சிந்திப்போம் ….சாதிப்போம்
………………………………………………..
நம்ம ஊரில் மழை பெய்யுமா என தினம் தினம் ஒரு கேள்வி
சும்மா இல்லாம வருண பகவானுக்கும் நித்தமும் ஒரு ” அர்ச்சனை ” …இப்போ சொல்லுங்க
நம்ம சென்னை மக்களே …இந்த மழை போதுமா இன்னும் கொஞ்சம்
வேணுமா …இப்போ கேட்பது வருணன் … ரமணன் அல்ல !!!
கொஞ்சம் யோசிங்க மக்களே … நாம் அழைத்து
நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளி வருணன் …
ஆனா அவர் வந்து தங்க
நாம கொடுக்கலியே இடம் அவருக்கு … அவர் வரும்போது தங்கும்
மனையும் அவர் இடமும் இப்ப நம்ம பிடியிலே ..நம் வேதனை நீக்க
நாம் கருணை மனு கொடுத்து நம்மிடை வந்த வருணனுக்கே இந்த சோதனை ..
தன் மன வேதனை பொறுக்காமல் வருணன் வடிக்கும் கண்ணீர் அல்லவா
இப்போ “பேய் என பெய்யும் மழை” …இந்த நிலை
மாறி “பெய் என பெய்யும் மழை” சக்தி மீண்டும்
நம்மிடை உருவாக நாம் முதலில் மாற வேண்டாமா ?
சிந்திப்போம் ….சாதிப்போம் …!!!
*சென்னை மற்றும் தமிழக நகரங்களில் பெய்து வரும் மழையின் பின்னணியில் உருவான ஒரு ஏக்க கவிதை …
நடராஜன்
25 Nov 2015
