“நாம இப்போ எங்கே இருக்கோம் ?” ….

நாம எங்க இருக்கோம், இது மடம் மாதிரி தெரியறது!

June 5, 2013

அவர்கள் ஐந்தாறு பேர். திருமண். வைணவ கறை வேஷ்டி. எல்லோரும் ‘வந்தனம்’ சொன்னர், ஒருவரை தவிர. அவர் ‘பரப்ப்ரமமாக’ இருந்தார். வயதானவர். ‘இவருக்கு எதுவுமே ஞாபகம் இல்லை. எல்லா டாக்டரையும் பார்த்தாச்சு. இப்போ, குணசீலம், சோளிங்கர், வரதர்,.. கோவில் எல்லாம் போயிட்டு வரோம். பெரியவாதான் குணப்படுத்தணம்’. ‘விஷ்ணு சஹஸ்ர நாம பாராயண க்ரமத்திலிரிந்து ‘அச்சுதானந்த கோவிந்த நமோ சரண, பேஷஜாத் நஸ்யந்தி சகலா ரோக, சத்யம் சத்யம் வதாம்யஹம்‘ என்ற ஸ்லோகத்தை 108 முறை சொல்லச் சொன்னார். அடுத்தது அவர் சொன்னதுதான் அனைவரயும் அதிர்ச்சி அடைய வைத்தது. பயில்வான் போன்ற ஒருவரை கூப்பிட்டு, ஓங்கி ஒரு குட்டு அக்கிழவரின் தலையில் குட்டச் சொன்னார். அடுத்த நொடி அப்பெரியவர் ‘ஏன்டா ரகு, நாம எங்க இருக்கோம், இது மடம் மாதிரி தெரியறது’ என்றார். எல்லோருக்கும் கண்களில் குளம் கட்டியது. ‘பெரியவா காப்பாத்திட்டேள்’. அவர் எப்போதும் போல் ‘நான் என்ன பண்ணினேன், நீங்க திவ்ய தேசம் போயிட்டு வந்திருக்கேள். அந்த பெருமாள் தான் காப்பாத்தி இருக்கார்’ என்றார்.

Sri KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM

source::::periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4505/enge-irukkom-madam-mathari-therikirathu#ixzz2VvOJxDTb

“எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம் ” !!!!

எலுமிச்சை மாலையைக் கொண்டு என்ன செய்யலாம்? – மகா பெரியவா காட்டிய வழி!


(குறிப்பு: நீங்கள் மேலே காணும் எலுமிச்சை மாலையுடன் கூடிய பெரியவாளுடைய இந்த உயிரோவியத்தை தீட்டியவர் நம்முடைய மதிப்பிற்குரிய Forum Moderator திரு anusham163 அவர்கள்)

சமீபத்தில் ஒரு பத்திரிகையில், ‘கோயிலில் பிரசாதமாக கொடுக்கும் எலுமிச்சம் பழ மாலையை என்ன செய்வது? வீட்டில் உபயோகிக்கலாமா?’ என்ற கேள்விக்கு, ‘கோயிலில் பிரசாதமாக கொடுக்கும் எலுமிச்சம் பழ மாலையை பூஜையறையில் வைக்க வேண்டும். பழங்கள் கெட்டுவிட்டால், ஏதாவது மரத்தினடியிலோ ஆறு, குளம், கிணறு போன்ற நீர்நிலைகளிலோ போட்டுவிட வேண்டும். ஜூஸ் செய்தோ, ஊறுகாய் செய்தோ சாப்பிடக்கூடாது’ என்று பதிலளித்திருக்கிறார்.

இந்தப் பதிலை படித்ததும், எனக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

என் தந்தைக்கு, ஸ்ரீகாஞ்சி மஹா ஸ்வாமிகள்தான் குலதெய்வமே. அவர் எங்கு முகாமிட்டிருந்தாலும், மாதம் ஒருமுறையாவது தரிசிக்காமல் இருக்கமாட்டார். (1952ஆம் ஆண்டு ‘வியாஸ பூஜை’ ஆடுதுறைக்கு அருகிலுள்ள சாத்தனூர் என்ற கிராமத்தில் (‘திருமூலர்’ சாத்தனூர் என்பார்கள்) எங்கள் கிரஹத்தில்தான் நடைபெற்றது!

அநேக தடவைகள் எங்கள் கிராமத்தில் மகா பெரியவர் முகாமிட்டிருந்தாலும், அந்த முறை மூன்று மாதங்கள் இங்கு தங்கியிருந்தார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வழக்கம்போல் பெரியவாளை தரிசனம் செய்ய நினைத்தபோது, அவர் ஆந்திர மாநிலம் ‘ரேப்பள்ளி’யில் முகாமிட்டிருந்தார்.

‘ரேப்பள்ளி’க்கு நானும் என் தந்தையுடன் சென்று ஸ்ரீபெரியவரையும், ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் பூஜையையும் இரண்டு நாள் தங்கி தரிசனம் செய்தோம்.

மூன்றாவது நாள் என் தந்தை வந்தனம் செய்து, ‘அப்ப நான் உத்தரவு வாங்கிக்கொள்ளட்டுமா…” என்று பெரியவாளிடம் உத்தரவுக்காக பணிந்து நின்றார்.

உடன் அவர், “ஊருக்குத்தானே நேரே போகிறாய்…” என்றார். “ஆமாம்” என்று என் தந்தை கூறவும், தன் கழுத்திலிருந்த எலுமிச்சம் பழ மாலையை கழட்டி என் தந்தையிடம் கொடுத்து, இன்னும் ஒரு மாலையையும் கொடுத்து, “இதை எடுத்துண்டு போய் ஆத்துல ஊறுகாய் போட்டு, திருவிடைமருதூர் பாடசாலை குழந்தைகளுக்கு கொண்டு போய் கொடுத்துடறியா…” என்றார்.

என் தந்தை உடனே “பெரியவா உத்தரவு” என்றபடி மாலைகளை பெற்றுக்கொண்டு, சென்னையில் கூட தங்காமல் சாத்தனூர் வந்து ஊறுகாய் போட்டு, திருவிடைமருதூர் பாடசாலை குழந்தைகளுக்கு கொண்டு கொடுத்தார்! எலுமிச்சம் பழ மாலையைப் பார்க்கும் போதெல்லாம், பெரியவாளின் கருணை முகம்தான் பளிச்சிடும்!

– ஜி.நீலா, சென்னை

Source: தீபம் – கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்

http://www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4498/garland-lemons-periva-answers/#ixzz2VjbJcRag

“ஒரு குழந்தை மாதிரி மஹாபெரியவர்” !!!

A Divine experience of C.K. Gariyali  IAS …  with Mahaperiavar….story contributed by Prema Subramaniam in periva.proboards.com
Natarajan

காஞ்சி பரமாச்சார்யாரிடம் என்னைக் கவர்ந்திழுத்தது, தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் தொடர்ந்து ஒரு குழந்தையைப் போன்ற மனோபாவத்துடன் அவர் செயல்படும் குணாதிசயம்தான். அவரது கிருபையாலும், வசீகர சக்தியாலும் இயற்கையாகவே அவர்முன் நான் ஈர்க்கப்பட்டேன். ஒவ்வொரு முறை காஞ்சியைக் கடக்கும்போதும் அவரை தரிசிக்காமல் என்னால் போக முடியாது. கடவுளின் அருளால் அந்த மகானை பலமுறை தரிசிக்கும் பெரும்பேறு பெற்றேன்.

