Message for the Day…” You Must always Talk to others in a Pleasing Manner…”

In a story, Birbal tells Akbar, “Sweet talk is the sweetest thing in the world; nothing else, not milk, honey or jaggery comes close to it. A sweet word is the most valuable thing; through it one we can win a person over, give great joy and even attain a higher status. When crows caw at us, we throw stones at them. Whereas, when cuckoos sing, we respect them. Neither is the cuckoo going to give us a crown, nor will the crow punish us. When one’s speech is good, one earns a good name. Hence, a sweet word is indeed the sweetest thing in the world.” You must always talk to others in a manner which would give them contentment and joy. This is the essence of all scriptures. It is not enough to listen to, learn or chant Vedas, scriptures and Puranas (ancient spiritual texts), you must give joy and satisfaction to others.

Sathya Sai Baba

 

“பாவ மூட்டையை எப்படி எறக்கப் போறே ? ….”

பல வருடங்களுக்கு முன்பு நடந்தது இந்த நிகழ்ச்சி.

அன்று மஹானின் தரிசனம் எல்லோருக்கும் கிடைத்துக் கொண்டிருந்தது. மெளன அஞ்சலிக்குப் பிறகு பிரசாதத்தைப் பெற்று போனவர்களும் தங்களின் குறைகளை ஓரிரு வார்த்தைகளால் சொல்லி ஆறுதல் பெற்றவர்களும் இருந்தார்கள்.

தொடரின் நடுவே ஒருவர் வந்து நின்றார். அவரை மஹான் ஏறிட்டுப் பார்த்தார். பிறகு மெதுவான குரலில்,
“உன் பிள்ளைகளுக்கும் குடும்பத்தாருக்கும் ந்ல்லது செய்யறதாக நினைச்சுண்டு மேலே மேலே பாவ மூட்டையை அவா பேர்லே ஏத்திண்டு இருக்கே” என்றார்.

எதிரில் இருந்தவர் திடுக்கிட்டார். மனதறிந்து தாம் எந்தப் பாவமும் செய்யவில்லையே என்கிற எண்ணம் அவருக்கு….மஹானை ஏறிட்டுப் பார்த்தார்.

“பிராமணனா பிறந்தவர்கள் அன்னத்தை விலைக்கு விற்கப் படாதுன்னு சாஸ்திரத்திலே சொல்லியிருக்கே, அதை நீ படிச்சதில்லையா?”

அந்தப் பக்தர் ஓட்டல் நடத்துபவர். பிழைப்பிற்காக இதை பல வருடங்களாக நடத்தி வந்திருக்கிறார். பக்தர் அதற்கும் பதில் சொல்லவில்லை.

“சரி, அது உன் பிழைப்புக்காகன்னு வெச்சிண்டா கூட, அதுக்கு மேலேயும் வேறொரு பெரிய பாவத்தையும் பண்ணிண்டு இருக்கே…”

பக்தருக்கு உண்மையில் அது என்னவென்றே தெரியவில்லை. மஹானே தொடர்ந்தார்: “சேத்து வச்சிருக்க பணம் போதாதுன்னு, அதை வட்டிக்கு விட்டு அநியாயமா பணத்தை வசூல் செய்யறே. இது நீ அடுத்த தலைமுறைக்கு சேத்து வைக்கிற பாவம்” என்றார்.

தான் பணத்தை வட்டிக்கு விடுவது மஹானுக்கு எப்படித் தெரியும் என்கிற பிரமிப்பு நீங்கும் முன்னர் மஹான் சொன்னார்:

“நீ கேட்கிற அநியாய வட்டியைத் திருப்பிக் கொடுக்கும் போது வயிறெரிந்து உன்னையும் உன் குடும்பத்தாரையும் சபிக்க மாட்டார்களா?” அப்படி பல சம்பவங்கள் நடந்தது பக்தருக்குத் தெரியும்.

”இந்தப் பாவமூட்டை உன் சந்ததியின் தலைமேல் ஏறி உட்கார்ந்து கொள்ளுமே. அதை எப்படி இறக்கப்போறே? இதுவரைக்கும் நீ சேத்து வச்ச பணம் போறாதா? எதுக்கு மேலே மேலே ஆசைப்பட்டு உன் சந்ததிக்கு பாவமூட்டையை சேர்த்து வைக்கறே?” மஹான் இப்படிக் கேட்டதுதான் தாமதம். அந்த பக்தர் நெடுஞ்சாண்கிடையாக மஹானின் காலில் விழுந்தார்; கதறித் துடித்தார்.

