Pooradam, the eighth day of Onam.

And as the month of Chingam falls by year after year, the people of Kerala continue to await the visit of their beloved king and seek his blessings.

Source….LekshmiPriya .S in http://www.betterindia.com

Natarajan

 

 

 

 

Meet the Kerala family that has been creating ‘Onavillu’ for Onam for centuries …!

The Vilayil Veedu family is the only family entrusted to make the ‘Onavillu’ that is offered to the deity at Sri Padmanabhaswamy Temple.

For the Vilayil Veedu family at Karamana it is a busy time of the year. The family of traditional craftsmen is the only family entrusted to make the ‘Onavillu’, a ceremonial bow that is offered to the deity at Sri Padmanabhaswamy Temple here as part of the annual rituals during the Onam festival season.

Their house wears a festive look, as all the five male members of the family, including a 12-year-old, immerse themselves in the task of crafting these colourful bows.

“In these bows, we paint all the avatars of Vishnu. 12 of them are offered in the temple as a part of the ritual. Nowadays, even more, numbers are being offered at the temple. They consider it holy and keep it in their pooja rooms as well,” Binukumar, one of the craftsmen from the family, told TNM.

The bow is a broad piece of wood, tapering on both sides, on which miniature paintings of the Ananthasayanam, Dasavatharam, Sreerama Pattabhishekam and the Sreekrishnaleela are portrayed.

Earlier the ‘villus’ were 3.5-4.5 feet long and 4-6 inches wide. But, now the family have introduced 1.5 feet long small bows that can be used by everyone.

The making of the Onavillu is an age-old tradition that has continued over the years from the 16th century. The family members observe a 41-day penance prior to the commencement of the work.

“We have to be pure while we make this. We are vegetarians and follow certain other norms while making it. There are certain mantras to be chanted while carving and drawing each Onavillu,” he added.

Earlier the making would take place only during the Onam season but now with people buying for their home, the craftsmen work throughout the year.

The red tassels used to adorn the ‘villu’, which is known as ‘Kunjalam’, are made by the convicts of the Central Jail at Poojappura here.

Last week the jail authorities handed over this year’s required ‘Kunjalam’ to the Vilayil family.

“Kunjalam making was started decades ago by the jail inmates. There is a weaving unit in the jail.  The Kunjalam was prepared under the guidance of the instructor. We make it as per the order given by the temple,” S Santhosh, Poojappura jail superintendent told TNM.

He also says that even the prisoners observe penance before and while weaving the Kunjalam.

“They don’t take any non-vegetarian food, make themselves clean before starting the work and also do certain prayers,” he added.

Binukumar said that at prison these ‘Kunjalams’ are made by the inmates irrespective of caste or religion. “People belonging to all religion are involved in the making of Kunjalam. Surprisingly they all observe the penance so that the Onavillu’s holiness is not lost,” he added.

The ‘villus’ are first offered to the family deity at the Valiya Veedu for three days. They are then taken to Sri Padmanabhaswamy Temple on Thiru Onam day and displayed at the Natakasala before being offered to the deity.

Edited by Kannaki Deika

Source….Haritha John in http://www.thenewsminute.com

Photos : Sreekesh Raveendran Nair

New Year Greetings and Wishes …

 

da8d8-baba2

God does not have an iPhone or Android Mobile…No iPad with  Him either..
But HE is the  favourite contact to all of us !
HE does not have any account in FaceBook ..But HE is our Best friend !
HE does not have any handle in Twitter…but we all follow HIM !
HE does not have internet with Wifi…but we are all connected to HIM !
We can call HIM at any time  and HIS customer Service never puts us on ” Hold” !
HE loves all of us equally without any bias or discrimination ..and no conditions apply.!
 We  pray to HIM that HE continues to remain in our  contact and shower HIS Blessings upon
all of us in the Year 2017 too as HE was doing all these years !
Let this request be the only Prayer to God from all of us on this Day !
Best wishes for a Happy , Healthy and  Prosperous New Year to you and your loved ones .
Natarajan
28th Dec 2016