முதன்முறையாக நான் அவரைச் சந்திக்க நேர்ந்தபோது அவர் முற்றத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். மக்கள் வரிசையில் நின்று ஒருவர் பின் ஒருவராக அவரை தரிசிக்கச் சென்று கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் அதிகக் கூட்டத்தினால் வரிசை அசையாமல் நின்றுவிட்டது. வரிசையில் தங்கிவிட்ட என் உள்மன ஆவலைப் புரிந்து கொண்ட பெரியவர், உடனே என்னை உட்காரும்படி தன் கண்களால் சாடை செய்தார். சந்நிதியில் அமர்ந்து அவரது திருமுகத்தின் பேரொளியைத் தரிசித்தேன். அது ஒரு உன்னதமான தருணம். உடன் அவர் ஒரு புத்தகத்தை எடுத்தார். (அது தென்னிந்தியக் கோவில்களின் கட்டிட நிர்மாணக் கலை பற்றி டாக்டர் இரா. நாகசாமி எழுதிய நூல்) கனத்த மூக்குக் கண்ணாடி அணிந்து மகிழ்ச்சியுடன் அந்த புத்தகத்தைப் படித்தவாறே வெகுநேரம் இருந்தார். திடீரென புத்தகத்திலிருந்து கவனத்தைத் திருப்பி தனது கண் அசைவால் எனக்கு வெளியே போக அனுமதி வழங்கினார். எனக்கு ஒரே ஆனந்தம். எவ்வளவு நேரம் அப்படிக் கழிந்தது என்பதை நான் அறியவில்லை. அன்று பகல் முழுவதும் என்னை அப்படியே இருக்க அனுமதி அளித்திருந்தாலும், நான் நகராமல் இருந்திருப்பேன்.

மீண்டும் நான் அவரை தரிசித்தது, என்னுடன் பணிபுரியும் சகாவின் குடும்பத்துடன் சென்றபோதுதான். என் சகாவின் மனைவி ஆறாத் துயரத்துடன் இருந்தார். மன அமைதி தேடி அவர்கள் காஞ்சிக்கு வந்திருந்தார்கள். இது ஒருவருக்கும் தெரியாது. வந்தவர்கள், பரமாச்சார்யாரின் முன்னால் சில நிமிடம் சிறு குழுவாக ஒரே சமயத்தில் உட்கார அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் தங்களுடன் பழம் முதலிய பொருள்களைக் கொண்டு வந்திருந்தனர். எனது சகாவின் மனைவி ஒரு பெட்டி நிறைய உலர்ந்த பழங்களைக் கொண்டு வந்திருந்தார். அந்தப் பெட்டி பல அறைகள் கொண்டதாகவும் ஒவ்வொரு அறையும் வெவ்வேறு உலர்ந்த பழங்கள் கொண்டதாகவும் இருந்தது. அத்தனையும் பரமாச்சார்யார் முன் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அவரது சீடர்களில் ஒருவர் அவற்றை அப்பால் எடுத்துச் செல்வார். பரமாச்சார்யார் எப்போதும் இதில் கவனம் செலுத்த மாட்டார். ஆனால் அன்று பெட்டியை அவர் முன்னால் இருந்து அகற்ற, ஒருவர் எடுத்தபோது ஒரு குழந்தையைப்போல அவர் அதைத் தடுத்தார். பெட்டியைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டார். பின் உடனே பெட்டி மூடியைத் திறக்கும்படி வற்புறுத்தினார். குனிந்து அதில் உள்ளவற்றைப் பார்க்க ஆரம்பித்தார். அவரது பார்வைக் குறைவினால் அவற்றில் இருந்த சிலவற்றை அவரால் அறிய முடியவில்லை. உடன் சீடர்களில் ஒருவர் அதிலிருந்த திராட்சை, பாதாம் பருப்பு, முந்திரி, அத்திப்பழம் முதலியவற்றைப் பற்றி அவரிடம் தெரிவித்தார்.

மகிழ்ந்து போன அவர், மாசற்ற ஒரு குழந்தையைப் போல, அனைவரும் அதிசயிக்கும்படியாக, அந்தப் பெட்டியுடனும் அதிலிருந்த பொருள்களுடனும் பதினைந்து நிமிடங்கள் விளையாடினார். அங்கு வந்திருந்த அனைவரும் இதை ஒரு அபூர்வ ஆன்மீக அனுபவமாக ரசித்துச் சிரித்தார்கள். பல ஆண்டுகளாகச் சிரித்து அறியாத சிரிப்பையே மறந்துபோன என் சகாவின் மனைவிகூடத் துயரத்தை மறந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். அவள் சமர்ப்பித்த பொருள்களைஅவர் விசேஷமாக நடத்திய பாங்கு, அவளைப் பிரத்தியேகமாக வாழ்த்தி ஆசி வழங்கியதாக அவள் உணர்ந்தாள். அவளது மனவேதனை துடைத்து எறியப்பட்டது என்பதை நான் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. அதன் பிறகு அவளுடைய வாழ்க்கையே வேறுவிதமாக மாறிவிட்டது.

ஒருமுறை இந்திய அரசு அதிகாரிகளுடன் சென்றேன். தென் ஆற்காடு மாவட்ட கலெக்டர் பணியை முடித்துவிட்டு பொதுநலத்துறையில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பரமாச்சார்யார் முன்னர் நாங்கள் அமர்ந்த உடனேயே அவர் ஒரு சிறு நடராஜர் படத்தை எனக்குக் கொடுத்தார். இதன் நோக்கம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான் என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்து கொள்ள விரும்பிச் சுற்றிலும் பார்த்தேன். பரமாச்சார்யாரின் ஒரு சீடர் முன்வந்து, நான் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில், சேவை புரிந்ததற்காக பரமாச்சார்யார் மகிழ்ச்சி அடைகிறார் என்று சொன்னார். நானும் டாக்டர் நாகசாமியும் பல ஆண்டுகள் ‘நடராஜர் திருவிழா’ நடத்துவதில் ஈடுபட்டிருந்ததைப் பரமாச்சார்யார் அறிந்திருக்கலாம் என்பதைப் பிறகுதான் நான் புரிந்து கொண்டேன். நெஞ்சம் நெகிழ்ந்து போனேன்.

Source: www.kamakoti.org      www.priva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4521/gariyali-kanchi-maha-periva/#ixzz2VgQtp3hr

501 Reasons Why Brian Lara was the Best !!!.. 6 June 1994..A Date To Remember !!!!

Cardiff, June 6 — Nineteen years ago to the day, Brian Lara authored one of the greatest moments in the annals of cricket. Edgbaston, June 6, 1994. If that doesn’t mean anything to you, you probably don’t qualify as a cricket nut.