“இனி நான் என்ன செய்யணும் சொல்லுங்கோ மஹாபிரபு!”

எழுந்தவரை ஆசீர்வதித்த பின்னர்,

“நீ இதுவரை சேர்த்த பணம் உன் தலைமுறைக்கும் போதும். முதல்லே நீ நடத்தற ஓட்டலை மூடி.. அன்னமுன்னு கேட்டு வர்றவாளுக்கு உன் ஆத்திலே சாப்பாடு போடு. வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கறதையும் நிறுத்திடு”.

“அப்படியே ஆகட்டும்” என்று கை கூப்பினார் பக்தர்.

“இன்னும் ஒரு விஷயம் பாக்கி இருக்கே!”

“மஹா பெரியவா சொன்னா கேட்டுக்கிறேன்”.

“இதுவரை நீ வாங்கின வட்டியை எல்லாம் கணக்குப் போடு. எவ்வளவு பணம் சேந்திருக்குன்னு பார். அதை மொத்தம் எடுத்துண்டு போய் திருப்பதி ஏழுமலையான் உண்டியிலே போட்டுட்டு அவரை சேவிச்சு வா”.

பக்தர் விடை பெற்றுக் கொண்டார்.

மஹாபெரியவா பக்தர்கள் பாவ மூட்டையை சுமக்கக் கூடாதென்பதில் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பது இதிலிருந்து தெரிகிறது அல்லவா?

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/6647/mahaperiyavaas-concern-extract-book-venkatasamy#ixzz2v6KQPHNB

Message for the Day…”Prayer is for the Mind just as Food for the Body …”

Prayer is for the mind, just as food is for the body. Wholesome food gives health and strength to the body. Prayer purifies your mind and strengthens your spirit. If bhajans are done in an ostentatious manner, ego gets bloated. Young people must proceed from tamas, the darkness of ignorance, to tapas, spiritual austerities. Be steadfast in pursuing whatever you choose. There is no point in doing meditation for two days and giving up on the third day. If you start practicing meditation, it must become an integral part of your life. You cannot assume you are meditating by merely closing your eyes. You must progress until you feel united with the God present within your heart. Along with meditation, you must acquire the knowledge and skills to lead your professional life. You must always maintain the same discipline and strength of character, wherever you are.

 Sathya Sai Baba

Message For The Day…” Thro Meditation Oneness with Divine is Achieved …”

Meditation is not merging the form in your mind. It is merging your mind with the Form, so that the mind doesn’t exist. There are three stages in this process – The Ooha (imagining the Form), Bhava(experiencing the Divine) and finally Sakshatkara (Realization). In the initial stages, the devotee imagines one’s favourite Divine Form, as they have seen before. Over time, the image vanishes in the mind and they begin experiencing the Form. This process takes longer and slowly, the devotee starts experiencing the Lord from the toe to the head. The impressions last longer and grow deeper and gradually, the image of the Lord that is firmly implanted becomes an inner reality. While the imagining stage gives only momentary joy, the experiencing stage results in complete identification of the seeker with the Lord. Thus, over time, awareness of the Divine results in oneness with the Divine (Brahmavid Brahmaiva Bhavathi).   

Sathya Sai Baba

Message For the Day…”Have Pure Thoughts…Get Your Body &Senses Purified…”

If you throw a pebble in a pond, a small ripple originates and spreads until the end of the river. You may or may not be able to see, but the ripple starts right at the point where the stone meets the water. Similarly, in the lake of your mind, when you throw a stone of thought, ripples of thought waves start spreading throughout your body. The same ripple reflects in your eyes, brain, ears, heart and also in your hands and legs. Hence you must be very careful with the kind of thoughts that you permit to pervade your personality. When you get pure thoughts, all your senses will be purified by it. However, if you get bad thoughts, your senses will be perverted and this will quickly spread to your eyes, heart, hand and brain. Always have pure thoughts. If you do so, your body, senses and actions will be purified.