In this part of the world, the cricketing slang Nelson (derived from the one eyed, one armed, one legged English Admiral Nelson) evokes a great deal of trepidation. It applies when a batsman or a team is on 111. Lara, of course, wasn’t one for superstitions.

Full Nelson

The Trinidadian started the day unbeaten on 111, after rain washed out the third day’s play and following a customary rest day on Sunday. By lunch he had already raced well past 250. Gladstone Small, his Warwickshire teammate, recalls the instant when Lara made his intentions clear. “We were sitting in the dressing room at lunch.me, Brian and Keith Piper (the wicket-keeper). He said, ‘I’m going for the record’. I asked, ‘What the 375?’. He said, ‘No. Hanif Mohammad’s 499’. I asked him ‘Are you serious? You’re still 250 runs away’. He said, ‘You watch me’,” recalled Small.

As a plethora of records fell by the wayside, the teammates began to take notice. By the time tea was taken, he was just 82 shy. “We then realised that Durham could walk away 30 minutes before the end of play, because the match was heading to a draw,” remembered Small.

Nick of time

As Lara reached 497, two runs shy of Mohammad’s 36-year-old record, the fact just dawned on him. John Morris, a part-timer who had hit a double ton for Durham, was bowling the over.

“The fourth ball of the over he bowled a bouncer that hit him on the head. The next ball, he hit a beautiful off-drive, and we declared the innings. If he hadn’t hit those runs, Durham would have walked off. As soon as he hit the boundary, skipper (Dermot Reeve) declared the innings,” said Small.

The legendary moment would have never arrived had it not been for a bit of luck early in his innings. Lara was bowled off a no-ball when he was on 12, but the decisive moment came on 18. “The form Lara was in that season was just unbelievable. I reckon he must’ve edged just 3 or 4 balls all season. For an attacking left-handed batsman that was incredible. But on 18, he nicked one and the Durham wicket-keeper Chris Scott dropped it. He said at the time, ‘I hope he doesn’t get a hundred’.”

A century, of course, was the least of his concern. The innings capped a memorable 50 days for Lara, who since he broke the Test world record with 375 against England in Antigua, went on a run of 7 hundreds in 8 first-class innings. Bradmanesque!

The other love

The season was also a defining one for Lara, his first in English cricket. Warwickshire won the treble, and he found his other great sporting passion – golf. “The Belfry Golf Course (which has hosted the prestigious Ryder Cup) is on the outskirts of Birmingham. At the time, Lara had never played golf. Brian was one of those guys where batting was the only thing he did left-handed.

He bowled right-handed, signed autographs right-handed, he even played golf right-handed. He had a twenty handicap, but he played so much golf that year. His great Trinidadian friend Dwight Yorkewas with Aston Villa (Birmingham based) at the time and two would always head to Belfry when they would get time off. Roger Twose, the New Zealander, was also in our team and he played lefty. His golf clubs were also left-handed. Brian borrowed his clubs, but he couldn’t play golf that well as a southpaw,” recalled Small.

A day after the match Lara headed to London to do the breakfast show circuit, many interviews were lined up and he spent a good part of the day there. In the night he went out partying to celebrate the momentous feat. The next day, Warwickshire were playing a domestic limited over match. “He was really tired, he could barely keep his eyes open.

He asked the skipper to be put on the boundary. That didn’t work out. He then asked to be put at slips. He just couldn’t keep his eyes open and he asked the umpire to go off the field. We were set a target of over 250. We lost a few early wickets, he somehow managed to get it all together, and went out to bat. He got 70-odd and we won. What a player!”

Indeed. What a player!!!!

 

source::::Hindustan Times.com

Just to take a break from IPL stories going round these days, a real  gentleman cricket story on a Cricket Hero !!!!

Natarajan

 

“திருக்குறள் படிக்க வேண்டாம் “…என்று மகாபெரியவர் சொன்னாரா என்ன !!!!

ஒரு பத்திரிக்கைக்காரன் என்கிற முறையில் பரமாச்சாரியார் பற்றி இரண்டு முக்கிய செய்திகளில் நான் பங்கு பெற நேர்ந்தது.

ஒன்று – நான் நிருபராக ஒரு மாலை பத்திரிக்கையில் பணிபுரிந்த போது . வயது இருபது தான் இருக்கும்.

அடுத்தது – assosiate editor ஆக வார இதழில் பணிபுரிந்தபோது !

அது 1962 என்று நினைக்கிறேன் . அன்று ஞாயிற்றுக்கிழமை . மாலை பத்திரிக்கைக்கு பரபரப்பாக ஏதாவது வேண்டுமே! அன்று நானும் நியூஸ் எடிட்டரும் என்னன்னவோ செய்தும் – பெரிய சேதி கிடைக்கவில்லை .

ஒரு மணி . எல்லாரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க , நான் தபாலில் வந்தவைகளை பிரித்து பார்த்துக்கொண்டிருந்தேன். மத சம்பந்தமான ஒரு இதழ் . பிரித்து பார்த்தேன். அதிர்ச்சி அடைந்தேன்.

‘திருக்குறளை படிக்க வேண்டாம்’ என்று பரமாச்சாரியர்கள் சொன்னதாக ஒரு செய்தி . அது மார்கழி மாதம்.

திருப்பாவையில் – பாவை நோன்பு கடைபிடிப்பது பற்றி ஆண்டாள் . ‘ நெய் உண்ணோம் . பால் உண்ணோம் ‘ என்று வரிசைப் படுத்துகிறார். அப்போது தீக்குறளை சென்றோதோம்’ என்று அந்தப்பாடலில் வருகிறது.

இதற்குப்பொருளாக – ‘திருக்குறளை படிக்கக்கூடாது ‘ என்று பரமாச்சாரியார் கூறியதாக அதில் இருந்தது !

தீக்குறளை சென்றோதோம் என்றால் – ஒருவரைப்பற்றி ‘ கோள் ‘ சொல்வது – புறம்கூறுவது செய்ய மாட்டோம் என்று தான் பொருள்.

திருப்பாவை வேதத்தின் சாரம் என்று சொல்லப்படுவது . ஒருவரைப்பற்றி பொல்லாங்கு – கோள் – சொல்வதை வேதம் மாபெரும் பாவம் , தவறு என்று கூறுகிறது. ஆண்டாள் அதைத்தான் கூறினார்.

பரமாச்சாரியார் இப்படி கூறியிருப்பாரா ? எங்கோ தவறு நடந்திருக்கிறது என்று நினைத்தவாறு – அந்தப்பகுதியை நியூஸ் எடிட்டர் பார்வைக்கு அனுப்பினேன் . பிறகு மறந்தேன்

அன்று மாலை பேப்பரை பார்த்து திடுக்கிட்டேன்.

‘திருக்குறளைப் படிக்காதே – காஞ்சி சங்கராச்சாரியார் உத்தரவு !” என்று வெளியிடப்பட்டிருந்தது. இது பரபரப்பு ஏற்படுத்திவிட்டது .தமிழ் அறிஞர்கள் திடுக்கிட்டார்கள் . பெரும் கண்டனம் தமிழ் அறிஞர்களிடம் இருந்து கிளம்பியது.

எனக்கு வருத்தமாக இருந்தது. நிச்சயம் ஏதோ பிழை என்று தோன்றியதை செய்தி ஆசிரியரிடம் கூற தவறி விட்டேனே என்று உள்ளம் உறுத்தியது.

மற்ற தமிழ் நாளிதழ்களிலும் அடுத்தடுத்து வந்த நாட்களில் தினமும் இந்த செய்தி பெரிதுபடுத்தபட்டது. தினம் ஒரு கண்டன அறிக்கை !

ஆச்சாரிய சுவாமிகளிடமிருந்து விளக்கம் வராது என்பது எனக்கு தெரியும் . யாராவது அவரிடம் போய் பேசினால் , தவறு திருத்தப்பட வாய்ப்பு ஏற்படும்.

அதற்குள் ‘ குமுதம் ‘ இதழில் இது குறித்து தலையங்கம் எழுதப்பட்டு விட்டது. தலைப்பு –
‘யானைக்கும் அடி சறுக்கும்?’

குமுதம் தலையங்கம் அக்காலத்தில் மிகவும் விறுவிறுப்புடன் இருக்கும் . சுடச்சுட விஷயங்களைத் தொடுவார் எஸ்.ஏ.பி.

இந்த தலையங்கம் பலன் தந்தது . திருமதி சௌந்திரா கைலாசம் , காஞ்சி பெரியாரை தரிசிக்க சென்றார்.அப்போது இந்த விஷயத்தை மெதுவாக எழுப்பினார். பெரியவர் கூறியது தவறாக வந்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார்.

காஞ்சி பெரியவர் கூறிய விளக்கம் அடுத்த குமுதம் இதழில் செய்தியாக திருமதி கைலாசம் எழுதினார் :

“மார்கழி மாதம் கடவுளைப்பற்றிய நினைவுகளுக்கு மட்டுமே செலுத்த வேண்டிய மாதம் .
தீக்குறள் மட்டுமல்ல – திருக்குறள் போன்ற மிக உயர்ந்த நல்ல விஷயங்களைக்கூட கூறாமல் – கடவுள் நாமத்தையே சொல்ல வேண்டும் ”

பெரியவர் இப்படி மார்கழி மாதத்தில் இறைவனை மட்டுமே நினைக்க வேண்டியதை வலியுறுத்த சொல்லி இருக்கிறார் !

இந்த விளக்கம் வந்தவுடன் அமைதி ஏற்பட்டுவிட்டது . சௌந்திரா கைலாசம் அவர்களுக்கு என் மனம் நன்றி கூறியது.

அடுத்த நிகழ்ச்சி – 1987 ம் ஆண்டு .

ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி மடத்தை விட்டு வெளியேறியதை அடுத்து ஏற்பட்ட பரபரப்பு நிகழ்ச்சி.

பல்வேறு அவதூறான செய்திகள் வந்து கொண்டிருந்தன. எனது இதழுக்காக உண்மைகளை சேகரித்தேன்.

காஞ்சிபுரம் சென்று ஸ்ரீமடத்திலும் மெல்ல தகவல் சேகரித்தேன். மகா பெரியவர் – ஓரிடத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். இந்த விஷயமாக மகா பெரியவரை பேட்டி எடுத்தால் என்ன என்றே தோன்றியது. 1962 நிகழ்ச்சியில் – ‘ அவசரப்பட்டதுபோல’ இப்போது கூடாது . எதிரே காட்சி தருகிறாரே … கேட்கலாமே என்று மனசாட்சி கூறியது . பணிந்தேன்.

சுவாமிகளிடம் நான் பேச முற்பட்ட போது சுற்றி இருந்த வயதான பக்தர்கள் தடுத்தார்கள். ‘ பெரியவரிடம் இதைப்பற்றி எல்லாம் கேட்பதா ? அவரை பேட்டி எடுப்பதா ‘ என்று சினந்து என்னை வெளியேறச் சொன்னார்கள்.

“என்ன …. என்ன …. அவன் என்ன கேட்கிறான் ?” என்று சுவாமிகள் நாற்புறமும் திரும்பி
விசாரித்தும் – அதற்கு பக்தர்கள் பதில் கூறாமல் என்னை விரட்டுவதிலேயே குறியாக இருந்தார்கள்.

நான் ஸ்ரீமடத்தைவிட்டு வெளியே வந்து , டிபன் சாப்பிட போகலாம் என்று நினைத்தேன். அதற்குள் ஒரு வயதான பக்தர் ஓடிவந்தார். ” பெரியவா கூப்பிடுகிறார்” என்றார். நான் ஓடினேன்.

“என்ன சந்தேகம் ….. கேளு ” என்று மெதுவான குரலில் பரமச்சாரியார் கூறினார். நான் கேள்விகளை பணிவுடன் கேட்டேன்.

“பரமாச்சாரியாரிடம் கோபித்துக் கொண்டே ஜெயேந்திரர் வெளியேறினாரா ? என்று கேட்டேன் . பக்தர்கள் முகத்தில் கோபம் பளிச்சிட்டது.

‘ அப்படி இல்லை . அவருக்கு என் மீது ரொம்ப அன்பு . எனக்கு கனகாபிஷேகம் செய்து பார்த்தரே ” என்று பரமாச்சாரியார் கூறும் போது ஜெயேந்திரர் மீது அவருக்கு இருந்த அன்பு வெளிப்பட்டது.

” ஸ்ரீ மடத்திலிருந்து பணம் எடுத்துச் சென்றாரா ?” என்று கேட்க நேர்ந்தது.

பரமாச்சாரியார் மறுத்து தலையாட்டினார். ” அவருக்கு எதற்கு பணம் ? அவர் நினைத்தால் பணம் கொட்டும் . இந்த மடம் ஏழை மடமாக இருந்தது. அதை மாற்றி – பல நல்ல காரியங்களை செய்பவர் அவர் ” – சுவாமிகள் கூறினார்.

வெளியே சொல்லப்பட்ட வதந்திகளை நான் கேட்க நேர்ந்தது.

“இம் மாதிரி நிகழ்ச்சி ஸ்ரீ மடம் பற்றி மக்கள் என்னவாறு நினைக்க செய்யும் “….

“மக்கள் மிக உயர்ந்தவர்கள் . அவர்கள் கருத்து எதுவானாலும் அது முக்கியம் . அதை அலட்சியப்படுத்தமுடியுமா ?” – பெரியவர் கூறினார். இன்னும் பல கேள்விகள் எழுப்பினேன் !

பத்திரிக்கையில் இந்த பேட்டி பரபரப்பாக வந்தது. ஜெயேந்திரர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. அடுத்து சில நாட்களில் ஜெயேந்திரர் திரும்பினார்.

பரமாச்சாரியாரிடம் சங்கடமான கேள்விகள் கேட்டதற்கு ஒரு சில பக்தர்கள் என்னை திட்டினாலும் , ஜெயேந்திரர் பற்றி பரமாச்சாரியார் அந்த பேட்டியில் உயர்வாக கூறியிருந்தது – தமிழகம் முழுவதும் இருந்த பக்தர்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் அளித்தது.

source::::Shri.Ramanathan in periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4472/#ixzz2VQPkrU6M

“அர்த்தமுள்ள இந்து மதம் ” அரும்பி மலர்ந்த கதை !!!!