 

Sathya Sai Baba

Message for the Day…” How to do Meditation …” ?

During meditation, care must be taken to keep the back straight and steady without bending forward or backward or sideward. If you bend or move, misdirection of highly potent energy (Kundalini) can occur resulting in mental derangement. Also wear loose clothes. Your eyes must concentrate on the tip of the nose. They must be half-open, so you are neither distracted nor falling asleep. Free your mind from bad thoughts and fill it with sacred ones. To achieve this, you must control your senses. Your ears must be trained to listen only to noble and elevating ideas, and to eschew evil speech and gossip. Your eyes must be tuned to see the Divine. The restless mind must be restrained by making it concentrate on inhalation and exhalation while incessantly repeating the Mantra‘So-Ham’ (I am He). Through these postures and activities, your life-breath is controlled and this will ensure that the great power of Yoga is revealed unto you.   

Sathya Sai Baba

“உமா மகேஸ்வரிகளை தெரியுமா உங்களுக்கு?- “…

 

கோப்புப் படம்

கோப்புப் படம்

‘யார் இவர்களை இரவு வரை வேலை பார்க்கச் சொன்னது?’

‘காலையில் கிளம்பி நள்ளிரவுதான் வீட்டிற்கு திரும்புகிறாள்… அப்படி என்ன வேலையோ?!

‘ஒழுங்கா கல்யாணம் பண்ணிட்டு வீட்டுல உட்கார வேண்டியதுதானே!’

‘இவங்க போடற டிரெஸ்ஸை பார்த்தாலே, இவங்க எப்படிப்பட்டவங்கன்னு தெரியது?’

உமா மகேஸ்வரியின் மரணம் தொடர்பான செய்திகள் வெளிவரத் தொடங்கியதும், சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் உதிர்த்த கருத்து முத்துகள் இவை.

ஐ.டி. பெண்களைப் பற்றியும், அவர்களது வாழ்க்கை முறையைப் பற்றியும் மேலோட்டமாகக் கூட சரிவரத் தெரிந்துகொள்ளாத இவர்கள், ஏதாவது இப்படி கிளப்பி விடுவது வழக்கமாகிவிட்டது.

எந்தக் குடும்பச் சூழலில் பெண்கள் வேலைக்குப் போகிறார்கள் என்பது இந்த அறிவுஜீவிகளுக்குத் தெரியுமா? ‘என் குடும்பத்தின் நிலையை மாற்ற வேண்டும், நான் சுதந்திரமாக நடைபோட வேண்டும்’ என்று எண்ணம் கொண்ட பெண்கள் ஒவ்வொரு நாளும் அக்னி பரீட்சையைதான் சந்திக்கின்றனர்.

நைட்டு வரைக்கும் அப்படி என்ன வேலை செய்கிறார்கள்? என்று கேட்கும் அன்பர்கள் சிலருக்கு, நம் இரவு நேரம்தான் அமெரிக்கா முதலான பல நாடுகளின் வர்த்தக நேரம் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஐ.டி.யில் தொழில் சேவை சார்ந்த நிறுவனங்கள் (Service based companies) பலவும் இப்படி இங்கு இரவு நேரத்தில் ஆந்தை போல் விழித்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் இவர்கள் செய்வது கஸ்டமர் சர்வீஸ். வெளியூரிலுள்ள பலரிடமும் பேச வேண்டியிருக்கும், நாம் வேலையை செய்து முடித்து விட்டு இரவு எட்டு, எட்டரை மணி அளவில் கிளம்பப் பார்த்தாலும் அவர்கள் கூறும் குறைபாடுகளை தீர்த்து வைத்த பிறகே கிளம்ப முடியும்.

அதிலும் பி.பி.ஓ. இருக்கிறதே – பொதுவாக கால் சென்டர் என்று சொல்லப்படுவது – இதில் வேலை பார்ப்பவர்களின் பொழுது குறைந்த பட்சமாக இரவு ஏழு மணி அளவில்தான் தொடங்குகிறது. அடுத்த நாள் அதிகாலை சுமார் மூன்று நான்கு மணி வரை வேலை நேரம் செல்கிறது. திரைப்படத்தில் காட்டுவது போல் சும்மா ஜாலியாக கும்மாளம் அடிப்பது, ஒகே DUDE, சூப்பர் buddy என்று பீட்டர் விடுவது போல் எல்லாம் இந்த மாதிரி கம்பெனிகளில் கிடையாது.