 

கண்ணதாசனை மாற்றிய காஞ்சிப் பெரியவர்

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.

காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார்.

தேவரின் கவலையை உணர்ந்த பெரியவர், ‘சரி, கவலைப்படாதே. இந்த விபூதியைக் கொண்டுபோய், அவன் நெற்றியில் இட்டு, வாயிலும் சிறிதளவு போடு, மீதி இருப்பதை அவன் தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’ என்று தன் திருக்கரங்களால் விபூதி எடுத்து மடித்துத் தர, தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரை மறுத்துப் பேசவும் துணிவின்றி தயங்க, மீண்டும் பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.

தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன் நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும் சனாதன தர்மத்தையும் நாக்கில் நரம்பில்லாது போல் மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது. விபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த கூட்டத்தின் மேடையில் படுபயங்கரமாகப் பேசி மடாதிபதிகளை இழிவுபடுத்திப் பேசியிருந்தார். எனவே அவரிடம் போய் இந்த விபூதியை எப்படிக் கொடுப்பது என்பதுதான் தேவரின் பெரியத் தயக்கமாயிருந்தது.

ஆனால் முக்காலமுணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல் கொண்டுபோய் பூசு. சூரியனை சில சமயம் மேகம் மறைப்பது போல் நாத்திகமேகம் இதுவரை அவனை மறைத்திருந்தது. இனி அவன் சூரியனாகத் திகழ்வான். அவன் எப்பேர்ப்பட்ட பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா? கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல் திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத் தாத்தா. ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில் திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் தகப்பனார். இப்ப புரியறதா?’ என திருவாய் மலர்ந்தருளினார்.

தேவர் மனந்தெளிந்தவராய் பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச் சென்றார். நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில் விபூதியைப் பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும் இட்டு, மீதியை தலையணையின் கீழ் வைத்துவிட்டு வீடு திரும்பினார். அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன் நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன சொல்வாரோ என்றே நினைத்தது.

மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண் விழித்திருந்தார். தேவரைப் பார்த்தவுடன், ‘வாங்க, எத்தனை நாளா இப்படி படுக்கையில் இருக்கேன். கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக் கொடுங்களேன். என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார். நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ, தேவர் தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட கண்ணதாசன் ‘இதென்ன விபூதி?’ என்று தேவரை ஏறிட்டுப் பார்க்க, வேறு வழியின்றி வந்தது வரட்டுமென தேவர், தான் பெரியவரைப் பார்த்ததையும், பெரியவர் ஆசீர்வாதம் செய்து விபூதி கொடுத்ததையும் சொல்ல, கண்ணதாசனின் விழிகளில் அருவியெனக் கொட்டியது கண்ணீர். திகைத்து நின்ற தேவரின் செவிகளில் தேனாகப் பாயந்தது கண்ணதாசனின் வார்த்தைகள், ‘எனக்கா? என்னிடமா இவ்வளவு கருணை? போனவாரம்தான் அவரை, ஐயோ’ என வாய்விட்டுப் புலம்பி அழுததோடு, தேவரிடம் ஒரு வேண்டுகோளையும் சமர்ப்பித்தார். ‘எனக்கு உடல்நலமாகி மருத்துவமனையிலிருந்து வெளியேறும் சமயம் நான் வீட்டிற்குச் செல்லமாட்டேன். இந்தப் பாவியிடம் கருணைவைத்த அந்த மகானிடம் முதலில் என்னை தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்’ என மனமுருகி வேண்டினார்.

கண்ணதாசன் வேண்டியபடியே அந்த நல்ல சந்திப்பும், பாவமன்னிப்பும் நடந்தது. மாறியது மனம், நன்றியில் ஊறியது தினம், வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை. அக்கவிதையை எடுத்துக் கொண்டு, பெரியவரை நேரில் கண்டு வணங்கி, கவிதையைச் சமர்ப்பித்தார், கண்ணதாசன். அக்கவிதை இதோ :

பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும் முழுமூர்த்தம்
கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட தெய்வம்
எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென
தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!

கவிதை வரிகளைக் கண்ட பெரியவர், கண்ணதாசனைக் கனிவோடு நோக்கி, ‘அனந்த கோடி அற்புத லீலா சாகித்ய மாயமானுஷாய நமோ நமஹ, அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி மகானுக்கல்லவா இது பொருந்தும்’ என்று அருளாசிக் கூறி, ‘அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் நிர்மலப் பொருள் ஞானசூரியனாம், மதத்தின் பெருமையை எழுது’ என்று திருவாய் மலர்ந்தருள, அக்கணமே கண்ணதாசனின் மனதில் “அர்த்தமுள்ள இந்துமதம்” அழகாய் அரும்பி பலநாள் உழைப்பில் இதழ்விரித்து மணம் வீசியது.

பெரியவா பாதம் சரணம்!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4496/kannadasans-change-heart/#ixzz2VKagcOJg

Humour In Politics !!!!

During the 1920s and 1930 there was a very controversial politician in Britain called Johnston. Once another notable politician was asked what was the difference between a tragedy and a calamity. The reply was: If Johnston were to be drowned in the Thames, that would be a tragedy. But if he were to come out alive, that would be a calamity.

Once Johnston made an unpleasant statement about the government. The entire media was up against him and for a full week there were devastating attacks on him but he did not respond. A journalist asked him about this and Johnston’s reply was: Just imagine the amount of free publicity I got all last week!

xxxxxx

This humorous touch was not missing in India. In 1951, Rajendra Prasad outwitted Nehru and got himself elected the first President of the Republic though Nehru’s preference was for Rajaji, the Governor-General. Five years later, Nehru preferred Radhakrishnan as President but Rajen Babu again got the better of Nehru and was elected President. Rajen Babu was one of the most selfless freedom fighters and highly respected by Congressmen. After Independence, attitudes started changing, resulting in even a person like him manoeuvring to stay on as President for a second term. The then Editor of Deccan Herald, Pothan Joseph, wrote in his daily column, “Over a cup of tea”: “Rajen Babu was sitting in his presidential suite, eagerly waiting to give his reluctant consent to continue as President.” Readers had a good laugh but a badly hurt Rajen Babu wrote a nasty letter to the Editor.

xxxxxx

Atal Bihari Vajpayee was another politician who regaled audiences with his humorous remarks. During an election meeting in Gujarat, Prime Minister Indira Gandhi told the gathering that she was a daughter of Uttar Pradesh and daughter-in-law of Gujarat and was seeking votes on that basis. Vajpayee later said Mrs. Gandhi had forgotten to say that she was also the mother-in-law of Italy. The audience had a hearty laugh and one journalist later wrote that this humorous remark of Vajpayee had brought the BJP a lot of votes.

source::::G.Dwarakanath in The Hindu…English Daily

Natarajan

“இப்போ போட்டோ எடுத்துக்கோ ” !!!….சொன்னார் மகாபெரியவர் !!!