ஒவ்வொரு நாளும் எப்போது நிறுவனத்தை விட்டு கிளம்புவோம் என்று இங்கு யாருக்கும் தெரியாது. எப்போ என்ன வெடி வெடிக்குமோ என்ற பயம் தான் ஒவ்வொரு நாளும் இங்கு ஆள்கின்றது.

நிறுவனத்தை விட்டு வெளியே செல்லும்போது, ஒவ்வொரு மனிதரும் பல மன உளைச்சல்களை சுமந்துதான் வெளிவருகின்றனர். இதில் பெண்கள் பெறும் மன உளைச்சல் இருக்கிறதே மோசம். இரவு ஒன்பது, பத்து, பதினொன்று, பனிரெண்டு மணி, மூன்றுமணி இப்படி பல வேளைகளில் வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழல் இவர்களுக்கு நிகழ்கின்றது.

தர்மபுரி, ஈரோடு, சேலம், மதுரை, ஜார்கண்ட், ராஜஸ்தான், கோவை, தேனீ, கொச்சின், நெல்லூர், குண்டூர் இப்படி பல ஊர்களிருந்து பல மாநிலங்களிருந்து பெண்கள் நம்மூரில் வந்து வேலைப் பார்க்கின்றனர். பொருளாதார ரீதியாக இப்பெண்களால் இவர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரம் மாற்றப்பட்டிருக்கிறது, மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் இவர்களும் இவர்கள் குடும்பங்களும் சந்திக்கின்ற வேதனைகள் இருக்கிறதே, அது ஏராளம்.

வேறு ஊரில் வசிக்கும் அப்பாக்கள் தன் மகள் ‘ஹாஸ்டலுக்கு வந்துட்டேன்ப்பா’ என்ற செய்தி கேட்ட பிறகே உறங்குகிறார்கள், தெருமுனையில் இரவு மூன்று மணிக்கு தன் தங்கைக்காக காத்திருக்கும் அண்ணன்களுக்கும், வீட்டில் சாப்பாட்டை வைத்து கண் விழித்துக் காத்திருக்கும் அம்மாக்களுக்கும் எத்தனை பேர் தெரியுமா? அந்த இரவு நேரத்தில் தன் வீட்டுப் பெண் வீடு திரும்பவில்லை, இனி அவள் வரவே மாட்டாள் என்ற செய்தி வந்தால் இவர்களின் நிலையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இன்னும் பல அம்மாக்கள் தன் பிள்ளையை வீட்டில் உறங்க வைத்து, ஏதோ ஒரு பொழுதில் வீட்டிற்கு சென்று தன் குழந்தைக்குத் தரும் முத்தத்தில் தான் உயிர் வாழ்கிறாள். வேலைக்கு சென்ற அம்மா வீட்டிற்கு திரும்ப மாட்டாள் எனும் செய்தியை அக்குழந்தைக்கு எப்படி கூறப்போகீறீர்கள்?

இரவில் தனிச் சாலையில் ஒரு பெண் நடந்து சென்றாலே அவள் ஒரு போகப்பொருளாகவே பலநேரங்களில் பார்க்கப்படுகிறாள். இன்னும் எத்தனை தூரத்திற்கு நம்மால் பாதுகாப்பு தர முடியும். ஒவ்வொரு பெண்ணும் வீட்டுக்கு செல்லும் வரை அவர் பின்னால் ஒரு காவலாளியை அனுப்ப முடியுமா? ஒவ்வொரு சந்திலும் சீ.சி.டி.வீ கேமராவை இணைக்க முடியுமா? இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் ஒரு தவறும் செய்யாத பெண்ணை குறை கூறப் போகிறோம்? எப்போது திருந்தப் போகிறோம்? இன்னும் பெண்ணுக்கு எதிராக நடக்கும் இழிபாடுகளுக்கு பெண்களின் ஆடையும், பெண்களின் நடத்தையை மட்டும் குறைகூறுபவர்களே வெட்கமாக இல்லை உங்களுக்கு!

ஒரு பெண் தனியே நடக்கையில் அவள் ஒரு உயிர், வெறும் ஒரு பண்டம் அல்ல என்ற உண்மை ஒவ்வொரு மனிதனுக்கும் உரைக்க வேண்டும். ஒரு பெண் தனியே நடந்த செல்கையில் இவள் என் நாட்டு பொக்கிஷம். இவளுக்கு யார் தீங்கு செய்தாலும், சிதைக்க முயன்றாலும் நான் விட மாட்டேன் என்ற எண்ணம் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் வர வேண்டும். என் பெண் காணவில்லை என்ற பதறி வரும் அப்பாவிடம் எங்கேயாவது ஓடி இருப்பாள் என்று கூறும் வாய்களை முதலில் சிறையில் அடைக்க வேண்டும்.

பெண்ணைப் பெற்றவருக்கு நெஞ்சு ஒவ்வொரு நாளும் பக் பக் என்று அடிக்கின்றது, வீட்டிலிருந்து வெளியே சென்ற பெண் பத்திரமாக திரும்பி வர வேண்டும் என்று. உங்களின் சதைப் பசிக்கும், வன்மத்திற்கும் அனாவசியமாக ஒரு குடும்பத்தை இரையாக்காதீர்கள்!

அர்த்த ஜாமத்திலே ஒரு பெண் தனியே நடந்து சென்றால், அவள் உங்கள் வீட்டுப் பெண் என்று, உங்கள் தங்கையென்று, உங்கள் சிநேகிதி என்று நினைத்துக் கொள்ளுங்கள். மனிதம் அத்து மீறப்படும்பொழுது அதைக் காக்க வேண்டுவது ஒவ்வொருவரின் கடமை. ஆண்மை தவறேல்!

எங்காவது ;இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான்’ என்று பேசும்பொழுது உங்கள் வீட்டுப் பெண்ணையும் கொஞ்சம் மனதில் வைத்துப் பேசுங்கள்!

உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா?

ஐ.டி. நிறுவனங்களின் பணியாற்றும் பெரும்பாலான பெண்கள், பொருளாதார ரீதியில் வசதியான குடும்பங்களைப் பின்னணியாகக் கொண்டவர்கள் அல்ல… கீழ், நடுத்தர நிலையில் உள்ள தங்கள் குடும்பங்களை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றும் உமா மகேஸ்வரிகள் அவர்கள்.

ஹரி, ஐ.டி. நிறுவன ஊழியர் – தொடர்புக்கு nanaprabhu5591@gmail.com

 source::::::The Hindu..Tamil

natarajan

Message for the Day…” How ‘shavam'(corpse) can become Shivam(God)”…

The chief objective of all Sadhana (spiritual striving) is to eliminate the mind, to become A-manaska. Then illusion will disappear and Reality will be revealed. During the dark fortnight of the month, Sadhana must be done to eliminate a fraction of the mind each day; for, every day, a fraction of the Moon is shrinking. On Chathurdasi (the 14th night), the night of Shiva, only a fraction of the moon remains. If some special effort is made that night, through more intensive and vigilant Sadhana, like pujajapamdhyana (ritual worship & meditation), success is ensured. Hence, Shiva must be meditated upon that night, every month, without the mind straying towards thoughts of sleep or food. Once a year, on Mahashivaratri, a special spurt of spiritual activity is recommended, so that the Shavam (corpse) can become Shivam(God), through perpetual awareness of its Divine Indweller. Dedicate the vigil of this Shivaratri night to the Shiva present within each one of you.    

Sathya Sai Baba

 

Message For the Day…” Meditation Means Offering the Flower of Love to the Divine…”

Meditation is a process that takes place beyond the senses. Consider a rose plant with branches, leaves, flowers and thorns. Locating a rose plant with a flower in a garden requires concentration. Once we have concentrated and identified the flower, the next stage is to pluck it without the thorns. Love is the flower, lust is the thorn. We have to carefully pluck the flower, without the thorn. This is contemplation. Having plucked the flower, what do we do with it? We must offer it to the Lord. Thus, meditation means offering the flower of love to the Divine. In the rose plant of our body, there is the rose of pure and sacred love, emitting the fragrance of good qualities. Below the rose, however, there are thorns in the form of sensual desires. The purpose of this life and meditation is to separate the rose of selfless Love from the senses and offer it to the Lord.   