மூலம் : மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் – ஐந்தாம் பாகம்
நினைவு கூர்ந்தவர் : எஸ். சீதாராமன், சென்னை – 28.

புகைப்படம் எடுப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு.

பெரியவாள் முன்னிலையில், slide viewer –ல் ஸ்லைடுகளைப் போட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தேன். அது, ஸ்லைடில் உள்ள படங்களை நான்கு மடங்கு பெரிதாகக் காட்டும். படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவாள், “இதில் ஸ்லைடு வைக்குமிடத்தில் நெகடிவ் பிலிமைப் போட்டால், நன்றாகத் தெரியுமா?” என்று கேட்டார்.

(பெரியவாளுக்குப் புகைப்படக் கலையின் ஒவ்வொரு நுட்பமும் தெரியும். ஆனால், தனக்குத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்பதும் எனக்குத் தெரியும்! ஆனால், என்னுடைய அக்ஞானம் என்னை விட்டுப் போய்விடுமா என்ன?)

”நெகடிவ் போட்டால், திரைப்படத்தில், கறுப்பு வெள்ளையாகவும், வெள்ளை கறுப்பாகவும் தெரியும்..”

பெரியவாள் உடனே, “அதுதான் எனக்கு வேணும்.. நரைத்துப் போன என் தலைமுடி, கறுப்பாகத் தெரியும்! நான் இன்னும் இளைமையாக இருப்பேனோல்லியோ…”

அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அட்டகாசமாகச் சிரித்து மகிழ்ந்தார்கள்.

பெரியவாளுடைய நகைச்சுவை உணர்வு, எவரெஸ்டுக்கு மேலே பத்து அங்குலம்!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

***********

வானகரத்தில் ஒரு சவுக்குத் தோப்பில் உட்கார்ந்திருந்தார் பெரியவா. முன்னர் எடுத்திருந்த புகைப்பட ஆல்பத்தைக் கொடுத்தேன். அப்போது, பல்வேறு காரணங்களால் புகைப்படங்களில் குறைகள் ஏற்பட்டிருந்தன.

இந்தத் தோப்பில் எவ்விதக் குறைகளுமில்லாமல் புகைப்படம் எடுக்க முடியும் என்பது என்னுடைய துணிபு.

பெரியவா, ஒரு சிஷ்யரைக் கூப்பிட்டு, ஒரு தாழங்குடை கொண்டுவரச் சொல்லி, அதைத் தன் தலைக்கு மேல் பிடிக்கச் சொன்னார்.

“இப்போ போட்டோ எடுத்துக்கோ…”

அப்போது நான் எடுத்த புகைப்படம் மிக அருமையாக வந்திருந்தது. (பின்னால் கல்கி தீபாவளி மலர் ஒன்றில் ஸ்ரீருத்ர வாக்கியமான, ‘நமோ வன்யாய ச கக்ஷ்யாய ச’ என்ற விளக்கத்துடன் முகப்புப் படமாக வெளியாயிற்று).

பெரியவாள் தாழங்குடையைப் பிடிக்கச் சொன்னதற்கும் காரணம் இருந்தது. மரங்கள் வழியே வந்த ஒளி, அவர்கள் மேல் திட்டுத் திட்டாக விழுந்து கொண்டிருந்தது. அந்த நிலையில் படம் எடுத்தால் நன்றாக வராது என்பதால், அந்த ஷாட் நன்றாக அமைய வேண்டும் என்பதற்கான சூழ்நிலையை உண்டாக்கிக் கொடுத்தார்கள்.

மெய்ப் படங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள் அவர்கள். நிழற் படங்களின் நுட்பங்களை எந்தக் குருகுலத்தில் கற்றுத் தெளிந்தார்கள்?
ஆயிரம் படம் படைத்த ஆதிசேஷ்னே அறிவார்!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

source::::periva.proboards.com

Natarajan
Read more: http://periva.proboards.com/thread/4494/maha-periyavaa-photographer/#ixzz2VFnPJvMb

“ஞான சூர்யனக்கு முன் சந்தேகப் பனி நிற்க முடியுமா ” !!!

எனக்கு விபரம் தெரிந்த நாள்களிலிருந்து ஒரு சந்தேகம் இருந்து வந்தது. வாழ்க்கையில் நாம் எத்தனையோ பாவ-புண்ணியச் செயல்களைச் செய்கிறோம். உடலை உகுத்தபின் மேலுலகம் சென்று பாவ-புண்ணியத்துக்கேற்ப சொர்க்கம் – நரகம் முதலியவற்றில் இன்ப-துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுவதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். பிறகு, (வீடு பேறு அடையாத வரையில்) அடுத்த பிறவியில், முன் பிறவிகளில் செய்த பாவ – புண்ணிய மூட்டைகளுடன் பிறக்கிறோம் என்றும் சொல்கிறார்கள்.அப்படிப் பார்த்தால், ஒரே காரியத்துக்காக இரண்டு தடவை தண்டனை அல்லது பரிசு பெறுகிறோம் என்றாகிறது.

இப்போது நடைமுறையிலிருக்கும் நமது சட்டங்களிலேயே கூட, ‘ஒருவன், ஒரு குற்றத்துக்காக இரண்டு தடவை தண்டனை அனுபவிக்கக்கூடாது’ என்ற நியாயமான விதி இருக்கும்போது, நம்முடைய முன்னோர்கள், இப்படி (மேலே நரகவாசம், கீழே இழிபிறப்பு என்று) இரண்டு தடவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று எழுதி வைத்திருப்பார்களா? (புண்ணிய பலனும் இரண்டு தடவைதான் – மேலே சொர்க்கம்; கீழே மறுபிறவியில் செழுமையான பரம்பரையில் பிறப்பு.) இது பொருத்தமாக இல்லை என்று எனக்குச் சந்தேகம்.

பல பண்டிதர்களைக் கேட்டேன். ஏதோ சமாதானம் சொன்னார்கள். என் மனம் ஏற்கவில்லை.

ஒருநாள், பெரியவாள் அருளுரையின் போது கூறினார்கள் :

“தண்ணீரின் தன்மை நமக்கெல்லாம் தெரியும். அதை அடுப்பில் வைத்து சூடு படுத்தினால் வெந்நீர் ஆகிறது. ஆனால், அதன் திரவத்தன்மை மறைந்து விடுவதில்லை. அதேபோல், ரெப்ரிஜரேட்டரில் கொஞ்ச நேரம் வைத்தால், ஜில்லென்று ஆகிறது. அப்படியும் அதன் திரவத்தன்மை போவதில்லை.
ஆனால், வெப்பம் அதிகமாக அதிகமாக, நீர், ஆவியாகப் போய்விடுகிறது, குளிர்ச்சி, ஓர் அளவுக்கு மேல் சென்றதும், தண்ணீர் ஐஸ்கட்டியாகிவிடுகிறது.