Sathya Sai Baba

 

“இதைப் படி முதலில் …. “

தந்தது உன் தன்னை

தன் மனம், மார்க்கம் அனைத்துமே ஸ்ரீமஹா பெரியவாளே என்னும் ஆனந்தக் களிப்போடு தன் பிறவிப்பேற்றை அனுபவித்த ‘பிரதோஷம் மாமா’வின் அதி தீவிர பக்தி, அவரை ’64-ஆம் நாயன்மார்’ என்று மஹா பெரியவாளே அங்கீகரித்தருளும்படி செய்தது.

இவரின் பக்திநெறி ஒவ்வொன்றையும் மஹா பெரியவாளே வகுத்துக் கொடுத்ததாக பல அபூர்வ சம்பவங்கள் சாட்சியாக விளங்குகின்றன.

நடு இரவில் தன் இல்லத்திலிருந்து புறப்பட்டு வழி நெடுக ஈஸ்வர நாமாக்களை விடாது பாடிக்கொண்டு சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்திலிருந்த ஸ்ரீமடத்திற்கு பாதயாத்திரை செய்து தரிசிப்பதை ‘பிரதோஷம் மாமா’ தனது ஆனந்த அனுபவமாகவே கொண்டிருந்தார்.

பிரதோஷம் மாமா நடுநிசியில் பயணம் செய்யும்போது சில பக்தர்களும் அவருடன் வருவது வழக்கம். அதுபோல அன்றொரு நாள் இரவு தரிசன யாத்திரையில் திருவரத ஓதுவாரும் கலந்து கொண்டார். இதனால் வழியெங்கும் தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கத் தொடங்கியது. ஓதுவார் உரக்கப் பாட உடன் சென்றவர்களும் இதே போல் குரலெடுத்துப் பாடினார்கள்.

எப்போதும் ஓங்கி ஒலிக்கும் ’அருணாசல சிவ’ அப்போது தடைபட்டது போல் பிரதோஷம் மாமா உணர்ந்தார். ரமண மஹரிஷியின் மீது இவருக்கு இருந்த அபரிமித பக்தியினால், திருவாசகத்திற்குப் பதிலாக ‘அருணாசல சிவ’ என்று சொல்லலாமே என்று உடன் வந்தவர்களிடம் சொல்லிப் பார்த்தார். நமச்சிவாயமும், அருணாசல சிவமும் வேறல்ல என்று ஏன் இவருக்குப் புரியவில்லை? இதனால் மடத்தில் வீற்றிருந்த சர்வேஸ்வரருக்கு இவருக்கு பதில் சொல்லவேண்டும் என்ற தீர்மானம் ஏற்பட்டு விட்டது. தரிசன யாத்திரை முடிந்து, அவருடன் வந்தவர்கள் மஹா பெரியவாளை தரிசித்து மகிழ்ந்தார்கள். ஓதுவார் ஸ்ரீமடத்திலிருந்து புறப்பட்டு போய்விட்டார்.
அப்போது மஹான் தமது திருவிளையாடல் நாடகத்தை ஆரம்பித்தார்.

“ஓதுவார் எங்கே?” என்று மஹான் கேட்டார். அவர் புறப்பட்டுப் போய்விட்டார் என்று மஹானுக்குத் தெரியாதா என்ன? பிரதோஷ மாமாவுக்கு விளங்கவில்லை – ஏன் மஹான் ஓதுவாரை அழைக்கிறார் என்று…

மஹான் பிரதோஷ மாமாவை அழைத்துக் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். அது தன் கைக்கு வந்தவுடன் மெய் சிலிர்த்ததை உணர்ந்தார் பிரதோஷ மாமா. அருணாசலமா, நமச்சிவாயமா என்ற இவரது மன சஞ்சலத்தை அனைத்தும் நானே என்று சொல்லாமல் சொல்லித் தீர்த்து வைத்து விட்டது போலிருந்தது.