அதுபோல்தான் நாம் செய்யும் பாவமும் புண்ணியமும்! இவை இரண்டும், கட்டுப் பாடான ஓர் அளவில் இருக்கும்போது, நம்முடைய அடுத்த பிறவிக்கு வந்து சேர்கின்றன. அதை நாம் அனுபவிக்கிறோம்.. சுக-துக்கம் என்பதாக.ஆனால் அவை இரண்டும் – உஷ்ணமும் குளிர்ச்சியும் – ஓர் அளவைத் தாண்டியதும், அதிகமாக இருக்கும் பகுதியை, மேலே சொர்க்கம் – நரகம் என்று அனுபவித்துவிட்டு, மீதி மூட்டையுடன் பூமிக்கு வந்து அனுபவிக்கிறோம்.

மோட்சத்தைத் தவிர, மற்ற எல்லாவற்றிற்கும், சொர்க்கவாசம், நரகவாசம் – கால எல்லை உண்டு. ‘க்ஷீணே புண்யே மர்த்ய லோகம் விசந்தி.’ செய்த புண்ணியத்தை மேல் உலகங்களில் சௌக்கியமாக அனுபவித்துத் தீர்த்துவிட்டால், மறுபடியும் இங்கே வரவேண்டியதுதான். நரகவாசமும் அப்படித்தான். பாவச்சுமை குறைந்துவிட்டால், அங்கிருந்து வெளியே வரலாம். இங்கே வந்து, ஓர் அளவுக்குள் இருக்கும் மீதிப்பாவத்தை, எவ்வெப்படியோ பிறந்து, கஷ்டஜீவனம் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால்தான், தர்ம கார்யங்களையே செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள வேணும் என்று சாஸ்திரக்காரர்கள் சொல்லியிருக்கிறார்கள்…”

ஞான சூரியனுக்கு முன், சந்தேகப் பனி எப்படி நிற்க முடியும்?

பெரியவாளுடைய இந்தச் சொற்பொழிவை நான் தற்செயலாகத்தான் கேட்க நேரிட்டது! அது யார் செய்த புண்ணியமோ!!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

மூலம் : மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் – ஐந்தாம் பாகம்
நினைவு கூர்ந்தவர் : எஸ்.சீதாராமன், சென்னை – 28.

source::::periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4453/doubt-clarified-maha-periyavaas-lecture/#ixzz2V9Z0kJS0

 

“எங்கேயும் போகலே பாட்டி …இங்கேதான் இருக்கேன் “

இடம்: ரிஷிவந்தியம் என்ற பெயரில் தமிழகத்திலுள்ள சில கிராமங்களில் தஞ்சை மாவட்ட ரிஷிவந்தியம். அக்கிராம எல்லையில் தனித்து உள்ள ஒரு பழைய வீடு.
காலம்:1930-களீல் ஒரு வைகறை வேளைக்குச் சிறிது முன்னர்.

“எங்கே அவன்? எங்கே அவன்?” என்று வாய் விட்டுக் கோபமாகச் சொல்லிக்கொண்டு ஓர் அந்தண விதவையம்மாள் தனக்கு இடது பக்கம் கண் தெரிந்த வரையில் பார்வையைச் செலுத்துகிறாள்.{வலப் பக்கத்தில் கிராமம் முடிந்து விடுகிறது).

உள்ளே சென்றவள் மறுபடி வெளியே வந்து சாணி தெளிக்கிறாள். கோமய ஜலம் நிலத்தில் தொப்புத் தொப்பு என்று விழும் ஓசையையும் மீறிக்கொண்டு, பாட்டியம்மை தனக்குத் தானே பொரிந்து தள்ளீக் கொள்ளும் கோபச் சொற்கள் தொப்புத் தொப்பென்று விழுகின்றன.

“கட்டேல போறவன்! இப்படியா ஒரு பால்காரன் வாய்ப்பான்? கெழவி, வாசக்கதவைத் தெறந்து வச்சவ, ஏதோ சித்த்க் கண்ணசந்துட்டேன்னா, நாலு தரம் கையைத் தட்டிக் கூப்பிட்டு எழுப்ப மாட்டான்? என்ன திமிரு? அவனே சர்வ சுதந்திரமா ஆத்துக்குள்ள வந்து அடுக்களை வாசப்படி கிட்ட பாத்திரத்துல பாலை விட்டுட்டுப் போயிருக்கானே! கட்டேல போக! எங்கோயோ போய்ட்டானே அதுக்குள்ளே!”

“எங்கேயும் போகலே பாட்டி! இங்கேதான் இருக்கான்” என்று சொல்லிக் கொண்டே அப்போது பாட்டியம்மாளின் முன் போய் நின்றது——ஸாக்ஷாத் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்!

பாட்டியம்மை ஆடிப் போய்விட்டாள் ஆடி! அவளுக்குக் கையும் வரவில்லை, காலும் வரவில்லை, வாயும் வரவில்லை. வாயடைத்து நின்றாள். “ பெரியவாளா? நிஜமாகவே பெரியவாள்தானா? விடிய விடியத் தன் பொத்தல் குடிசை வாசலிலா? அதோடு என்ன விபரீதம்?’ க’—போனவனாகத் தம்மையே சொல்லிக்கொள்கிறார்! மூளை கெட்ட பாவி, மஹா அபசாரமா ஏதோ பண்ணீப்பிட்டேனா என்ன?”
பதைபதைத்தப் பாட்டிக்கு அபயம் தரும்போதே ஸ்ரீசரணரின் திவ்ய நேத்ரங்களில் ஒரு குறும்புக் குறுகுறுப்பு! ஹிதமாகச் சொல்வார்,: “ பயப்படாதே பாட்டீ ! பால்காரன் கூப்பிட்டுக் கூப்பிட்டுத்தான் பார்த்தான்! நீ நன்னாத் தூங்கிப்பிட்டே! எழுந்தே வரல்லை ஒனக்காக ஒன் மாதிரி வேஷம் போட்டுக்கிண்டு நான்தான் பாலை வாங்கி உள்ளே வெச்சேன்! அவன் ஒண்ணும் தப்புப் பண்ணல்லை. நான்தான் திருட்டுத்தனம் பண்ணீயிருக்கேன்!”

நடந்தது இதுதான். கிராமம் கிராமமாக ஸ்ஞ்சரித்து வந்த பெரியவாள் முதல் நாள் இரவில் மேனாவில் ரிஷிவந்தியம் பக்கம் வந்திருக்கிறார். பல்லக்குத் தூக்கும் போயிக்கள் நெடுநேரம் சுமந்து வந்து விட்டதால், இரவு இரண்டாம் ஜாமமாயிருக்கலாம். அப்போது அவர்களைக் கிராம வெளீ எல்லையிலேயே ஓரமாக ஒரு மரத்தடியில் ‘ஸவாரி” கட்டச் சொல்லி விட்டு (அதாவது மேனாவை இறக்கி வைக்கச் சொல்லிவிட்டு) உறங்கப்போகுமாறு ஸ்ரீசரணர் பணித்தார். தாமும் வழக்கம் போலவே மேனாவுக்குள் முடங்கிக் கொண்டார். பாட்டியம்மாளின் வீட்டுக்கு வலப் புறத்தில் அம் மரத்தடி இருந்தது.

விடிவதற்கு முஹூர்த்த காலம் முன்பு பாட்டியம்மை வாசற்கதவின் பழைய தாழ்ப்பாளைத் திறக்கும் சப்தம் “கிறீச், கிறீச்” கேட்டது. இரவு மூன்று—முன்றரைக்கே துயிலெழுந்து விடும் பெரியவாள்தான் அதை மேனாவிலிருந்தே கேட்டுக்கொண்டது. அம்மையார் வாசலில் வந்து எட்டிப் பார்த்து விட்டுப் பால்காரன் வராததால், தனக்குத் தானே பேசிக்கொள்ளூம் சுபாவப்படி அவனுக்கு அஷ்டோத்தர சத அர்ச்சனை பாடி விட்டு உள்ளே போனாள். அடுத்து வாசற்கதவின் ‘கிரீச்’ எழாததை, அதாவது, பாட்டியம்மை கதவைச் சாத்தவில்லை என்பதைக் கவனம் கொண்டார், எந்தச் சிறிய விஷயத்தையும் கவனிக்கத் தவறாத மேனா மேலவர். வீட்டின் பின்புறத்திலிருந்து, நிலத்தோடு பதிந்து விட்ட உளுத்த கதவைத் திறப்பதன் ‘ மதுர ஸ்வர’ங்களை அடுத்தாற்போல் ஸுப்ரபாத கீதமாக அம் மேலவர் கேட்டுக் கொண்டார். பாட்டியம்மை கொல்லைப்புறம் செல்வதைப் புரிந்து கொண்டார். சில நிமிஷங்கள் ஆகியும் ஸுப்ரபாதம் ‘ரிபீட்’ ஆகாததால் அந்தக் கதவையும் சத்தாமலே பாட்டியம்மாள் வீட்டுக்குள் திரும்பியிருக்கிறாள் என்பதையும் கவனம் கொண்டார்.

பின்னரே பால்காரர் வந்தார், பன்முறை குரல் கொடுத்துப் பார்த்தார்.

‘ பாவம், பாட்டி தூங்கிப் போய் விட்டாள்’ என்று ஸ்ரீசரணர் புரிந்து கொண்டார்.நெஞ்சில் அருள் அரும்பியது. அதில் குறும்பும் கலந்து குதூஹலிக்க எண்ணீனார். அவருடைய சூழ்ச்சித் திட்டத்திற்கு வசதியாக மேனா மூலையில் வெள்ளைச் சால்வை ஒன்றிருந்தது. அதை எடுத்துத் தலையோடு கால் நன்றாக முக்காடிட்டுப் போர்த்திக்கொண்டு மேனாவிலிருந்து வெளீ வந்தார். சற்றுத் தொலைவில் போயிக்கள் நித்ரா தேவியின் அணைப்பிலிருந்து வெளீவராது கிடந்ததும் அவருக்கு வசதியாயிற்று. இருள் மூட்டம் விலகாத அவ் வேளையில் அடி மேல் அடி வைத்துப் பாட்டியம்மை வீட்டுப் புறக்கடை வந்து, குட்டிச் சுவர் ஏறிக் குதித்து—ஆம், திருட்டு ஸம்ஸ்காரத்தில் மிச்சம் மீதி வைக்காமல்தான்—உள்ளே தோட்டப்புறத்தில் இறங்கி, திறந்தே இருந்த சுப்ரபாதக் கதவைத் தாண்டி வீட்டினுள்ளேயே பாதம் பதித்தார்.பின்புற ரேழி வழியாக முற்றத்தண்டை வந்தார். பக்கத்தில் அடுக்களை வாசலில் காலிப் பால் பாத்திரமிருந்தது. அதை எடுத்துக்கொண்டு, கூடத்து மூலையில் இரண்டாம் தூக்கம் போட்டுக் கொண்டிருந்த பாட்டியம்மாளை ‘கப்சிப்’ என்று கடந்து, வஸ்திரத்தை மீண்டும் நன்றாக இழுத்துப் போர்த்திக்கொண்டு வெளி வாசலுக்கு வந்தார். பால் பாத்திரத்தைத் திண்ணையில் வைத்தார்.

பாட்டாளிப் பால்காரருக்கு பால் வாங்குபவரை ஏறிட்டுப் பார்க்க எங்கே நேரமிருந்தது? அந்த இருள் மூட்டத்தில் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஒரு ஏழைப் பாட்டியம்மையாக வேஷமிடுவார் என்று அவர் சொப்பனத்திலேனும் எண்ணீயிருப்பாரா என்ன? கொண்டு வந்திருந்த கைப் பாலைப் பாத்திரத்தில் ஒரே கவிழாக கவிழ்த்து விட்டு நடையைக் கட்டினார்.

போலிப் பாட்டியம்மை அடுக்களை வாசலில் பாலை வைத்து விட்டு மீண்டும் மேனாவுக்கு ஏகி, தமது நகைச்சுவை நாடகத்திற்குப் பாட்டியம்மாள் எப்படி அடுத்த காட்சி அமைக்கப்போகிறாள் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தார். அக்காட்சிதான் பார்த்து விட்டோமே!

கண்ணன் பாலைத் திருடி விட்டுத் திட்டு வாங்கினான். இவரோ, திருட்டுத்தனமாகப் பாலை வாங்கி வைத்துப் பாட்டியம்மைக்குச் சேவை செய்து விட்டு, அந்தக் கண்ணன் கூட வாங்காத ‘க—போகிற’ திட்டை வாங்கிக் கட்டிக் கொண்டு தானே திட்டுக்கு உரிமையாளன் என்று திட்டியவளிடமும் தெரிவித்துக் கொள்கிறார்!

விஷயமறிந்த பாட்டியம்மை விலவிலத்து விட்டாள். எப்பேற்பட்ட ராஜோபசார தேவோபசாரத்துடன் வரவேற்கப்பட வேண்டியவர், எளியவராகத் தன் வீடு முழுவதும் பாதம் பதித்து ,ஐயோ இந்த அவலப் பிண்டத்திற்காக பால் வாங்கி வைத்துப் போயிருக்கிறார்? அந்த தெய்வத்தை என்ன வார்த்தை சொல்லிவிட்டோம்?

மன்னிப்புக் கேட்கக்கூட வராமல் உளறிக் கொட்டி, கண்ணீரைக் கொட்டிக்கொண்டு நிற்கும் பாட்டியிடம் ப்ர்ஸன்ன முகராக ஸ்ரீசரணர்,” நீ சொன்னது திட்டே இல்லே! நான் போறது கட்டேலதானே? கட்டைப்பல்லாக்குல தானே ஊர் சுத்தறேன்? நடந்து போறச்சேயும் பாக்குறடுக் கட்டையிலே தானே போகிறேன்?” என்றார். அவளுடைய வசவுக்கும் மெய்ம்மை கூட்டி, பாஷ்யம் செய்தார், வைதாரையும் வாழவைக்கும் வள்ளற்பிரான்.

source:::periva.proboards.com

Natarajan
Read more: http://periva.proboards.com/thread/4476/#ixzz2V9VE9zyd