அவரது சிந்தனை வேறு பக்கம் திரும்பக் கூடாது என்று நினைத்த மஹான், “இந்தப் புத்தகம் எந்த வருடம் வெளியானதுன்னு ஓதுவாரைக் கேட்டுத் தெரிஞ்சுண்டு வா” என்றார்.

இது போன்ற வேலையை மஹான் தன்னிடம் சொன்னதே இல்லையே, இந்த விஷயம் இவருக்குத் தெரியாதா? இந்த வேலைக்கு மடத்து ஊழியர் போதாதா? இதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று நினைத்த பிரதோஷம் மாமா இதற்காக சென்னைக்குச் செல்ல வேண்டிய நிலை. காஞ்சியை விட்டு எப்போதும் அகலாதவருக்கு இப்படி ஒரு சோதனையா?

மஹானின் மனதை யார் அறிவார்? சென்னை சென்று ஓதுவாரை பார்த்துத் தகவல் அறியச் சென்றவருக்கு அங்கே ஓதுவாரைத் தேடவும் ஒரு துணை தேவைப்பட்டது.
இதற்காக மஹானிடம் பரமபக்தி கொண்டிருந்த ஒரு வைணவ அன்பரைத் தொடர்பு கொண்டு ஒத்தாசை செய்ய அழைக்கலாம் என்று நினைத்தார். போன் வசதி இல்லாத காலம் அது. இதனால் பணி ஓய்வு பெற்றபின், பிரதோஷ மாமா தனது அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம்.

அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் இவரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஒரு அன்பர் இவரை வரவேற்று மூச்சு விடாமல் பேசத் தொடங்கினார்.
“ரொம்ப ஆச்சர்யம். நீங்க எப்படி இங்கே வந்தீங்க? உங்களுக்கு நாங்களே கடிதம் எழுதி வரவழைக்கலாமுன்னு நினைச்சோம்… ஏன்னா, உங்களுக்கு அரியர்ஸ் பணம் ஆயிரத்துக்கு மேலே வந்திருக்கு… ஆபீஸிலே இன்னிக்கு நீங்க வரலேன்னா பணத்தைத் திருப்பி அனுப்பச் சொல்லி உத்தரவு. என்ன செய்யறதுன்னே தெரியாம தவிச்சுண்டு இருந்தேன்…. பின்னாலே பணத்தை வாங்கறது மிகவும் சிரமமா இருக்கும்”.

பிரதோஷம் மாமா உண்மையில் திணறித்தான் போனார். அந்தக் கால கட்டத்தில் இந்தப் பணம் எவ்வளவு பெரியது? இதைத் தன்னிடம் சேர்க்க திருவாசக புத்தகத்தின் மூலம் மஹான் திருவிளையாடல் நடத்தியிருக்கிறார் என்றே தோன்றியது.

பிரதோஷம் மாமா, புத்தகம் எப்போது வெளியிடப்பட்டது என்பதைப் பலரிடம் விசாரித்துக் கொண்டு காஞ்சி வந்து, மஹானிடம் விவரங்களைச் சொன்னார். அதை மஹான் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. தன்னை எதற்காக சென்னைக்கு அனுப்பினார் என்று மஹானுக்குத் தெரியாதா என்ன?

திருவாசகம் புத்தகத்தை அவரிடம் கொடுத்து “இதைப் படி” என்றார் மஹான்.

முதலில் எதைப் படிப்பது என்று இவர் தடுமாற “முதல்லேயிருந்து சில பக்கங்களையாவது படி” என்றார்.

அவர் புத்தகத்தைப் பிரித்தபோதே பிரமிப்பு….

“நமச்சிவாய வாழ்க” என்று தொடங்கும் சிவபுராணம் தான் முதலில் தென்பட்டது.

இப்படி பிரதோஷ மாமாவை நாயன்மாராக அங்கீகரித்தருளி “தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை” என்று பக்தருக்குள்ளே ஐக்கியமாகி ஒவ்வொரு பக்தி நெறிக்கும் வழிகாட்டுபவராக ஸ்ரீமஹா பெரியவா பிரதோஷம் மாமாவுக்கு அருள் புரிந்தார்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

Read more: http://periva.proboards.com/thread/6543/pradosham-maamaa-venkatasaamys-book#ixzz2uPz4MF6U

natarajan